22.01.2019
தூத்துக்குடி
தூத்துக்குடி நீதிமற்ற வளாகத்தில்திடீர் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் காலாங்கரை கிராமத்தில் உள்ள கோவில்பூஜை செய்வது சம்மந்தமாக இதுவரை பூஜை செய்து வந்த ஓய்வு ரெஜித்ரார் சொக்கலிங்கம் குடும்பத்துக்கும் கோரம்பள்ளத்தில் குடியிருக்கும் வக்கீல் செந்திலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் பூஜையை யார் செய்வது என்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது .மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார் தரப்பினருக்கும் சொக்கலிங்கம் தரப்பினருக்கும் மற்றும் அதே ஊரை சார்ந்த இருவரின் வழக்கும் ஒரே நேரத்தில் இன்று (22.01.2019 )விசாரணைக்கு வந்தது .மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் அவரின் குற்றவழக்கில் இருந்து தப்பிப்பதற்காக கிராமத்தில் இருந்து 100 கும் மேற்பட்டவர்களை சமாதானம் பேச தனி வேனில் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி திருமதி எஸ் .தமிழ் செல்வி பி .ஏ. எல். எல். எம் வழக்கை வருகிற ஏப்ரல் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.