தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்! ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி!
ஷ்யாம் நியூஸ்
25.03.2021
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!
ஜெயலலிதா மர்ம சாவில் உண்மை கண்டுபிடிக்க படும் என உறுதி!
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கீதாஜீவனை ஆதரித்து, மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். விவிடி மெயின் ரோடு, டூவிபுரம் 5-வதுதெரு – அண்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் வாக்குசேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், "கொளுத்தும் வெயிலில் நிற்கும் நீங்கள் உங்கள் சின்னம் உதயசூரியன் என்று முடிவு செய்து விட்டீர்கள். இந்த முறை திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த தேர்தலில் 22ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் கீதாஜீவனை வெற்றி பெறச் செய்தீர்கள்.
இந்த முறை ஒரு லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை வெற்றிபெறச் செய்து இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக ஆக்கினீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே தூங்கிக் கொண்டிருந்தபோது 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். சொந்த பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் வரிசையில காத்திருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இந்த தேர்தலில் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் செல்லாக் காசாக்க வேண்டும்.
மதுரையில் 75 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமணை கட்டியதாக சொன்னார்கள் நான் அங்கு சென்று பார்த்தபோது இந்த செங்கள் மட்டும்தான் இருந்தது அதை கையோடு எடுத்துட்டு வந்துவிட்டேன் உங்களிடம் காண்பிக்க என்றார். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளது. அதை கண்டுபிடித்து அதற்க்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். மற்றும் நீட் தேர்வால் நாம் பல பிள்ளைகளை இழந்துவிட்டோம் திமுக ஆட்சி வந்த உடன் நீட் தேர்வு தடை செய்யப்படும் என்றார் .
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் 13பேரை சுட்டு கொன்றுவிட்டு, டிவி பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்ற முதல்வருக்கு மே 2ம் தேதி தன் பதவி போனதையும் டிவி பார்த்தே தெரிந்துகொள்ள செய்யுங்கள். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என போராடியவர் 71பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது அதில் ஒரு போலிஸ் மீது கூட வழக்கு பதிய வில்லை.திமுக ஆட்சி வந்தவுடன் 71 பேர் மீதும் உள்ள வழக்குகள் திரும்பபெறப்படும் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் தூண்டில் பாலம், விவிடி சிக்னல் பகுதியில் மேம்பாலம் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும். நான் பிரசாரம் செய்யு்ம்போது என்மீது போலீசார் வழக்கு போடுகிறார்கள். நான் கலைஞரின் பேரன்,எந்த வழக்கிற்கும் அஞ்சமாட்டேன் என்றார். பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனகலந்து கொண்டனடனர்