முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 31.05.2023  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.     சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலை சார்பில், 32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல் என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்தை உருவாக்கி உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மீளவிட்டானில் நடைபெற்றது.     விழாவுக்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் தலைமை வகித்தார். இவர் புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பாலசுப்ரமணியன், சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.      இதில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தி...

தூத்துக்குடி புதுக்கோட்டை பி எஸ் பி பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஷ்யாம் நீயூஸ் 29.05.2023 தூத்துக்குடி புதுக்கோட்டை  பி எஸ் பி பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை TDTA PSP மேல்நிலைப் பள்ளியில் 1999 முதல் 2006 ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.  விழாவில் 17 ஆண்டுக்கு முன் பள்ளியில் படித்த நினைவுகளை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர் தலைமை ஆசிரியர் தேவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் பள்ளி தாளாளர்  நீகர்பிரின்ஸ் கிப்ஸ்சன் முன்னிலை வகித்தார் .நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ்,தங்கராஜ்,பொன்னுதுரை, ஆசிர்ராஜாசிங் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் பிரேமா,டேசி,லூர்துசாமி,ஜான்விக்டர்,மல்லிகா,ரோஸ்லின்,சுமதிபிலிப்,மற்றும் அன்னாள்,செல்வராஜ்,செல்லதாய்,பியூலா,பூரணி,எழிலரசி,பிரதிபா,நிர்மலா,ஆல்வின், ஜெனிபா,மற்றும் பழைய மாணவர்கள் மாணவிகள் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பலர் கலந்து கொண்டனர். பின்னர் தாங்கள் படித்த புதுக்கோட்டை பி எஸ் பி மேல்நிலைப் பள்ளிக்கு நுழைவு வாயில் கட்டுவதற்காக ரூபாய் 50ஆயிரம் நன்கொடை வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அமைச்சர் கீதாஜீவன் கலியாவூர் நீர்தேக்கத்தில் ஆய்வு

ஷ்யாம் நீயூஸ் 25.05.2023  தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அமைச்சர் கீதாஜீவன் கலியாவூர் நீர்தேக்கத்தில் ஆய்வு    தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சீராக குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.      தூத்துக்குடி மாநகராட்சிக்கு தாமிரபரணி ஆற்றில் கலியாவூர் நீரேற்று நிலையத்தில் இருந்து கிடைக்க கூடிய தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. எனவே பரவலாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் வரும் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கருத்துக்களை கேட்டறிந்தார். இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், கலியாவூர் நீரேற்று நிலையத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக கூடுதல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை...

தூத்துக்குடி திமுக அன்பழகன் இல்லவிழா அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்கள்.

 ஷ்யாம் நீயூஸ் 23.05.2023 தூத்துக்குடி திமுக அன்பழகன் இல்லவிழா அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்தினார்கள்    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளரும் என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளருமான அன்பழகன், லெட்சுமி ஆகியோரது புதல்வி மோக்லீனா பூப்புனித நீராட்டுவிழா தூத்துக்குடி லெட்சுமி மஹாலில் நடைபெற்றது.       விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில துணை செயலாளர் பூபதி, துணை மேயர் ஜெனிட்டா, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி,...

இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ பேசினார்.

 ஷ்யாம் நீயூஸ் 21.05.2023 இந்தியாவை வழிநடத்தும் அடுத்த பிரதமரை தமிழகத்திலிருந்து தளபதி அடையாளம் காட்டுவார். மாப்பிள்ளையூரணியில் சண்முகையா எம்.எல்.ஏ  பேசினார்.    தூத்துக்குடி மாநில திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.      தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான மிக்கேல் அருள் ஸ்டாலின் தலைமை வகித்தார். தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.       பின்னர் சண்முகையா எம்.எல்.ஏ பேசுகையில் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்ப...

தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி நீறேற்று நிலயத்தில் நேரில் ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2023 தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி நீறேற்று நிலயத்தில் நேரில் ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி. தூத்துக்குடி நகர் மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மாநகர் பகுதியில் குடிநீர் விநியோகிக்கும் முறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை சரிசெய்யும் வகையில், வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறைகிணறு , நீரேற்று நிலையம் ஆகியவற்றை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள...

மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் . தலைவர் சரவணக்குமார் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2022 மாப்பிள்ளையூரணி ஊராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் சரவணக்குமார் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், கலெக்டர் செந்தில்ராஜ்யிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக தாளமுத்துநகர் மெயின்ரோடு, தாளமுத்துநகர் முதல் சவேரியார்புரம் வரை, சிலுவைபட்டி விலக்கு முதல் டேவிஸ்புரம் வரை, மாதாநகர் முதல் வண்ணாரப்பேட்டை வரை மற்றும் ராஜபாளையம் முதல் சோட்டையன் தோப்பு வரையிலான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த சாலைகளில் சமீபத்தில் நடந்த விபத்துக்களினால் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். பலர்...

தூத்துக்குடி மாநகர மக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2023 தூத்துக்குடி மாநகர மக்கள் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.     தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றிலிருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.      இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கடந்த வருடம் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையிலும் மக்கள் பாதிக்காத வகையில் மாநகர பகுதியில் உள்ள 31 குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டு சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் குடிதண்ணீர் முறைப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தென்கிழக்கு பருவமழை ஆரம்பமாகவுள்ளதால் அதுவரை பொதுமக்கள் அனைவரும் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன்பின்பு மழை காலம் தொடங்கிபின்பு இதுபோன்ற...

அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் வியாபாரிகள் இரண்டு பேரை அடித்து கொன்றது தான் சாதனை இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் குற்றச்சாட்டு

 ஷ்யாம் நீயூஸ் 20.05.2023 அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் வியாபாரிகள் இரண்டு பேரை அடித்து கொன்றது தான் சாதனை இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் குற்றச்சாட்டு      தூத்துக்குடி திமுக மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்; சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம் நெடுங்குளத்தில் நடைபெற்றது.      இரண்டு ஆண்டு சாதனைகளை எடுத்து கூறி நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் பேசுகையில் திராவிட மாடல் ஆட்சி 2021ல் மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோய் கடுமையாக இருந்த காலக்கட்டம் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச முடியாமல் உறவினர் வீட்டுக்கு செல்லமுடியாமல் பரிதவித்த காலத்தில் கொரோனாவால்...

நல வாரியங்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எர்ணாவூர் ஏ.நாராயணிட

ஷ்யாம் நீயூஸ் 20.05.2023  நல வாரியங்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எர்ணாவூர் ஏ.நாராயணிடம் வலியுறுத்தல்      தூத்துக்குடி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் தாமோதரன் தலைமையில் நிர்வாகிகள்,  தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து கோரிக்கை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில், பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால், பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த முடிகிறது. ஆனால் பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களான விலை நிர்ணயம், பனைப்பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல், பனை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, பனைத் தொழிலாளர்களுக்கான புதிய தொழில் நுட்ப பயிற்சிகள், பனைத் தொழிலாளர்களுக்கான இறப்பு நிவாரணத்தை உயர்த்தி வழங்குதல்  போன்ற பணிகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தால் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. பனை ...

அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி ஏமாற்றும் தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியர்கள்

 ஷ்யாம் நீயூஸ் 19.05.2023 அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி ஏமாற்றும் தூத்துக்குடி டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை தவறாக பயன்படுத்தி டாஸ்மாக் அலுவலகத்தில் பணிபுரியும் மகேஷ் என்கிற ஊழியரும் மற்றும் கடைகளில் பணி புரியும் மேற்பார்வையாளர்களும் கூட்டாக இணைந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் லட்சக்கணக்கில் மோசடி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பொது மக்களுக்கு தெரிய வரும் போது அமைச்சர் சொல்லி தான் செய்வதாக தவறான தகவலை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரியவறுகிறது. இதனை டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சர் அலுவலகம் கண்காணித்து களை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மா கீழ்நிலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 141 சில்லறை வணிக மதுபான கடைகள் உள்ளன. ஒரு எலைட் மதுபான கடை உள்ளது சுமார் 700 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இக்கடைகளுக்கு மதுபான பெட்டிகளை அனுப்பும் பணியை செய்பவர் மேற்கண்ட மகேஷ் என்கிற நபர் ஆவார். இவர் விலையுயர்ந்த மதுபான பெட்டிகளை ஒரு பெட்டிக்கு 100 ரூபாய் என்ற விக...

நாடாள வந்த என்னை நாட்டாமையாக ஆக்கி விடாதீர்கள் தூத்துக்குடியில் சீமான் பேச்சு .

