முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“    தம்பி ஆர்பிஐ, காசு கொடு, தேர்தல் வருது” ரிசர்வ் வங்கியை நச்சரிக்கும் மத்திய அரசு..?

முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமாவுக்கு இந்த காசு கேட்டு தொந்தரவு செய்ததும் ஒரு காரணம் என கிட்ட தட்ட உறுதி ஆகிவிட்டது. யார் என்ன சொன்னாலும் சரி, யார் எப்படி ராஜினாமா செய்து கொண்டாலும் சரி எனக்கு காசு வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது மத்திய அரசு. ஆனால் புதிய ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸோ மத்திய அரசுக்கு ஈவுத் தொகை தருவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பசப்பலாகச் சொல்கிறார்.
நிதிப் பற்றாக்குறை
மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வாய் எதிர் பார்த்த அளவுக்கு வரவில்லை. குறிப்பாக சரக்கு மற்றும் சேவை வரியில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் குறைவு. இந்த லட்சனத்தில் தான் ஏகப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றி அமைத்தது குறைத்தது எல்லாம். அதே போல் மத்திய அரசின் கைவசம் இருக்கும் சொத்துக்களை எதிர் பார்த்த விலைக்கு விற்க முடியாததால் அங்கும் வருமானப் பற்றாக்குறை.
தேர்தல்
இந்த இரண்டையும் சமாளிக்க இப்போது மத்திய அரசுக்கு பணம் தேவை. இந்த பணத்தை கடனாக வாங்கினால் தேர்தல் நேரத்தில் இதை சொல்லியே காங்கிரஸ் காலி செய்து விடும். அதோடு மக்களுகு சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள் எல்லாமே இப்போது தான் முழு வீச்சில் செயல்படுகிறது. எனவே மக்களை தக்க வைத்துக் கொள்ள புதிய வாக்களர்களைக் கவர வருமானத்தை அதிகப்படுத்தியே ஆக வேண்டும்.
உதாரணம்
சமீபத்தில் துருக்கியின் ஆளும் அரசாங்கம் தன் மத்திய வங்கியான Central Bank of the Republic of Turkey இடமிருந்து ஒரு கணிசமான தொகையை பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாங்கியது. அதை வைத்து தேர்தலையும் சிறப்பாக எதிர் கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதனால் எர்டோகன் மீண்டும் அதிபராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இதே சூத்திரத்தை இந்தியாவிலும் நிகழ்த்த மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.
ஆர்பிஐ நடப்பு
ஒவ்வொரு ஆண்டு ஆர்பிஐ தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ரிசர்வ்களாக வைத்துக் கொண்டு மற்ற தொகையினை அப்படியே அரசுக்கு ஈவுத் தொகையாக கொடுத்து விடும். ஆர்பிஐக்கான நிதி ஆண்டு ஜூலை முதல் ஜூன் வரையான காலத்தைத் தான் நிதி ஆண்டாக கொண்டிருக்கிறது. எனவே ஜூன் மாதம் தன் கணக்கு வழக்குகளை முடித்த பின் தான் அரசுக்கு ஈவுத் தொகை வழங்கப்படும். கடந்த ஜூலை 2018-ல் சுமார் 10,000 கோடி ரூபாயை அரசுக்கு ஈவுத் தொகையாகக் கொடுத்தது ஆர்பிஐ. இப்போது அரசு சுமார் 40,000 கோடி ரூபாயை ஆர்பிஐ-யிடமிருந்து ஈவுத் தொகையாக எதிர்பார்க்கிறதாம்.
அரசு நச்சரிப்பு
ஆர்பிஐ அரசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனடியாக முன் கூட்டிய ஈவுத் தொகையாக கொடுக்க வலியுறுத்தி வருகிறதாம். அப்படிப் பணம் கொடுத்தால் மத்திய அரசு தான் சொன்ன படியே நிதிப் பற்றாக்குறையை மொத்த ஜிடிபியில் 3.3 சதவிகிதமாகவே காட்ட முடியும். அப்படி இல்லை என்றால் நிதிப் பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 3.5% ஆக தேர்தல் நேரத்தில் காட்ட வேண்டி இருக்கும் என பயப்படுகிறது பாஜக அரசு.
முன்னாள் துணை ஆளுநர்
"ஆர்பிஐக்கு கொஞ்சம் கூடுதலாக பணம் இருப்பது நல்லது தான் அப்போது தான் அதன் தன்னாட்சி உறுதி செய்யப்படும். அதோடு ஒரு பிரச்னை என்றாலும் உடனடியான நிதி நிலையை சரி செய்து கொள்ள முடியும் அதற்காக குஷன் போல இந்த கூடுதல் பணம் ஆர்பிஐ-யிடம் இருக்க வேண்டும். ஆர்பிஐ-ன் ரிசர்வ்களாக இருப்பது எல்லாமே வெளிநாட்டு பணத்துக்கு இணையான மதிப்புகள் என்பதால் எப்போது வேண்டுமானாலும் ரிசர்வுகளின் மதிப்புகள் குறையலாம். அப்படிக் குறையும் போது ஆர்பிஐ-இடம் கூடுதலாக பணம் இல்லை என்றால் மொத்த நாட்டின் பொருளாதாரமும் ஸ்தம்பித்து விடும் என முன்னாள் ஆர்பிஐ துணை ஆளுநர் ஆர். காந்தி எச்சரித்திருக்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...