முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல்.

ஷ்யாம் நியூஸ் 28.03.2020 தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கொரானா தொற்று இல்லை_ ஆட்சியர் தகவல். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விரைவாக கிடைக்க வியாபாரிகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவை தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதில் உள்ள சிறமத்தை சரி செய்ய வாகனங்கள் மற்றும் அதில் ஈடுபடும் பணியாளர் களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.உற்பத்தி பொருட்கள் விவசாய பொருட்கள் கொண்டு செல்ல வாகனங்கள் நகர்வதர்க்கு தாலுகா வாரியாக அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1621   நபர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என கணக்கு எடுக்கப்பட்டு தனிமை படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் 41 குழுக்கள் அமைத்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தேடிவருகின்றனர்.இந்த நோய் 99.99%  வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் வந்துள்ளதால் இவர்களை கண்காணிப்பதில் திவிரபடுத்தப்பட்டு உள்ளது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 16 நபர்கள் கொரானா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சோதனை செய்...
குளத்தூர் அருகே திருமண ஏக்கத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

குளத்தூர் அருகே திருமண ஏக்கத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 138 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கிய 138 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது. தூத்துக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 138 மதுபாட்டில்களை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் காதர் மீரன் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு பதுக்கி வைத்திருந்த 138 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முருகேசன் மகன் ராமசந்திரன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுபோல் நாலாட்டின்புதூர் சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி பிலிப் மற்றும் போலீசார் வணிக வளாகத்தில் சோதனையிட்டபோது 114 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை ஏற்று குருஸ் பர்னாந்துக்கு அரசு விழா !முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு !

ஷ்யாம் நியூஸ் 24.03.2020 தூத்துக்குடி அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கையை ஏற்று குருஸ் பர்னாந்துக்கு அரசு விழா !முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு ! தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும்  ராவ்  பகதூர் பர்னந்திஸ் பிறந்த நாளான  நவம்பர் 15 ஐ அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என தூத்துக்குடி மக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர் .இந்த நிலையில் தென்காசி மாவட்டம் தொடக்க விழாவின் போது  தூத்துக்குடியை சார்ந்த முன்னாள் அ தி மு க  அமைச்சர் சி தா  செல்லப்பாண்டியன் முதல்வர் பழனிச்சாமியிடம்  ராவ்  பகதூர் பர்னந்திஸ் பிறந்தநாலான நவம்பர் 15 ஐ அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை மனு கொடுத்தார்  .மற்றும் தி மு க சட்டமற்ற உறுப்பினர் கீதா ஜீவன் தற்போது நடந்த சட்டமன்றத்தில் அரசு விழாவாக அறிவிக்க  கோரிக்கை வைத்தார்  . மற்றும் தற்போதைய செய்தி மற்றும் விளம்பத்துறை அமைச்சர் ராஜு நீண்டநாள் கோரிக்கையான   ராவ்  பகதூர் பர்னந்திஸ் பிறந்த நாள் அரசு விழாவாக  நடத்த அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார் . அதன்படி தமிழக முதல்வர் ஆணைக்கு இணங்க...

மது போதை வயர்மனால் பொதுமக்கள் அவதி ! பீஸ் கேரியரை மாற்றி புடிங்கி அடாவடி !

மது போதை வயர்மனால் பொதுமக்கள் அவதி !  பீஸ் கேரியரை மாற்றி புடிங்கி அடாவடி ! தூத்துக்குடி மாசிலானிபுரத்தில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வயர்மனாக  பணி  செய்துவருபவர்   . மின்கட்டணம் கட்டிய  இனைணைப்பை மதுபோதையில் மாற்றி துண்டித்துவிட்டதாக தெரிகிறது .மின்சாரம் துண்டிக்கப்பட்ட நுகர்வோர் (07342002440)அலுவலகத்திற்கு தொலைபேசியில் புகார்  தெரிவித்து உள்ளார் .புகாரை பெற்றுக்கொடு வந்த வயர்மன்  பீஸ் கெரியரை தொலைத்துவிட்டு மின் நுகர்வோரின் மின் இணைப்பை சரி செய்யாமல்  சென்றுவிட்டார் .பொறுப்போடு செயல்படவேண்டிய வயர்மன் பொறுப்பில்லாமல் செயல்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அவதிவிடுகின்றனர் .இதை கண்காணிக்க வேண்டிய A E இடம் புகார் அளித்தும் பயனில்லை  அப்பகுதி வயர்மன் பெரும்பாலும் மதுபோதையில் இருப்பதால் தவறு நடக்கிறது  அதனால்   மின் வாரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர் .
தூத்துக்குடி  மாவட்டத்தில் சுய ஊரடங்கு 100% வெற்றி: ஆட்சியர் பேட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரானோ சிறப்பு வார்டு அருகில் மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், ஊடகத் துறையினரின் பணிகளை பாராட்டி வாழ்த்தி நடைபெற்ற‌ கைதட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் கடைகள் மூடப்பட்டு,  சுய ஊரடங்கு முழுமையாக 100% வெற்றி பெற்றுள்ளது.  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளனர். சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தந்த தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காலை...

தூத்துக்குடி TUJ சங்க பத்திரிகையாளர் களப்பணியில் ஒரு நலப்பணி!

ஷ்யாம் நியூஸ் 22.03.2022 தூத்துக்குடி TUJ சங்க பத்திரிகையாளர் களப்பணியின் போது ஒரு நலப்பணி! கொரானரா எதிரொலி ஆட்சியரின் ஆணைப்படி தூத்துக்குடி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். கொரானை விரட்ட மருத்துவர்கள் ஓய்வின்றியும் காவலர்கள் கொளுத்தும் வெயிலிலும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கள நிலவரம் அறிய செய்தி சேகரிக்க சென்ற TUJ சங்க பத்திரிக்கையாளர்கள் ஆங்காங்கே ரோட்டோரத்தில் பசியில் சுருண்டு கிடந்த எளியோர்களுக்கு  பிஸ்கட் வழங்கினர் அவர்கள் மனமகிழ்வு கொண்டனர். .அவர்கள் வாழ்த்தியதில் பத்திரிகையாளர் மனமகிழ்ச்சி கொண்டனர்.

தூத்துக்குடியில் மாஸ்க்கு கட்டிய பெண்ணுக்கு மாங்கல்யம் கட்டிய மணமகன்!

ஷ்யாம் நியூஸ் 22.03.2020 தூத்துக்குடியில் மாஸ்க்கு கட்டிய மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் கட்டிய மணமகன்! கொரானா எதிரொலியாக பாரதபிரதமர் ஒரு நாள் சுய ஊரடங்கு பின்பற்ற சொன்ன நிலையில் தழிழக முதல்வர் ஆணைப்படி தமிழகத்தில் சுய ஊரடங்கு பின்பற்ற பட்டு வருகிறது .இந்த நிலையில் தூத்துக்குடில் லெவிஞ்சிபுத்தில் இந்து கோவிலில் நடந்த கல்யாணத்தில் அரசின் ஆணைக்கு மதிப்பளித்து மணமக்கள் சங்கர்' சிவசங்கரி திருமணத்தில் மணமகன் மாஸ்க் அணிந்து மணமகள் சிவசங்கரி கழுத்தில் மாங்கல்யம் கட்டினார். இத்திருமணம் தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தூத்துக்குடி மக்களை பாதுகாக்கும் போக்குவரத்து காவலர்கள்!

