முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

 ஷ்யாம் நீயூஸ் 30.12.2023 வெள்ள நிவாரண பணிகளில் அதிமுக மட்டுமே களத்தில் நிற்கின்றன.முன்னால் அமைச்சர் ஆர்.பி உதயகுமார். தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழையின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் அதிமுக சார்பாக அம்மா கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தல் படி தூத்துக்குடி டி ஏ கல்யாண மண்டபத்தில்  பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். மேலும் அவர் கூறுகையில் திமுகவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக எடுக்காததால்  இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 31, 1 ,2 தேதிகளில்  கன மழை பெய் வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது இப்போதாவது மக்களை பாதுகாக்க தக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க ...

தூத்துக்குடி வெள்ளத்தன்று வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு

 ஷ்யாம் நீயூஸ் 29.12.2023 தூத்துக்குடியில் வெள்ளத்தன்று வேலைக்கு சென்றவர் பிணமாக மீட்பு தூத்துக்குடி முருகேசன் நகரை சேர்ந்தவர் அம்மாவாசை வயது 73 த/ பெ கண்ணாயிரம் வீரநாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் தொழிற்சங்க தலைவருமான ஒருவருடைய கெஸ்ட் ஹவுஸ்  கட்டுமான பணிக்கு வாட்ச் மேனாக பணிபுரிந்து வந்தார் .கடந்த 17 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை அன்றிலிருந்து  அவரை காணாமல்  உறவினர்கள் தேடி வருகின்றனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி வந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை இடம் கோரிக்கை வைத்தனர் அரசு அதிகாரிகளிடம் கூறி  தேடி தருவதாக உறுதி அளித்து சென்றிருந்த நிலையில் இன்று வீர நாயக்கன் தட்டு கிராமம் அருகில் உள்ள   வாழை தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை புதுக்கோட்டை உதவி காவல் ஆய்வாளர் முத்துக்கருப்பன் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

ஐ.ஓ.பி நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார்.

 ஷ்யாம் நீயூஸ் 26.12.2023 ஐ.ஓ.பி  நிர்வாக இயக்குனர் காலான்கரை கிராம மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தூத்துக்குடி மண்டலத்தின் சார்பாக வெள்ளம் பாதித்த காலாங்கரை மற்றும் தெற்கு கலங்கரை பகுதியில் வாழும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல்  அதிகாரியுமான அஜய் குமார் ஸ்ரீ வஸ்தவா கலந்துகொண்டு  325 குடும்பங்களுக்கு நிவாரண  பொருட்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல முதன்மை மேலாளர் நாகையா இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரியாசூல்காக் உதவி பொது மேலாளர் அனுப் மற்றும் வங்கி அதிகாரிகள்  ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊர்மக்களின் சார்பாக  ஊர் தலைவர் பொண்ணு லிங்கம் மேலாண்மை இயக்குனருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார் . நிகழ்ச்சியில் தேனி உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சூரிய திலகரணி ,சமுக ஆர்வலர்கள்  ஐயப்பன்,முனியாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி

 ஷ்யாம் நீயூஸ் 22.12.2023 டிராக்டரில் சென்று மாப்பிள்ளையூரணியில் நிவாரண பணியில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி     தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 இரு தினங்கள் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் புதியம்புத்தூர் கன்மாய் உடைப்பு ஏற்பட்டும் கட்டாற்று மழைநீரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்;சி பகுதியில் பல்வேறு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.     அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனிமொழி எம்.பி இம்முகாமிற்கு டிராக்டரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி நிவாரணங்கள் மற்றும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.     ஆய்வின் போது சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அண...

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

ஷ்யாம் நீயூஸ் 21.12.2023 தூத்துக்குடியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பெய்து வரும் கனமழையின் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் பொருளாதார சேதத்தையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்திஉள்ளது. இன்று தூத்துக்குடியில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடி சென்மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !

ஷ்யாம் நீயூஸ் 17.12.2023 தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு !  தூத்துக்குடி திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது. அதில் 60 வார்டு உறுப்பினர்கள் தேர்வில் திமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றன. மேயராக ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றப்பின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தமிழக அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டு புதிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கப்பட்டு புறநகர் பகுதிகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும், மக்கள் நலன் கருதி சாலை வசதி, புதிதாக ஏற்படுத்தப்பட்டு அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான மாநகராட்சி பகுதியாக உருவாகுவதற்கு அரசுதுறை அதிகாரிகள் மாமன்ற ...

மாற்றுத்திறனாளிகள் இல்லாத தூத்துக்குடி ஆக மாற்றுவோம் தூத்துக்குடி மேயர் பேச்சு

 ஷ்யாம் நீயூஸ் 11.12.2023 மாற்றுத்திறனாளிகள் இல்லாத தூத்துக்குடி ஆக மாற்றுவோம் தூத்துக்குடி மேயர் பேச்சு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.துாத்துக்குடி துாய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று(10.12.2023) மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவர் பேசும்போது மாற்றுத்திறனாளிகலே இருக்கக் கூடாது என நம் முதல்வர் நினைக்கிறார் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக அரசு செய்துவருகிறது.மத்திய அரசு திட்டங்களையும்  பெற்றுத் தந்துள்ளோம் கல்வி அசைக்க முடியாத சொத்து சமூகத்தில் அவர்களுக்கும் சம உரிமை உள்ளது. இன்னும் அவர்களுக்கான எல்லா உதவிகளையும் பெற்று தரப்படும் மாற்று திறனாளிகள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றவேண்டும் என தெரிவித்தார்.நலத்திட்டவிழாவில் , கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக மாற்றுத்திறனாளிகள் மு...

சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் 2 நட்சத்திரங்களைப் பெற்று சாதனை!

 ஷ்யாம் நீயூஸ் 11.12.2023 சேரன்மகாதேவி பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் 2 நட்சத்திரங்களைப் பெற்று சாதனை! சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரி மத்திய அரசின் இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்திய கல்வி அமைச்சகம் (MoE) உயர் கல்வி நிறுவனங்களுக்கான AICTE உடன் இணைந்து MoE இன் இன்னோவேஷன் செல் (MIC) மூலம் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு கவுன்சில் (IIC) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வியாண்டிற்கான தரவரிசை இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 2022–2023 கல்வியாண்டிற்கான IIC 5.0 இல் பதிவுசெய்யப்பட்ட 1505 கல்லூரிகளில் முதல் 20 கல்லூரிகளில் சேரன்மகாதேவியில் உள்ள SCAD பாலிடெக்னிக் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. SCAD பாலிடெக்னிக் கல்லூரி இரண்டு நட்சத்திரங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் தூத்துக்குடி

 ஷ்யாம் நீயூஸ் 09.12.2023 சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  சி.எஸ்.முரளீதரன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளீதரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிலா காங்கிரஸ் மண்டல தலைவி சாந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், ரஞ்சிதம் ஜெபராஜ், சின்னகாளை, மைக்கேல் பிரபாகர், மாவட்ட பொதுச்செயலாளர் மிக்கேல், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமார முருகேசன் வார்டு தலைவர்கள் காசிலிங்கம், தனுஷ், சுப்பிரமணி, ராஜரத்தினம், ரெனீஸ் பாபு ,மகாராஜன், கணேஷ், முன்னாள் கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

 ஷ்யாம் நீயூஸ் 09.12.2023 சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டதையடுத்து எல்லா பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் இணைந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை 186வது வார்டு புழுதிவாக்கம்  ராம் நகர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பின்னர் அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.  இதில், விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன், சென்னை மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ஜே.கே.மணிகண்டன், மாநகர இலக்கிய அணி ...

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் டிசம்பர் 13ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர் அறிவிப்பு

 ஷ்யாம் நீயூஸ் 08.12.2023 தூத்துக்குடி மாநகர பகுதிகளில் டிசம்பர் 13ஆம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது- ஆணையர் அறிவிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்புகார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 13.12. 2023 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் மாநகர மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ் குமார் இ.ஆ.ப. செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி!

