முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ?

ஷ்யாம் நியூஸ்  30.04.2020 தூத்துக்குடியில்  பீடி குடித்த கூலி தொழிலாளி மீது வழக்கு பதிவு செய்த காவல்த்துறை  -வேலையை இழந்து தவிக்கும் தொழிலாளிகள் ? தூத்துக்குடியில் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் இருவர் மீது பீடி குடித்ததாக தூத்துக்குடி சிபிகாட் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர் . கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஏழை மக்கள் கூலி தொழிலாளிகள் இருப்பதை உண்டு  வீட்டில் ஒரு மாதமாக இருந்து வந்தனர் .இந்த நிலையில் தமிழக அரசு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவங்கள் செயல் பட அனுமதி அளித்தது . தூத்துக்குடி சிபிகாட் பகுதியில் மத்திய அரசு நிறுவனமான CWC குடோனில் கண்டைனர் பெட்டியில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் பணி நடந்து உள்ளது .8 மணிக்கு தொடங்கிய பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளி மு .பாலமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் காலை 9.30 மணியளவில்  குடோன்வெளிப்புறம் உள்ள கோட்டை சுவர் அருகே  சிறுநீர் கழித்துவிட்டு களைப்பு போக சமூக இடைவெளி விட்டு இருவரு...

தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது !

ஷ்யாம் நியூஸ் 29.04.2020 தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக சுற்று வட்டார பகுதி மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ! கொரானா தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது இந்தநிலையில் மக்கள் வேலைக்கு போகமுடியாமலும்  போதிய உணவு கிடைக்காமலும்  ஏழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் . இந்த நிலையில்  தூத்துக்குடி DSF பிளாசா ஹோட்டல் சார்பாக அதன் சுற்று பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு முட்டை குழம்புடன் கூடிய மோர் பாயாசம் அப்பளம் என ஹோட்டலில் ஒருவருக்கு கொடுக்கப்படும் உணவு போன்ற  சுகாதாரமான உணவு கொடுக்கபட்டது . கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொடுக்கப்பட்டு வருகிறது என்றும்   இது லாக் டவுன் முடியும் வரை மதியம் 1 மணி முதல் 1.30 வரை கொடுக்கப்படும்என்றும்  DSF பிளாசா குழுமங்களின்  இயக்குனர் D.கிப்ட்சன் தெரிவித்தார் .DSF பிளாசா குழுமங்களின் சார்பாக காஜா புயலில் பாதித்தவர்களுக்கு மற்றும் சுனாமியில் பாதித்த மக்களுக்கு என பல உதவிகள் செய்த DSF குழுமம் கொரானா  தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ...

அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துகுடியில் பரபரப்பு !

ஷ்யாம் நியூஸ் 29.04.2020 அப்பாவுக்கு மண் ஆசை!மகனுக்கு பெண் ஆசை !தூத்துக்குடியில் பரபரப்பு ! உலகமே கொரானா பயத்தில் நடுங்கி கொண்டு இருக்கும்போது தூத்துக்குடியில் முன்னாள் அதிமுக செல்லமான பாண்டிய அமைச்சர் தூத்துக்குடி பாளையங்கோட்டை   ரோடு ஓரம் உள்ள தனது பல ஏக்கர் நிலப்பரப்பு உள்ள நிலத்திற்கு 5 அடி உயரத்திற்கு செம்மண்ணை நிரப்பி சமன் செய்து உள்ளனர் . இதனால் அருகில் உள்ள பனை மரங்கள் கீழே விழுந்ததில்  அகற்றப்பட்டு உள்ளது மற்றும் நீதிமன்றம்  பனை மரம்களை வெட்டக்கூடாது என  ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது மற்றும் பனை மரம் தமிழகத்தின் தேசிய சின்னமாகும்   .கொரானா தோற்று பரவலை தடுக்க 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பொது ஆள் நடமாட்டம் இல்லாதததை பயன்படுத்தி  இரவோடு இரவாக மணல்களை அள்ளி குவித்து உள்ளனர் .மலைபோல் மணல் அள்ளி குவிக்க யார் அனுமதி கொடுத்தது விவசாயிகள் வயல்களுக்கு ஒரு மாட்டு வண்டியில்  மண் அள்ளினால் ஓடிவந்து பிடிக்கும் கிராம நிர்வாகி அலுவலர்களும் காவல்த்துறைகளும் பிரதான சாலையில் மணல் அள்ளிய டிராக்டர்களை பிடிக்கமுடியால் கோட்டைவிட்டார்களா ?அல்லது...

