முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்-காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. டெல்லியில் ஐ ஏ எஸ் பயிற்சி படித்து வந்த ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த  மாணவி ஸ்ரீமதி நேற்றையை முன் தினம் அவர் தங்கும் அரையில் மரண அடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.  வட மாநிலங்களில் . தமிழக மாணவ மாணவிகள், தற்கொலைகள். படு கொலைகள் இது போன்ற சம்பவங்கள் தொடந்த வண்ணமாக உள்ளது மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி இதன் பின்னனி காரணம் என்ன வென்று கண்டறிய வேண்டும் மெனவும் இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .  மேற்படிப்பிற்காக வட மாநிலங்கள் சென்று படித்து வரும் தமிழக மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு மாநில அரசுகள் பாதுகாப்பு அளித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . மாணவி ஸ்ரீமதியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ...

அரசு பணத்தை வீண் அடித்துவிட்டு ஆட்சியர் மீது பழி போடும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் !

SHYAM NEWS 31.10.2018 அரசு பணத்தை வீண் அடித்துவிட்டு ஆட்சியர் மீது பழி போடும் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ! பொதுமக்கள் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது பதில் சொல்லக்கூடாதுனு ஆணை இருக்கிறது என்றும் இது எங்கள் அலுவலக சட்டம் என்று அதிரடியாக பதில் அளித்த தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மரியா ஜோசப் ரூஸ்வெல்ட் . அரசு அலுவலக நிர்வாகம் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பது பொதுவான விதி . ஆனால் எந்த விதி இருந்து நமக்கு என்ன என்று விதிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு நமது பாக்கட்டில் பணம் நிரம்புகிறதா என்ற வேலையை மட்டும் செய்கிறார் மீறி யாராவது கேட்டால் மாவட்ட ஆட்சி தலைவர் மேல் பழியை போட்டு தான்   தப்பித்து கொள்ளலாம் என்று பல தவறான வேலைகளை செய்து வருகிறார் . 2015 ல் அப்போதய மாவட்ட ஆட்சி தலைவர் வெள்ள பகுதில் பாதிக்க பட்ட இடத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒதுக்கிய பசுமை வீட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தெய்வநாயகம் தனது அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அதிகாரிகளுடன்   சேர்ந்து வரும் தேர்தலில் தனக்கு ஓட்டு வேணும் என்பதற்காக அரசு அலுவல...

கேட்டவுடன் கேட்ட இடத்தில் இன்டர்நெட் சேவை-BSNL வழங்கும் புதுதிட்டம்!

ஷியாம் நியூஸ் 27.10.2018 தூத்துக்குடியில் இந்திய பொது துறை நிறுவனமான BSNL கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இனைந்து பைபர் கேபிள்கள் மூலம் FTTH எனும் அதிவேக          இன்டர்நெட்  சேவை வழங்க உள்ளது. இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனம் BSNLம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் இணைந்து மக்களின் இல்லம் தேடி எந்தவிதமான தடையும் இல்லாமல் அதிவேகத்தில் இன்டர்நெட் டெலிபோன் பேசும் வசதியுடன் மக்களுக்கு பிடித்த டிவி சேனல்களையும் சேர்த்து தர இருக்கிறார்கள்.ரூ 777 பிளானில் 50 mbps வேகத்தில் 500ஜிபி வரையிலும் ரூ 1277பிளானில் 100mbpsவேகத்தில் 750 ஜிபி வரையிலும் மேலும் அன்லிமிட்டெட் இன்டர்நெட் வசதியுடன் அளிக்கிறது.மற்றும் இந்தியாவிலுள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் 24 மணி நேரமும் வாய்ஸ்  அழைப்புகள் வசதியும் உள்ளது.தற்பொழுது காயல்பட்டிணம் நகரில் இந்த FTTH சேவை கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது விரைவில் இச்சேவை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு கிடைக்க இருக்கிறது என்று பொதுமேளாலர் ஆர்.ஷ...

ஜனநாயக மக்கள் எழுச்சி கட்சி - பொறுப்பாளர்கள் நியமனம்!

Shyam News 27.10.2018 மாநில. மண்டல. மாவட்ட. பகுதி. பொறுப்பாளர்கள் நியமனம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில செயலாளராக எம். எஸ். எப். முகைதீன் இஸ்மாயில். சென்ணை மண்டல செயலாளராக கே.கிருஷ்ண மூர்த்தி. தென் சென்ணை மாவட்ட செயலாளராக எஸ். கார்த்திக். மாவட்ட பொருளாளராக எம். ரமேஷ் மாவட்ட அமைப்பு செயலாளராக இரா.ஜவஹரால் நேரு. மாவட்ட துணை செயலாளராக கே. சரஸ்வதி. மாவட்ட மகளிரணி செயலாளராக வி. புவனேஸ்வரி. மற்றும் விருகம் பாக்கம் பகுதி செயலாளராக என் ஜே. வேல் முருகன். பொருளாளராக ஆர். நடராஜன். துனை பொருளாளராக ஆர். செல்வம். துனை செயலாளராக பி.கமல கண்னண். துனை செயலாளராக ஏ.மனிகண்டன். துனை செயலாளராக எம். கண்னண். துனை அமைப்பாளராக ஜீ.துரை பாண்டி. ஆகியோர் இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள். என்பதை தெரிவித்து கொள்கிறேன். பதவியின் தண்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்ட...

