முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது!

ஷியாம் நியூஸ் 30.11.2018 தூத்துக்குடியில் லஞ்ச வழக்கில் அதிகாரி கைது! தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சாயர்புரத்தில் அநேக கல்லூரிகளும் பள்ளிகளும் இயங்கி வருகிறது. இவைகளுக்கு ஆண்டுதோறும் சுகாதாரச் சான்றிதழ் தேவைப்படுகிறது.அனைத்து நிறுவனங்களிலும் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சாயர்புரம் Dr.G.U.போப் கல்வியியல் கல்லூரியில் அங்கீகாரம் தொடர்பாக சுகாதார சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த சான்றிதழ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆழ்வாரப்பன் அவர்களால் வழங்கப்பட வேண்டும் .அவர் சான்றிதழை வழங்குவதற்கு ₹65000 லஞ்சமாக பேரம் பேசி,இறுதியில் ₹25000 க்கு சான்றிதழ் தருவதாக, கல்லூரியில் வேலை செய்யும் திரு.I.ஜெயக்குமார் அவர்களிடம் உறுதியளித்தார். கல்லூரியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதால் திரு.ஜெயக்குமார் அவர்கள் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார் .இதனால் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஹெக்டேர் அவர்...

காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !

SHYAM NEWS 29.11.2018 காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்  : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்  வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது காவிரியின் குறுக்கே தடுப்பணை கூட புதிதாக கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதை மீறும் விதமாக கர்நாடக அரசு அணை ஒன்றையும், நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது  காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி காவிரி தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசும் மத்திய அரசின் இத்தகை செயல்  தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும். கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.  என்று காய...

ஸ்டெர்லைடின் திங்கள் சந்தை விளையாட்டு!

ஸ்டெர்லைடின் திங்கள் சந்தை விளையாட்டு! ஷியாம் நியூஸ் தூத்துக்குடி 27.11.2018 திங்கள் கிழமை ஆனால் போதும் வறுமையில் வாடும் மக்களுக்கு பண ஆசை காட்டி பணம் தருகிறோம் மனு கொடுக்க வாங்க என அறியாத கிராம மக்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் என மணு கொடுக்க ஆட்களை ஏஜன்சி  வைத்து அழைத்து வருகிறது ஆலை நிர்வாகம்.எதற்க்கு வந்தோம் எங்கிருந்து வந்தோம் என்றுகூட சொல்ல தெறியாமல் மணு  கொடுக்க வரும் மக்கள்.  ஆலையை தொடர்ந்து எதிர்த்து வந்த பெண் ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர் ஒருவரின் படத்தை எடுத்து அதை பெரிய அளவில் விளம்பர படுத்தி இனி பொதுவாழ்வில் பெண்கள் போராடினால் இது தான் கதி என எச்சரித்து உள்ளது ஆலையின் பணபலம்.அதர்க்கு  பக்க பலமாக இருந்துள்ளது ஜ நா தின் சில கடைசி தூண்கள். யாரை எதனால் அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலை (பணம் தங்கம் மற்றும் பல)இருப்பினும் அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழிக்கு ஏற்ப எல்லா அஸ்திரத்தையும் ஏவி பார்க்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம்.ஆனாலும் அஸ்திரம் எல்லாம் புஸ்வானமாகி கிழே விழுகிறது. உலக...

இருட்டு நேரத்தில் முரட்டு வேலை !

ஷியாம் நியூஸ் 22.11.2018 தூத்துக்குடி மைய பகுதில் பாளை ரோட்டு ஓரமாக உள்ளது எம் ஜி ஆர் பூங்கா.இந்த பூங்காவில் காலை தொடங்கி இரவு வரை பொதுமக்கள் நடை பயிற்சி செய்து வருகிறார்கள். தற்பொழுது பூங்கா மேம்படத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பூங்காவை சுற்றி கான்கிரீட் சுவர் எழுப்பபட்டு வருகிறது. இந்த கான்கிரீட் சுவர் முறையாக தண்ணீர் ஊற்றி நனைக்காமல் கான்கிரீட் போட்ட மறுநாளே மண்ணால் மூடிவிடுகின்றனர் என்றும்.  இதனால் சுவர்கள் நீண்ட நாள் உறுதி தன்மையுடன் இருக்காது மற்றும் இங்கு கான்கிரீட்  கலவை செய்யும் இடத்தில் அரசு பொறியாளர்கள் யாரும் இருப்பது இல்லை மற்றும் இரவு 9  மணிக்கு மேல் இருட்டில் செல்போன் வெளிச்சத்தில் சித்தால்களை கொண்டு தரைதளத்திற்க்கு மேல் காளம் கான்கிரீட் நிரப்பி வருகின்றனர். இரவு 9மணிக்கு நடக்கும் வேலைக்கு அரசு பொறியாளர்கள் கண்காணிப்பாளர் யாரும் இல்லை இரவு நேரத்தில் முரட்டுதனமான வேலை செய்கின்றனர் என்றும் அரசு பணத்தை கண்காணிக்க ஆள் இல்லாமல் இப்படி வேலை நடந்தால் இந்த கட்டுமானம் விரைவில் விழுந்துவிடும் ஆகவே மாநகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்கவே...
சிபிஐ இயக்குனரின் வழக்கில் பரபரப்பு.. அறிக்கை விவரங்கள் கசிந்ததால் விசாரணை ஒத்திவைப்பு! டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. நேற்று சிபிஐ இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனு குறித்த விவரங்கள் ஊடகங்களில் கசிந்த காரணத்தால் விசாரணை உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 12ம் தேதி சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா குறித்து விஜிலன்ஸ் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த விசாரணை அறிக்கை மீதான பதில் மனுவை நேற்று சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தாக்கல் செய்தார். முதலில் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா நேற்று இந்த மனுவை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து பதில் மனுவை நேற்று மாலை அவர் தாக்கல் செய்தார். என்ன பிரச்சனை குஜராத்தை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷி பண மோசடி மற்றும் வரி மோசடி செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார். இவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.குரேஷியின் வழக்கில் தொடர்புடைய நபர்...

நம்பகமான தகவல் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால்

SHYAM NEWS   19 நவம்பர் 2018 நம்பகமான தகவல் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் #BeyondFakeNews 19 நவம்பர் 2018 படத்தின் காப்புரிமை GETTY IMAGES Image caption டோனி ஹால் மிகவும் பிளவுபட்டதாக உள்ள இந்த உலகத்தில் நம்பகமான தகவல்கள் இல்லாமல் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்க முடியாது என்று பிபிசி தலைமை இயக்குநர் டோனி ஹால் தெரிவித்தார். 'Beyond Fake News' (போலிச் செய்திகளைத் தாண்டி) திட்டத்தின் கீழ் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட ஏழு நகரங்களில் திங்கள் கிழமை கருத்தரங்குகளை நடத்தும் பிபிசி, தவறான தகவல்கள் ஏன், எப்படி பகிரப்படுகின்றன என்பது குறித்து சொந்தமாக செய்த ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் உரையாற்றிய டோனி ஹால் இவ்வாறு பேசினார். அத்துடன் நல்ல இதழியல் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னை ஹயாத் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு கருத்தரங்குகள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதல் விவாதத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சூழலியாளர...