ஸ்டெர்லைட் கொடுத்த கொரானா நிதியை திருப்பி கொடுக்கவேண்டும்! ஸ்டெர்லைட் ஆலைக்கு வழுக்கும் எதிர்ப்பு!

ஷ்யாம் நியுஸ் 23.04.2020 ஸ்டெர்லைட் கொடுத்த கொரானா நிதியை திருப்பி கொடுக்கவேண்டும்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை! ஸ்டெர்லைட் நிறுவனம் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாய் வழங்கியதை தமிழக அரசு திரும்ப ஸ்டெர்லைட் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் மூடக்ஆலையைமூட கோரியநடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடில் 13க்கும்  மேற்ப்பட்ட கொல்லப்பட்டனர்  இதனை தொடர்ந்து தமிழக அரசு ஆலையை நிரந்தரமாய் மூடுவதற்காக அரசாணை பிறப்பித்து, பூட்டி சீல் வைத்துள்ளது. அதன் பின்பு ஆலை தரப்பில் தமிழக அரசாணையை இரத்து செய்து, மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் தமிழக அரசு, உச்ச நீதிமன்ற பிரபல சீனியர் வழக்கறிஞர்களை நியமித்து சிறப்பாக வாதாடி உள்ளதை நாங்கள் அறிவோம். இதனால் தமிழக அரசின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக 5 கோடி ரூபாயை தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஸ்டெர்லைட் நிறுவனம...

1921 என்ற எண்ணில் இருந்து அழைத்து கொரானா பரவல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு !

shyam news 22.04.2020 1921 என்ற எண்ணில் இருந்து அழைத்து கொரானா பரவல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு ! நாடு முழுவதும் கொரானா விழிப்புணர்விற்க்காக கொரானா பரவல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் நாடு முழுவதும் தொலைபேசி வாயிலாக கரோனா பரவல் குறித்த ஆய்வு ஒன்றை மக்களிடம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 1921 என்று தொலைபேசி எண்ணிலிருந்து நாட்டு மக்கள் அனைவரும் தொடர்பு கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலிருந்து அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது மக்கள் அவர்களின் கேள்விகளுக்குச் சரியான தகவல்களைக் கூற வேண்டுமென அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அழைப்பு வரும்போது, கரோனா அறிகுறிகள், பரவல் குறித்த சரியான பதிலை மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் மத்திய அரசு, தற்போது மக்களிடையே நேரடியாகத் தொலைப்பேசி வாயிலாகப் பேசி தரவுகளைப் பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கரோ...

இ பாஸ் சர்வீசில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிப்பு ?

ஷ்யாம் நியூஸ் 22.04.2020 கொரானா இ பாஸ் சர்வீசில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிப்பு ? கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது . தமிழகத்தில்  ஒரு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு  வேறு மாவட்டத்திற்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பம் செய்து அனுமதி வாங்கிய பின் செல்லலாம் என அரசு அறிவித்து இருந்தது அதற்க்காக  https://serviceonline.gov.in/tamilnadu  லிங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது .தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களுக்கும் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்காமல் உள்ளது .தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்காததில் ஏதும் உள்நோக்கம் உள்ளதா அல்லது சேர்க்க மறந்து விட்டார்களா என்று தெரியவில்லை அவசர தேவைக்கு  தூத்துக்குடி மாவட்டத்திற்கு இ பாஸ் எடுக்க முடியாமல் வாகனஓட்டிகள் மிக சிரமத்தில்  உள்ளனர் ஆகவே   இ பாஸ் சர்வீசில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்க்க மாவட்ட  நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டனர்.

துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசும் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள்?

