ஷயாம்நீயுஸ்
24.04.2019
திருச்சி கோமதியின் திறமைக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெயிடும் வாழ்த்து செய்தி .
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த சகோதரி கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் .என்பது மகிழ்ச்சி அளிக்கிறது
2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
கோமதியின் தந்தை மாரிமுத்து, 2016 ஆம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில் சகோதரி கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். 2016 ஆம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, மருத்துவம் பெற்றார்.
இத்தகைய சோதனைகள் அனைத்தையும்,தாங்கி கொண்டு சாதணை படைக்க முடியும் என்று தொடர் முயற்சியில் சகோதரி கோமதி இன்று சாதனை படைத்து இருக்கின்றார். இந்த சாதணை மகளிருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப்பெற்று கொடுத்த சகோதரி கோமதிக்கு தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் மெனவும் சகோதரி கோமதி அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
24.04.2019
திருச்சி கோமதியின் திறமைக்கு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் பாராட்டு!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெயிடும் வாழ்த்து செய்தி .
கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த சகோதரி கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார் .என்பது மகிழ்ச்சி அளிக்கிறது
2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
கோமதியின் தந்தை மாரிமுத்து, 2016 ஆம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில் சகோதரி கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். 2016 ஆம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, மருத்துவம் பெற்றார்.
இத்தகைய சோதனைகள் அனைத்தையும்,தாங்கி கொண்டு சாதணை படைக்க முடியும் என்று தொடர் முயற்சியில் சகோதரி கோமதி இன்று சாதனை படைத்து இருக்கின்றார். இந்த சாதணை மகளிருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப்பெற்று கொடுத்த சகோதரி கோமதிக்கு தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் மெனவும் சகோதரி கோமதி அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .