முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி டி வி தினகரனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா சந்திப்பு!

 ஷ்யாம் நியூஸ்

12.03.2021

டி டி வி தினகரனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா சந்திப்பு! 

தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுலகத்தில்  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா மரியாதை நிமித்தமாக நிர்வாகிகளுடன் சந்தித்து அதிமுக ஆட்சியில் சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உரிமைகளையும் முறையான இட ஓதுக்கீடும் கிடைக்கப்பெறாத நிலை உள்ளது. அதற்கு தாங்கள் முழு ஆதரவு கொடுத்து மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.


நிகழ்ச்சியின் போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தென் மண்டல பொறுப்பாளரும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான கயத்தாறு ஒன்றிய குழு தலைவர் மாணிக்க ராஜா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜசேகர், தென்மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் பூல்பாண்டியன், சென்னை பொறுப்பாளர்கள் நாகராஜ், மலையரசன், அகில இந்திய மறவர் அறக்கட்டளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முருகேசன், அனைத்து மறவர் நல கூட்டமைப்பு நிர்வாகி சேகர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், கண்ணன், உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து எங்கள் சமுதாய மக்களை புறக்கணித்து வருகின்றனர். அவர்களுக்குரிய உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. சமீபத்தில் முதலமைச்சர் பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றியுள்ள இட ஓதுக்கீட்டினால் கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை கண்டித்துதான் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது குறித்து முழுமையான தகவல்களை மக்களிடம் எடுத்துச்செல்லும் வீதமாக வரும் ஞாயிற்றுக்கிழமை 14ம் தேதி கோவில்பட்டியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிட உள்ளோம் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...