ஷ்யாம் நியூஸ் 19.04.2020 தூத்துக்குடி துப்புரவு பணியாளர்களை ஒருமையில் பேசும் மாநகராட்சி அதிகாரிகள்!ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? உலக முழுவதிலும் கொரானா தொற்று பரவலால் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு  வீட்டில் இருக்கும் போது  சுகாதார பணியாளர் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிசெய்து  கொரானா தொற்று பரவலை தடுக்க தெருக்களை  ஓய்வின்றி சுத்தம் செய்து வருகின்றனர்.தூத்துக்குடியில் அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணியாளர்கள் செய்த பணியால் கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது தூத்துக்குடி மாவட்டம் கொரானா தொற்று பரவலை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது என இன்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்துரிக்கு மண்டல பொறுப்பாளர் கருணாகரன் இஆப  பாராட்டுதெரிவித்திருந்தார்.ஆனால் நேற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தால் 2000 பணியாளர்களுக்கு அரிசி உட்பட வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதற்கு விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வருவதாக இருந்தது அமைச்சர் மற்றும் ஆட்சியர் வருவதற்கு முன்பாக சமுதாய இடைவெளி விட்டு இருப்பதற்கு பயன்பெறும் துப்புரவு பணியாளர்களை தயா...

தூத்துக்குடியில் கொரானா சமுக பரவல் இல்லை-ஆட்சியர் தகவல்

தூத்துக்குடியில் கொரானா  சமுக பரவல் இல்லை-ஆட்சியர் தகவல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா பாதிப்பில் சிகிச்சை பெருபவர்கள் 26 நபரில் 2நபர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் மரணம் அடைந்தார் மீதம் உள்ள 23 நபர்களில் 18 நபர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 5 நபர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 55000  வீடுகள் கண்காணிக்கப்படுகிறது.அவர்களுக்கு தேவையான பொருட்கள் வீட்டிர்க்கே சென்று கொடுக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தூத்துக்குடியில் கொரானா பாதிப்பு இல்லை. இருமல் தும்மள் உள்ள 60 வயது கடந்த முதியவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்யபடும்.கொரானா பிரிவில் உள்ள ஒரு நோயாளிகளுக்கு 300 ரூபாய் மதிப்புள்ள சத்தான நோய் எதிர்ப்புச் சக்தி உடைய உணவு வழங்கப்படுகிறது.மற்றும் இஞ்சி டீ சூடான பக்கடா வழங்கப்பட்டுகிறது.அந்த உணவுகளை உண்டு ஆட்சியர் சரிபார்த்தார். கொரானா மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தங்குமிடம் சத்தான உணவுகளை மருத்துவமனை நிர்வாகம்  தயாரித்து  நேரம் தவறாமல் வழங்கி வருகின்றது.நாளோன்று...

வீரன் சுந்தரலிங்கனாருக்கு 250 வது பிறந்தநாள் தூத்துக்குடி கலெக்டர் மரியாதை!

ஷ்யாம் நியூஸ்  16.04.2020 வீரன் சுந்தரலிங்கனாருக்கு  250 வது பிறந்தநாள் தூத்துக்குடி கலெக்டர் மரியாதை! சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாரின்  250 வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியிலுள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு இன்று காலை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். ஊரடங்கால் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன திண்ணால் பித்தம் தெளியும் ?சமூக ஆர்வலர் கேள்வி ?

ஷ்யாம் நியூஸ் 16.04.2020 ஸ்டெர்லைட் ஆலைக்கு என்ன திண்ணால் பித்தம் தெளியும் ?சமூக ஆர்வலர் கேள்வி ? ரேசன் அரிசியை, பொன்னி அரிசி பையில் அடைத்து பொதுமக்களுக்கு விநியோகித்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் .!குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கோரிக்கை வைத்து உள்ளார் . கொரானா வைரஸ் தடுப்பு காரணமாக அரசு  பிறப்பித்த உத்தரவின் கீழ் பொதுமக்கள் தங்களது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் இன்னல்களையுடம் தாண்டி  கடந்த சில வாரங்களுக்கு மேலாக வீட்டிலே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.இத்தகைய மக்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட அரசுகள் முயற்சித்து வருகிறது மேலும் தன்னார்வலர்கள் மற்றும் இன்னபிற சுய உதவி அமைப்புகள் பொதுமக்களை சந்தித்து உதவிகள் செய்திட வழிவகைகளை வகுத்துள்ளது. இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆதரவாளரும், இந்து டிரேடர்ஸ் உரிமையாளருமான  பாலா என்பவர் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் தூத்துக்குடி போல்டன்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார நகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை...

