பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!
ஷயாம்நீயுஸ்
03.09.2019
பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க தலைவர் மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார்.
முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார்.
ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகளும் பிற்படுத்தபட்டோரும் உள்ளனர். தேசிய அளவிலும் பெரியார் மற்றும் கன்ஷிராம் போன்ற நல்ல தலைவர்கள் தலித்துகளுக்கு இல்லை. இருக்கின்ற தலித் தலைவர்கள் பெரிய கட்சிகளின் ஏஜன்ட் ஆக செயல்பட்டு ஒரு சீட்டுக்காகவும் பணத்திற்காகவும் யாசகம் செய்கின்றனர்.
மாயாவதி சிபிஐ.,க்கு பயந்து பாஜகவிடம் சரணடைந்து விட்டார். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அதிமுக அரசு பாஜகவிடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பகுஜன் பாதுகாப்பது இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் லூயிஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாென்னுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
03.09.2019
பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க தலைவர் மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார்.
முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார்.
ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகளும் பிற்படுத்தபட்டோரும் உள்ளனர். தேசிய அளவிலும் பெரியார் மற்றும் கன்ஷிராம் போன்ற நல்ல தலைவர்கள் தலித்துகளுக்கு இல்லை. இருக்கின்ற தலித் தலைவர்கள் பெரிய கட்சிகளின் ஏஜன்ட் ஆக செயல்பட்டு ஒரு சீட்டுக்காகவும் பணத்திற்காகவும் யாசகம் செய்கின்றனர்.
மாயாவதி சிபிஐ.,க்கு பயந்து பாஜகவிடம் சரணடைந்து விட்டார். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அதிமுக அரசு பாஜகவிடம் சரணடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பகுஜன் பாதுகாப்பது இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் லூயிஸ், இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாென்னுச்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.