 ஷ்யாம் நீயுஸ் 19.05.2023 நாடாள வந்த என்னை நாட்டாமையாக ஆக்கி விடாதீர்கள் தூத்துக்குடியில் சீமான் பேச்சு . நான் நாடு ஆளுவதற்காக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் நாம் தமிழர் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் போடும் உட்கட்சி சண்டைக்கு நாட்டாமை பண்ணும்  அளவுக்கு என்னை ஆக்கி விடாதீர்கள் என்று தூத்துக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசினார். நாம் தமிழர் இன எழுச்சி மாநாடு நேற்று தூத்துக்குடி எட்டயபுரம் சாலை சாமி பல்க் அருகில் நடைபெற்றது மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் விடுதலைப் புலிகள் மீது உள்ள தடைகளை நீக்க வேண்டும் கச்சத்தீவை இந்திய அரசு மீட்டு தர வேண்டும் இலங்கையால் தமிழர்கள் பகுதியில் புத்தர் கோயில்களை சிங்கள அரசு கட்டி வருகிறது அவற்றை தடுக்க வேண்டும் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு ஏன் இலங்கை தமிழ் இன மக்களுக்கு குடியுரிமையை கொடுக்க மறுக்கிறது. இனத்தின் விடுதலை ஒன்றுதான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்றும், கொழுப்பு எடுத்து விஷ சாராயம் குடித்து இறந்தவருக்கு அரச...

பிஜேபிக்கு அடிமையாக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி அதிமுக தான் திமுக தெருமுனை பிரச்சாரத்தில் ராமஜெயம் கடும் தாக்கு

 ஷ்யாம் நீயூஸ் 19.05.2023 பிஜேபிக்கு அடிமையாக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு நன்மை செய்யாத கட்சி அதிமுக தான் திமுக தெருமுனை பிரச்சாரத்தில் ராமஜெயம் கடும் தாக்கு   தூத்துக்குடி மாநில இளைஞரணி  செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; அறிவிப்பின்படியும், தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படியும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் தெற்கு மாவட்டம் கருங்குளம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார் குளத்தில் நடைபெற்றது.      இரண்டு ஆண்டு சாதனைகளை குறித்து தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் பேசுகையில்  தனிப்பெரும்பான்மையுடன் திராவிட மாடல் ஆட்சி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்று திமுக ஆட்சி செய்து வருகிறது. 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் பிஜேபிக்கு அடிமையாக இருந்து தமிழ்நாட்டை கடனில் தத்தளிக்க விட்டு செய்தது. அந்த நிதி பற்றாக்குறையையும் ஓரளவு சரிசெய்து முதலமைச்சர் கொடுத்த வாக்குற...

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி 6 தொகுதிகளுக்கும் கனிமொழி எம்.பி மக்கள் பணியாற்றுகிறார்.

ஷ்யாம் நீயூஸ் 16.05.2023  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி 6 தொகுதிகளுக்கும் கனிமொழி எம்.பி மக்கள் பணியாற்றுகிறார். தூத்துக்குடி  திமுகவினர்  தெரிவித்தனர் தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறவேண்டும். என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கிணங்க முதல்கட்டமாக நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்டமாக மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுதுறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் திராவிடமாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். என்று உத்தரவிட்டதையடுத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின் படி      தூத்துக்குடி அன்னை இந்திராநகர் பகுதி இளைஞர் அணி சார்பில் ஹவுசிங்போர்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். 3வது வார்டு வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், அவைத்தலைவர் ராஜசேகர், துணைச்செயலாளர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகி...

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 07.05.2023 கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் உப்பார் ஓடை உபரி நீர் வழிந்தோடி ரெகுலேட்டர் அருகே தூர் வாருதல் சூழவியல் பூங்காவிற்கு மண் வழங்குதல் ரூ 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழாவிற்கு கலெக்டர் செந்தில் ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கி வைத்;தார்.    மாவட்டத்தில் பிரதான குளமாக கோரம்பள்ளம் குளம் உள்ளது.  நெல்லை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைசியில் இக்குளம் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை ஒட்டி 1300 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்து காணப்படும் கோரம்பள்ளம் குளம் 1888ம் வருடம் ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது ஆகும். இந்த குளத்திற்கு வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாகவும்,  உபரி நீரை வெளியேற்றும் விதமாகவும் 24 கண் மதகு கொண்ட பிரமாண்ட கண்மாய் ...

தூத்துக்குடி வி ஏ ஓ கள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பணி செய்வதில்லை கோட்டாட்சியர் வேதனை .