தூத்துக்குடியில் கருடன் வட்டமிட அம்பேத்கர்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஆட்சியர்!

ஷ்யாம் நியூஸ் 14.04.2020 தூத்துக்குடியில் கருடன் வட்டமிட அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார் ஆட்சியர் !  இந்திய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129 பிறந்தநாளான இன்று  நாடுமுழுவதும்  கொண்டாடப்பட்டு வருகிறது . இந்த நிலையில் நாடெங்கும் கொரானா எதிரொலியாக 144 தடை சட்டம் அமலில் உள்ளதால் கொரானா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அரசியல் கட்சிகள் தலைவர்களுக்கு  அரசுஅனுமதி வழங்கவில்லை.ஆனால் அரசு சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என அரசு அறிவித்திருந்தது.அதன் படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்துரி தெற்க்கு காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்போது வானில் கருடன் வட்டம் அடித்து மரியாதை செலுத்தியது என்பது கூடுதல் செய்தி.

தூத்துக்குடியில் இறைச்சி அதிகவிலை விற்றால் கடைக்கு சீல்!ஆட்சியர் தகவல்

ஷ்யாம் நியூஸ் 13.04.2020 தூத்துக்குடியில் 25.03.2020 அன்றைய  தேதிக்கு முன்பு உள்ள விலையில் ஆடு கோழி மீன் போன்ற இறைச்சிகளை விற்க்கவேண்டும்.மீறுபவர்கள் கடை சீல் வைக்கபடும்.அதிவிலை விற்றால் 04612340012 என் எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்துரி அறிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா வைரஸ்க்கு முதல் பலி!

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசுக்கு முதல் பலி தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 72வயது மூதாட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்த சேர்ந்த 42 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் பழகிய அவரது நண்பர், மற்றும் நண்பரின் மனைவி, 72 வயது மாமியாருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்கள் 3 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த 72 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக கருதப்படுகிறது. இதனால் பொது மக்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூதாட்டியின் உடல், பாலித்தீன் கவர்களால் சுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி அவருடைய உடல் தகனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி உப்பள தொழிலாளிகளுக்கு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஷ்யாம் நியூஸ் 05.04.2020 தூத்துக்குடியில் உப்பள தொழிலாளிகளுக்கு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடியில் கொரானா தொற்று நோய் காரணமாக நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது மக்களை வீட்டில் இருக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனால் நாடு முழுவதும் தின கூலி தொழிலாளர்கள்  வேலையில்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டது.தூத்துகுடியில் உப்பள தொழிலாளர்அதிக அளவிற்கு உள்ளனர்.இந்த நிலையில் தூத்துக்குடி உப்பள தொழிலாளிகள் துயர் துடைக்கும் வகையில் . தூத்துக்குடி 3  சென்ட் உப்பள பகுதியில் உள்ள தொழிலாளர் 100  நபர்க்களுக்கு பத்துகிலோ அரிசி பருப்பு மசால் பொருட்கள் உட்பட பல பொருட்களை தூத்துக்குடி அடையல்   ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக ஆதி திராவிட மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செந்தமிழ் பாண்டியன் (எ) ஸ்டிபன் வழங்கினார்.

தூத்துக்குடியில் பட்டினியால் தவிக்கும் முதியவர்கள்! கண்டு கொள்ளாத மாநகராட்சி !நடவடிக்கை எடுக்க முதியவர்கள் கோரிக்கை .

