முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனரை எதிர்த்து விரைவில் போராட்டம் !

ஷ்யாம் நியூஸ் 
27.05.2020
திருநெல்வேலி  கலை பண்பாட்டுத்துறை  உதவி  இயக்குனரை  எதிர்த்து  விரைவில்  போராட்டம் !


தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர்  தூத்துக்குடியில் செ.ஜெகஜீவன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.     

இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், 2008ல், கலை பண்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டது

இதில், 33 ஆயிரத்து, 575 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும், நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், 2019 செப்., 17ல் அரசாணை வெளியிடப்பட்டது. 

  நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதியான, 1,000 ரூபாய்,2 முறை வழங்கப்பட்டுள்ளது.                                                                         
                                                                                                                                         தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் கலைத்தொழில் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். 
ஆறு மாத காலம்தான் நாட்டுப்புற கலைஞர்க்கு நிகழ்வுகள் கிடைக்கும், இந்த காலம் முடிவடைந்தால் அடுத்த ஆண்டு தான் கலை நிகழ்வுகள் கிடைக்கும் அது வரை அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி வறுமையிலேயே மாய்ந்து விடுவார்கள்? 

ஆகவே அதற்கு நிவாரணமாக பிரதி மாதம் 10000 ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கவேண்டும்  கலை பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்படும் கலைஞர்களுக்கான அரசு அடையாள அட்டை மற்றும் நலவாரியத்தில் உறுப்பினர் இல்லாத கலைஞர்களுக்கும் மற்ற நலவாரியங்களுக்கு வழங்கும் நிவாரண தொகை மற்றும் இலவச அரிசி பருப்பு எண்ணெய் போன்றவற்றை வழங்கவேண்டும்.

திருவிழா காலம் முடிந்து விடுவதால் கலைஞர்களின் கலைநிகழ்வுகள் நடத்த கொரானா காலம் முடிந்ததும் கலைஞர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்த அரசாங்கம் வாய்ப்புகள் வழங்க வேண்டும். 

கும்மியாட்டம்
கோலாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
சேவையாட்டம்
கழியல் ஆட்டம்
வேதாள ஆட்டம்
பகல் வேஷம்
வர்ணக் கோடாங்கி
பூத ஆட்டம்
கணியான் ஆட்டம்
கூத்து
கழைக் கூத்து
தோற்பாவைக் கூத்து
காவடியாட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பின்னல் கோலாட்டம்
தேவராட்டம்
சக்கையாட்டம்
சிம்ம ஆட்டம்
பொடிக்கழி ஆட்டம்
கரடி ஆட்டம்
புலி ஆட்டம்
பேய் ஆட்டம்
வில்லுப் பாட்டு
தெருக்கூத்து
பாவைக் கூத்து,
சிலம்பாட்டம்,
கரக ஆட்டம்,தப்பாட்டம்,நையாண்டி மேளக்கலைஞர்கள்,உறுமி மேளம் போன்ற கலைஞர்கள் வாழ்வாதரம் இழந்து தவித்து வருகின்றனர். அனைவருக்கும் உரிய நிவாரணங்கள் முறையாக வழங்கிட வேண்டும், 
 அதற்காக பண்பாட்டு தலைவர் என்ற முறையில் -திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனர் சுந்தர் போனை எடுப்பதே இல்லை  கலைஞர்கள் பிரச்சினையை கூற முயற்சித்தோம் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்என்றும்  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...