ஷ்யாம் நீயூஸ் 06.05.2023 தூத்துக்குடி வி ஏ ஓ கள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பணி செய்வதில்லை கோட்டாட்சியர் வேதனை . தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட  கோவில்பட்டி, எட்டையாபுரம் ,விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்  இவர்களுக்கு கூடுதல் பணியாக அந்தந்த கிராமங்களில் வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஆதார் அட்டை வங்கி கணக்கு ஆகியற்றுடன் கணினியில் ஏற்றுவதற்கு வாய்மொழி உத்தரவாக ஆணை இடப்பட்டதாக தெரிகிறது .ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியினை சரிவர செய்யாமல் விவசாயிகளின் விவரங்களை கணினி ஏற்றுவதில் மெத்தனப்போக்கு  காட்டி வருவதாக கோட்டாட்சியர் மகாலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார் எட்டயபுரம் தாலுகாவில் 49 ஆயிரத்து 500 விவசாயிகள் விவரங்களை கணினியில் பதிவு செய்யாமலும், ஓட்டப்பிடாரத்தில் 86 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்கள் , விளாத்திகுளத்தில் ஒரு லட்சத்து 19000 க்கும் அதிகமான விவசாயிகளின் விவரங்களையும்  கோவில்பட்ட...

திருமந்திர நகர் சிவன் கோயில் தேரோட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் திருத்தேர் வடம்படித்து தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு

ஷ்யாம் நீயூஸ் 03.05.20223 திருமந்திர நகர் சிவன் கோயில் தேரோட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் திருத்தேர் வடம் படித்து தொடங்கி வைத்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு திருமந்திர நகர் என்று அழைக்கப்படும்  தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோயில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வாகனங்களில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்(03.05.2023) இன்று நடைபெற்றது. சிறிய தேரில் ஸ்ரீ மகா கணபதி முருகப்பெருமான் வீற்றிருக்க பெரிய தேரில் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் வீற்றிருக்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி,...
 கலை நிகழ்ச்சிக்காக கலைந்து போன மேகங்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உருக்கம் தூத்துக்குடியில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த 21ஆம் தேதி தொடங்கி மே 1 உரை நடைபெற்றது அதனுடன் 28-ம் தேதி தொடங்கி ஒன்று வரை நெய்தல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது புத்தகத் திருவிழா மற்றும் தூத்துக்குடி நெய்தல் கலை நிகழ்ச்சி நேற்று கடைசி நாளாக நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை நிகழ்ச்சி முழு வெற்றி அடைந்ததற்கு முழுமுதல் காரணம் மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் துணை ஆட்சியர் தூத்துக்குடி மேயர் ஜெகன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகத் தலைவர் முழு ஒத்துழைப்புடன் முழு வெற்றி அடைந்துள்ளது என்று பேசினார் மற்றும் நெய்தல் கலை நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடு செய்திருந்த ஸ்பிக் நிறுவன மேலாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பேசிய தூத்துக்குடி மேயர் ஜெகன் நிகழ்ச்சி வெற்றி பெற செய்த அனைவருக்கும நன்றி தெரிவித்தார். முன்னதாக பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உ...

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஷ்யாம் நீயூஸ் 01.05.2023 திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி ஏரல் காந்தி சிலை முன்பு அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்ட தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில்  கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . தூத்துக்குடி ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் இடிந்து ஒன்றரை ஆண்டுகள் காலம் ஆகிய நிலையில் புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும்,ஏரல் பகுதியில் பல ஆண்டுகளாகஇயங்கி வந்த பத்திரபதிவு அலுவலகத்தை வேறுஇடத்திற்கு மாற்றம் செய்யாமல் ஏரல் தாலுகா அலுவலக வளாகத்திலேயே புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும் மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள வாரச்சந்தையை ஏரல் ஆற்று மேம்பாலம் அருகே உள்ள  இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால்  உண்ணாவிரதம்,  உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்று தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தெரிவித்தார் இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டு  பள்ளி கட்டிடத்தை உடனடியாக கட்ட...

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் தொழிற்சங்கம் சார்பாக குடியேற்றினர்

 ஷ்யாம் நீயூஸ் 01.05.2023 மே தினத்தை முன்னிட்டு  டாஸ்மாக் ஏ ஐ டி யூ சி பணியாளர் தொழிற்சங்கம் சார்பாக குடியேற்றினர். மே1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் வளாகத்தின் முன் ஏ ஐ டி யூ சி டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க கொடியை ஏற்றி  முழக்கமிட்டனர் பின்  இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஏ ஐ டி யூ சி  டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தொழில் சங்க நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் சார்பில் பட்டு இசக்கி, பிரதீசன்,A. முருகன் ராஜபாண்டி, முருகன் சுப்புராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.