முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீ்ட்டாளர் கைது - ரூ50 லட்சம் மீட்பு

SHYAM NEWS

06.12.2018

தூத்துக்குடி வங்கியில் ரூ.1 கோடி மோசடி: நகை மதிப்பீ்ட்டாளர் கைது - ரூ50 லட்சம் மீட்பு






தூத்துக்குடியில் வங்கியில் ரூ.1 கோடி நகை மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மட்டக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஏராளமானவர்கள் தங்கநகை அடகு வைத்து உள்ளனர். இந்த நகைகள் ஒவ்வொரு 3 மாதத்துக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி கடந்தவாரம் அதிகாரிகள் நகைகளை பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த சுமார் 22 பேரின் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக டிவிஷனல் மேனேஜர் முகம்மது இஸ்மாயில் அளித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோசடி தொடர்பாக நகை மதிப்பீ்ட்டாளர் கீழ ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த சப்பாணிமுத்து மகன் சண்முகசுந்தரம் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் எஸ்பி முரளி ரம்பா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, 1 கோடியே 15ஆயிரம் மோசடி செய்த வழக்கில் சண்முகசுந்தரத்திடம் இருந்து  ரூ50 லட்சத்து 15 ஆயிரத்து ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  மேலும், இந்த மோசடியில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர் என்றார். அவருடன் டவுன் டிஎஸ்பி பிரகாஷ், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் ராஜாமணி, தனிப்பிரிவு மனோஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வழக்கில் துரிதமாக விசாரனை நடத்தி குற்றவாளியை கைது செய்து பணத்தை மீட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா பாராட்டினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...