முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி!49%கடந்த4ஆண்டில் வாங்கபட்டுள்ளது!


ஷ்யாம் நியூஸ் 

ஷயாம்நீயுஸ் 

03.04.2019

இந்தியாவின் கடன் 82 லட்சம் கோடி ! | நான்கரை ஆண்டில் 49 % உயர்வு!

இந்தியாவின் முந்தைய கடன் சுமை குறைவதற்கு எதிர்மாறாக ஆண்டுதோறும் கடன் தொகை அதிகரிப்பதே நிகழ்கிறது. எந்தவொரு திட்டங்களுக்கும் கடனை நம்பியே ஆட்சியும் நடைபெறுகிறது. 2019 வரையில் இந்தியா கொண்டிருக்கும் கடன் சுமையானது 82 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்ற தகவல் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
மத்திய அரசின் தரவு :
மத்திய நிதி அமைச்சகத்தின் அரசின் கடன் விவரம் பற்றிய தரவுகளில் செப்டம்பர் 2018 காலிறுதி வரையிலான ஒட்டுமொத்த கடன் 82,03,253 கோடியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நிதியமைச்சகத்தின் கடன் தரவுகள் விவரங்கள் கொண்டு கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பிருந்த தரவுகளுடன் ஒப்பிடுகையில், 2014-ல் 54,90,763  கோடியாக இருந்த நாட்டின் கடன் 2018 செப்டம்பர் வரையில் 82,03,253 கோடியாக வந்து நிற்கிறது. இந்தியாவின் கடன் சுமை 49% உயர்ந்து இருக்கிறது என்கிறார்கள்.
நாட்டின் ஒட்டுமொத்த கடன் அதிகரிக்க பொதுக் கடன் அதிகரிப்பே காரணமாகி இருந்துள்ளது. நாட்டின் பொதுக் கடன் 51.7% உயர்ந்துள்ளது. 2014-ல் 48 லட்சம் கோடியாக இருந்த பொதுக் கடன் 2018 செப்டம்பர் வரையில் 73,22,311.03 கோடியாக உயர்ந்து இருக்கிறது.
தற்போதைய நிலையில் சந்தை கடனும் 47.5 சதவீதம் அதிகரித்து 52,65,284 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தங்க பத்திரக் கடன் 2014 ஜூன் வரையில் ஏதுமில்லாமல் இருந்த நிலையில் தங்க நாணயம் உள்ளிட்ட திட்டங்களால் 2018 செப்டம்பரில் தங்க பத்திரம் மீது ரூ.9089 கோடியாக கடன் உள்ளது.
நாட்டின் கடன் உயர்விற்கு நிதிப்பற்றாக்குறையும் சிறிய காரணம் என்கிறார்கள். கடந்த வருடம் முதல் எட்டு மாதங்களுக்கான நிதிப்பற்றாக்குறை ரூ.7.17 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், அந்த ஆண்டு முழுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட ரூ.6.24 லட்சம் கோடியை விட அதிகரித்து சென்றுள்ளது.
நாட்டின் கடன் சுமை 82 லட்சம் கோடி குறித்த தரவுகள் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் டிசம்பர் 11 -ம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு உலக வங்கியுடன் இருந்து கூட கடன் வாங்குவதில்லை என்ற தவறான தகவலும் கூட பகிரப்பட்டன. நாட்டின் மக்களுக்கான திட்டங்களுக்கு கடன் பெறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...