முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி !

ஷ்யாம் நியூஸ்
24.09.2019

தூத்துக்குடியில்  மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி !

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிட தூத்துக்குடி ஆட்சி தலைவர் உத்தரவிட்டு இருந்தார் .அதன் படி தண்ணீர் திறந்து விடப்பட்டது .கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு வரும் வழியில் தாமிர பரணி ஆறு செயற்பொறியாளர் ரகுநாதன் அங்கு மண் அள்ளும் ஒப்பந்ததாரர்க்கு வசதியாக நீர் வரும் கால்வாயை அடைத்து விட்டார் .

.கால்வாயில் தண்ணீர் வந்தால் மண் அள்ளும் லாரிகள் செல்லமுடியாது .இதனால் கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு (ரிசெர்வ் ) தண்ணீர் வராமல் காய்ந்து கிடக்கிறது .இந்த குளத்து குடிநீரை  நம்பி  தூத்துக்குடி சுற்றுவட்டாரதில்  ஆட்சியர் அலுவலகம் உட்பட பல கிராமங்கள் உள்ளன .மற்றும் செயற்பொறியாளர் ரகுநாதன்  13 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் .ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த குளத்திற்கு பல கோடிகளை ஒதுக்கி விவசாய நலன்களை மேன்படுத்த உதவி வருகிறது .ஆனால் இதுவரை ஒரு உருப்படியான மடைகள் இல்லை .மற்றும்  சமீபத்தில் கட்டிய வெள்ள தடுப்பு சுவர் சிமெண்ட் கலவை இல்லாமல் வானம் தோண்டிய மண்ணை வைத்து கட்டி 30 லட்சம் ஏப்பம் விட்டு உள்ளார்கள் நவீன பொறியாளர்கள் .குடிநீர் குளத்திற்கு வரும் நீரை அடைத்து அதில் வரும் மீனை பிடித்து வாய்க்கு ருசியாக மண் ஒப்பந்தத்தருடன் சாப்பிடும் பொறியாளருக்கு தெரியுமா குடம் 10 ரூபாய்க்கு வாங்குவது .ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர் மீது நடவடிக்கை எடுத்து அடைத்து வைய்த்து வீணாக   கடலில் கலக்கும்  தண்ணீரை  கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு திறந்துவிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என கோரம்பள்ளம் சுற்று வட்டார பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...