தூத்துக்குடியில்   பட்டினியால் தவிக்கும் முதியவர்கள்! கண்டு கொள்ளாத மாநகராட்சி !நடவடிக்கை எடுக்க முதியவர்கள் கோரிக்கை . கொரானா வைரஸ் பரவலை தடுக்க 144 உத்தரவால் பிறப்பிக்க பட்ட ஊரடங்கை அடுத்து தூத்துக்குடியில் வசித்து வருவோரில் உணவின்றி தவிப்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் உணவு வழங்கும் ஏற்பாட்டை மாநகராட்சி செய்யும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து இருந்தார் . ஆனால் தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் அம்பேத்கார் நகரில் பல முதியவர்கள் பசி பட்டினியால் தவித்து வருகின்றனர் .மார்ச் 31 ம் தேதி அப்பகுதியில் பல முதியவர்கள் இருக்கிறர்கள் கணக்கு எடுத்து அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என தூத்துக்குடி தங்கசுடர் அறக்கட்டளை நிர்வாகி கலைச்செல்வி மாநகராட்சி அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள முதியவர்கள் பெயர் பட்டியலை கொடுத்து உள்ளனர் .ஆனால் இன்று வரை அவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சி உணவு வழங்காமல் இருந்து வருகின்றனர் ,இது தொடர்பாக அப்பகுதி முதியவர்களை நேரில் கேட்டபோது சாப்பிட்டு நான்கு நாள் ஆகிறது யாரும் உணவு கொண்டு வந்து தரவில்லை என சாலையோர முதியவர் தெரிவித்தார்...

தூத்துக்குடியில் கொரானா களத்தில் கனிமொழி எம் பி ! கூடுதலாக 50 லட்சம் நிதி அளித்தார் !

தூத்துக்குடியில்  கொரானா களத்தில் கனிமொழி எம் பி  ! கூடுதலாக  50 லட்சம் நிதி அளித்தார் ! உலகையே தன் கோரப்பசிக்கு ஆளாக்கிய கொரானா நோயிடம் இருந்து மக்களை பாதுகாக்க உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது .இந்த நிலையில் தி மு க தலைவர் ஸ்டாலின் அணைத்து மாவட்ட செயலாளர்களும்  மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய கட்டளையிட்டு உள்ளார் . தி மு க வின் மருத்துவ அணி தமிழகம் முழுவதும் மருத்துவ பணியை செய்து வருகின்றனர் . தூத்துக்குடி மாவட்ட தி மு க  வடக்கு செயலாளர்  கீதா ஜீவன் மற்றும் தெற்கு மாவட்ட செயளாலர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு நிதியும் கொடுத்தனர் . இந்த நிலையில் இன்று  தொகுதிக்கு நானே தனியாக சென்று வருகிறேன் யாரும்  கூட வரவேண்டாம் என்று காரில் தனியாக பயணித்து வந்த தூத்துக்குடி நாடுளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கொரானா பாதிப்பு பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையை பார்வையிட்டார் . அப்போது கொரானா சிறப்பு அவசர சிகிச்சை வார்டுக்கு கட்டமைப்பு தேவைக்கு கூடுதலாக நிதி வேண்டும் என மருத்துவ குழு கோரிக்கை வைத்தனர் . கோ...

தூத்துகுடியில் கொரானா அச்சம் வேண்டாம் ! முதியவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தூத்துகுடியில் கொரானா அச்சம் வேண்டாம் ! முதியவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: செய்துங்கநல்லூரில் இருந்து டெல்லி சென்று வந்த ஒரு நபருக்கு கரோனா வைரஸ் சோதனையில் உறுதி  என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது இருப்பிடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புற பகுதிகள் தீவிரமாக கண்கானிக்கப்படும்  . அவருடன் தொடர்பு கொண்டவர்கள், அவர் சென்ற இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுபோல், டெல்லியில் இருந்து திரும்பிய  தூத்துக்குடி ,பேட்மாநகரம் கிராமம்   மற்றும் காயல்பட்டிணம் பகுதியைச் சார்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்  .அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது  மேலும், செல்போன் தகவலின் அடிப்படையில் 3பேர் டெல்லி சென்றதாக அறியப்பட்டு, அவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அதில் ஒருநபர் தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்தவர். அவர்களது ரத்த மாதிரிகளு...