ஷ்யாம் நியூஸ்
12.03.2021
டி டி வி தினகரனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா சந்திப்பு!
தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா மரியாதை நிமித்தமாக நிர்வாகிகளுடன் சந்தித்து அதிமுக ஆட்சியில் சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமைகளையும் முறையான இட ஓதுக்கீடும் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. அதற்கு தாங்கள் முழு ஆதரவு கொடுத்து மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.
நிகழ்ச்சியின் போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தென் மண்டல பொறுப்பாளரும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான கயத்தாறு ஒன்றிய குழு தலைவர் மாணிக்க ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், தென்மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் பூல்பாண்டியன், சென்னை பொறுப்பாளர்கள் நாகராஜ், மலையரசன், அகில இந்திய மறவர் அறக்கட்டளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகேசன், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகி சேகர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், கண்ணன், உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து எங்கள் சமுதாய மக்களை புறக்கணித்து வருகின்றனர். அவர்களுக்குரிய உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றியுள்ள இட ஓதுக்கீட்டினால் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கண்டித்துதான் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து முழுமையான தகவல்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் வீதமாக வரும் ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி கோவில்பட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிட உள்ளோம் என்றார்.