 ஷ்யாம் நீயூஸ் 07.12.2023 செயின்ட்  மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு தொழில் நுட்ப பயிற்சி!  தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட்  மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பிற பொறியியல்  கல்லூரி பேராசிரியர்களுக்கு தொழில் நுட்ப சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  கல்லூரி பேராசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்று கொடுப்பதற்காக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மூலம்  சிறப்பு பயிற்சியை அளித்து வருகிறது. இதற்காக புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரிக்கு பேராசிரியர்கள் கணினி துறையில்  நவீன தொழில் நுட்ப பயிற்சி மற்றும் வளர்ச்சிகாக  ரூபாய் 3 லட்சம் 50 ஆயிரம்  நிதியை வழங்கியது. அதன் அடிப்படையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியை கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சில் 20 பொறியியல் கல்லூரியை சேர்ந்த 65 பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சி பயனுள்ளதாக இருந்ததாக பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கணினித்த...

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

ஷ்யாம் நீயூஸ் 07.12.2023 தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி ! அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.  இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி 08.12.2023 மாலை முதல் 10.12.2023 வரை தெர்மல் நகர் கைப்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.  போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகியகீதாஜீவன் ஆகிய நான் துவக்கி வைத்து வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்க இருக்கிறேன்.  இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜெகன்பெர...

தலைக்கு மேல் கட்டணம் உயர போகிறது!

ஷ்யாம் நீயூஸ் 06.12.2023 தலைக்கு மேல் கட்டணம் உயர போகிறது! தூத்துக்குடி மாவட்ட முடித்திருத்துவோர் மற்றும் மருத்துவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சி.ஐ.டி.யூ மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது .மாவட்ட தலைவர் டென்சில் தலமை தாங்கினார். கூட்டத்தில் சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ரசல் சிறப்புரை ஆற்றினார்.  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறுகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் கட்டிங், ஷேவிங் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வரும் ஜனவரி 1 முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி கட்டிங் 130, ஏசி சலூன் 150, மாடல் கட்டிங் 200, ஏசி சலூன் 250, சேவிங் 80, ஏசி சலூன் 100, சிறுவர் கட்டிங் 5 வயது உட்படவர்களுக்கு 100, ஏசி சலூன் 120, தாடி ஒதுக்குதல் 100, ஏசி சலூன் 120 கட்டிங் & சேவிங் டை 350, ஏசி சலூன் 400, ஹெட் மசாஜ் 220 ஏசி சலூன் 250, பேபி கட்டிங் 150 ஏசி சலூன் 200, ஸ்பெஷல் சேவிங் போம் 100 ஏசி சலூன் 150, தலைவழித்தல் மற்றும் சேவிங்கிற்க்கு 250 ஏசி சலூன் 300 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

 ஷ்யாம் நீயூஸ் 06.12.2023 மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி நேரில் ஆய்வு - பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு தூத்துக்குடி மாவட்டம்,  மாப்பிள்ளையூரணி, தெற்கு சிலுக்கன்பட்டி மற்றும் கீழத்தட்டப்பாறை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் லட்சுமிபதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும் தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூகநீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கு...

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

 ஷ்யாம் நீயூஸ் 05.12.2022 தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு ! தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.  தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களில் மழை பெய்து வந்தது. தொடர் மழையின் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையால் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.  தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும்  கழிவுநீர் வடிகால் கால்வாய் அப்பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க வேண்டிய இடத்தையும்,  வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், புதிய பேரூந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தினர்க...

விஜயகாந்த் உடல்நலம் பெற தூத்துக்குடி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு பூஜை.

 ஷ்யாம் நீயூஸ் 03.12.2023 விஜயகாந்த் உடல்நலம் பெற தூத்துக்குடி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு பூஜை. தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை குறைவாக சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற்று விரைவில் மீண்டு வர வேண்டுமென தூத்துக்குடி மாநகர் தேமுதிக சார்பில் வேம்படி இசக்கியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது.  தூத்துக்குடி மாநகர மாவட்ட தேமுதிக  செயளாலர் தயாளுலிங்கம் தலமைதாங்கினார் , பூஜைக்கான ஏற்பாடுகளை பொதுக்குழு உறுப்பினர் சின்னதுரை, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர் செயற்குழு உறுப்பினர் ராஜபம்மு மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.