ஷ்யாம் நியூஸ் 22.03.2020 தூத்துக்குடி மக்களை பாதுகாக்கும் போக்குவரத்து காவலர்கள்! தூத்துக்குடி மக்களை பாதுகாக்க போராடும் தூத்துக்குடி போக்குவரத்து காவலர்கள்! ஆல்க்கொல்லி நோய் உலகையே தன் கைப்பிடிக்குள் கொண்டுவந்து தன் பசியை தணித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இந்திய மக்களை பாதுகாக்க பாரதபிரமர் இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க  சொன்னார். அதன் படி தமிழக முதலவர் ஆணைக்கு இணக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு நந்தூயின்  ஆணனைபடி தூத்துக்குடி மக்கள் சுய ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர்.ஆனாலும் தூத்துக்குடி யின் நான்கு திசைகளிலும் போக்குவரத்து காவலர்கள் அரணாக நின்று  மக்களை பாதுகாக்கும் பணியில் அயராது பாடுபட்டு வருகின்றனர்.கோடை வெயில் வெப்பத்தில் தார்சாலை அணல்கக்கும் சூடை பொருட்படுத்தாமல் தங்கள் குடும்பம் மக்களை மறந்து பணி செய்து வருகின்றனர். இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாத நிலையில் தாகத்தை தணிக்க தண்ணீர் இல்லாமலும் உள்ளனர்.கண்ணுக்கு தெரியாத எதிரி  கொரானாவிடம் மக்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று தீவிரமாக பணிசெய்கிறார்கள்.அரசு ஊழியர்கள் பல துறை உயர் அதி...

கொரானா அச்சம் மக்களை பாதுகாக்க தூத்துக்குடி ஆட்ச்சியர் முழு முயற்சி! ஒத்துழைப்பு தருகிறோம் மத தலைவர்கள்! வணிகர்கள் உறுதி!

கொரானா அச்சம் மக்களை பாதுகாக்க தூத்துக்குடி ஆட்ச்சியர்  முழு முயற்சி! ஒத்துழைப்பு தருகிறோம் மத தலைவர்கள்! வணிகர்கள் உறுதி! உலகம் முழுவதும் பலிவாங்கும் கொரானா தூத்துக்குடியில் பரவாமல் இருக்க வரும் வாரங்களில் கவனமாக இருக்கவேண்டும் பொதுமக்கள் கூட்டமாக நிர்க்கவோ போகவோ கூடாது. பெரிய சிறிய கோவில்கள் மசுதிகள். சர்சுகள்.  என வழிபாட்டு தளங்களிலும் கூட்டம் கூடக்கூடாது .நாம் நோயின் நோயின் மூன்றாவது நிலையில் இருப்பதால் நோய் பரவாமல் இருக்க 31 ம் தேதிவரை மக்கள் வெளியில் வரவேண்டாம். நோயின் மூன்று நிலை 1.இது சீனாவில் உருவான தொற்று நோய். 2.அதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவிற்க்கு வந்துள்ளது.அதனால் வெளிநாட்டு பயணிகள் திவிரமாக கண்காணித்தால் அவர்களோடு அந்த நோயை நிறுத்தி விடலாம். 3.அந்த நோய் சாமானிய மக்களுக்கு பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும். சாமானிய மக்களுக்கு வந்தால்  அவர்களை அடையாளம் காணமுடியாது.அதனால் பொதுமக்களிடம் வேகமாக பரவும். வரும் நாட்களில் வெளியில் வராமல் இருந்தாலே கொரானாவை தடுத்து விடலாம். கொரானாவை பற்றி பயம் வேண்டாம் விழிப்புணர்வுவோடு இருந்தாலே...

நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம் வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர் எதிர்கட்சினர் !

 நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிப்பிரமாணம்  வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர்  எதிர்கட்சினர் ! இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு காணாத ஒரு அரிய காட்சி உறுப்பினராக பதவி ஏற்கும் பொழுது மற்ற உறுப்பினர்கள் வாழ்த்தி வரவேற்க செய்வதுதான் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதுவரை கண்டு வந்தது முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்ட பொழுது அனைத்து எதிர்க்கட்சிகளும் வெட்கம் அவமானம் அசிங்கம் என கோஷமிட்டு அவையை விட்டு வெளியேறினர் .

கரோனா எதிரொலி தூத்துக்குடியில் மூடாமல் செயல்படும் வணிக வளாகங்கள் !

கரோனா எதிரொலி தூத்துக்குடியில் மூடாமல் செயல்படும் வணிக வளாகங்கள் ! கரோனா வைராஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடியில் உள்ள வணிக வளாகங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவில் உருவான கரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாத காலத்திலேயே அந்த வைரஸ் குறித்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தற்போது தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஓட்டல், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது.  தூத்துக்குடி நகரில் உள்ள லாட்ஜ்களில் தங்கியுள்ள வெளி மாநில, வெளிநாட்டினர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி நகரில் உள்ள டிஎஸ்எப் பிளாசா, வேலவன் ஹைபர் மார்க்கெட், பெரிசன் பிளாசா ஆகிய வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை காவல்துறை கண்காணிக்க உத்...

தூத்துக்குடியில் படகு கவிழ்ந்து விபத்து!

ஷ்யாம் நியூஸ் 14..03.2020 தூத்துக்குடியில் படகு கவிழ்ந்து விபத்து! தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற படகுநேற்று இரவு கவிழ்ந்தது . கிரேஸ் புரத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடிர் என்று பயங்கர காற்று வீசியதில் படகு கவிந்தது அதில் இருந்த திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர்கள் பெர்க்மான்ஸ் 'வினோத்' சின்ன வேல்ராஜ்; சின்னராஜ்' மற்றோரு வினோத் ஆகியோர் கடலில் மூழ்கி தத்தளித்தனர் .அந்த வழியாக மீன்பிடிக்க வந்த தருவைகுளம் மீனவர்கள் அவர்களை மீட்டு கரைசேர்த்தனர்.படகு கடலில் மூழ்கியதில் ஆழ்ந்து விட்டது.கடலில் மூழ்கிய மீனவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை ! யெஸ் பேங்க் குளறுபடியா ?

SHYAM NEWS   09.03.2020 தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை ! யெஸ் பேங்க் குளறுபடியா ? தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு பிப்ரவரி மத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது .மாதத்தின் கடைசி வேலைநாளில் வழங்கவேண்டிய மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை .தூத்துக்குடி மாநகராட்சி வரிவசூல் பணம் யெஸ் பேங்க்கில்  செலுத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது .கடந்த வாரம் யெஸ் பேங்கில் பெரும் குளறுபடி நடந்ததை ஒட்டி இந்திய ரிசெர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது .இதனால் யெஸ் பாங்கில் போட்டபணத்தை எடுக்கமுடியால் பொதுமக்கள் திணறினர் இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி யெஸ் பேங்கில் செலுத்திய பணத்தை எடுக்கமுடியால், ஊழியர்களுக்கு  சம்பளம் பட்டுவாடா செய்யமுடியாமல் திணறுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர் .இது சம்பந்தமாக ஆட்சியரிடம் கேட்டபோது இதுகுறித்து விராசரனை நடத்தி   நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் .தூத்துகுடியில் அரசு வங்கிகள் பல இருந்தும் தனியார் வங்கியை தேர்ந்து எடுத்து மாநகராட்சி பணத்தை டெபாசிட் செய்தது ஏன் என்ற கேள்வி ஊழியர்கள் மட்டும் அல்...

செய்தியாளர் மீது தாக்குதல்- ராஜேந்திரபாலாஜி மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்?மு,க.ஸ்டாலின்

ஷ்யாம் நியூஸ்  04.03.2020  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவுடன் விருதுநகரில் பத்திரிகைச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மேலும், மத வன்முறையையும், கலவரங்களையும் தூண்டும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் போக்குக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;  செய்தியாளர் வன்முறையையும் கடுஞ்சொற்களையும் அரசியல் வழிமுறையாகக் கொண்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகளும் செயல்பாடுகளும், பாரம்பரியமாக மத நல்லிணக்கம் கொண்ட தமிழகத்தில் - மத வன்முறைகளையும், கலவரங்களையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. அரசியலில் அமைச்சருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் நடக்கும் மோதல் போக்கு குறித்த செய்தியினை வெளியிட்ட "குமுதம் ரிப்போர்ட்டர்" பத்திரிகைச் செய்தியாளர் கார்த்தி, சிவகாசியில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகி...

தூத்துக்குடியில் ஹெல்மெட் கொள்ளையர்கள் பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு! போலிஸ் வலை வீச்சு!

தூத்துக்குடியில் பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு : ஹெல்மெட் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு! தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5½பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி முனியசாமிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் மூக்காண்டி இவரது மனைவி சோமசுந்தரி (38) நேற்று முனியசாமி புரம் 1வது தெருவில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சோமசுந்தரி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்