சி.பி.ஐ-இல் விலகும் திரை: மோதலும் பின்னணியும்

சி.பி.ஐ-இல் விலகும் திரை: மோதலும் பின்னணியும் SHYAM NEWS 24.10.2018 படத்தின் காப்புரிமை CBI Image caption அதன் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டாகியுள்ள அதிகாரபோட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே தற்போது விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ, அதாவது மத்திய புலனாய்வு முகமை, ஊழல் பற்றி விசாரணை செய்யும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும். சிபிஐ என்றாலே மத்திய அரசுக்கு சாதகமாக செயல்படும், அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் அமைப்பு என்ற பொதுக்கருத்தும் நிலவுகிறது. 'கூண்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிபிஐ அமைப்பு இருக்கிறது. சிபிஐக்கு இருக்கும் ஏராளமான எஜமானர்கள் சொல்வதைச் சொல்லுகின்ற கிளிப் பிள்ளையாக இருக்கிறது' என உச்சநீதிமன்றம் ஒரு சந்தர்ப்பத்தில் சிபிஐ-யை சாடியிருந்த...

கடனில் தள்ளாடும் தமிழகம்!

  SHYAM NEWS  24.10.2018   கடனில் தள்ளாடும் தமிழகம்!  தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று 2018-2019-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். சட்டசபையில் இன்று பட்ஜெட் வாசித்த ஓபிஎஸ் 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாயை நிகர கடனாக வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துள்ளது. காரணம் இலவசங்களை அள்ளி வீசி கடன்காரர்களாக மாற்றியுள்ளனர். 2001-2006 ஜெ ஆட்சி 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ. 57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது.    2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ. 1,01,439 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து 2011-...

தமிழ்நாடு: பிளாஸ்டிக் தடை - சாத்தியங்களும் சவால்களும்!

தமிழ்நாடு: பிளாஸ்டிக் தடை - சாத்தியங்களும் சவால்களும் தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ் 23 அக்டோபர் 2018 படத்தின் காப்புரிமை DOMINIQUE FAGET/GETTY IMAGES பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் மாசுபாடு எனும் பேராபத்தை உலகமே எதிர்கொண்டிருக்கிறது. வளம் நிறைந்த மேற்குலக நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை முறைப்படுத்தவும், பிளாஸ்டிக் மாசில்லா உலகை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்...

பழிவாங்க காத்திருக்கும் மின் வயர்-தூத்துக்குடி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை?

தமிழ்எக்ஸ்பிரஸ் 19.10.2018 ண தூத்துக்குடி பாளைரோடு 3ம் மைல் அருகில் மாநகராட்சி மூலம் மின் விளக்கு அமைக்க மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.  அதற்கான மின்சார வயர்கள் பாளை மெயின்ரோடு நடைபாதை ஓரமாக பூமிக்கு அடியில் பதிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.இந்த வயர் ஒரு சாண் ஆழம் கூட குழி தோண்டாமல் மின்சார வயரை பதித்து வருகின்றனர்.மற்றும் வயரின் மேல் செங்கள் மற்றும் ஆற்றுமணல் போடாமல் வயர் பதிப்பதால் எளிதில் மின்விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகவே சம்மந்தமாக பட்ட மாநகர அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

பத்திரிக்கையாளர்க்கு கொலைமிரட்டல்_முன்னால் பஞ்சாயத்து தலைவர்.

தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ் 19.10.2018 தூத்துக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது கோரம்பள்ளம் பஞ்சாயத்து.கடந்த முறை தலைவராக இருந்த பஞ்சாயத்து தலைவர் மு.தெய்வநாயகம்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரூபாய் 637949 கையாடல் செய்தது மற்றும்205-2016 ல் அரசு ஊழியர் ஒருவருக்கு வருங்கால அரசியல் தேர்தல் வாக்குகளுக்காக அரசின் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்த இலவச வீடு திட்டத்தை அதிகாரிகள் துணையோடு கொடுத்தது.2011-2012 ல் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு வீடு கொடுக்காமல் வீடு கட்டியதாக பில் எடுத்தது சம்மந்தமாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.இதனால் ஆத்திரம் கொண்ட முன்னால் பஞ்சாயத்து தலைவர் மு .தெய்வநாயகம் பத்திரிக்கையாளரையும் அவரது வீட்டுக்கு  சென்று வீட்டு பெண்களையும் ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்.ஆனாலும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிபிடதக்கது.

இந்தியா மானம் கப்பல் ஏறுதா?

தமிழ் எக்ஸ்பிரஸ் நியுஸ் 18.10.2018 தொடர் சரிவு காரணமாக, இந்திய ரூபாயை தனது ''கரன்சி மானிட்டரிங் வாட்ச் லிஸ்டில்'' இருந்து நீக்க போவதாக முடிவெடுத்து இருக்கிறது அமெரிக்க அரசு. இன்னும் சில வாரங்கள் இந்திய ரூபாய் மதிப்பை பார்ப்போம், அதற்குள் ரூபாய் மதிப்பு சரியாகவில்லை என்றால், அதை லிஸ்டில் இருந்து நீக்கிவிடுவோம் என்றுள்ளனர். இது உலக சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பை பெரிய அளவில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.அனால் நமது அரசியல் அதிபர்கள் அதை மறைக்க மதகலவரம் வைரமுத்து மீ டு பிரச்சனை சிலைகளவு என பலவகைகளில் மக்களின் கவனத்தை திசை திருப்புவது போன்ற வேலைகளை சரியாக செய்து வருகிறார்கள்! இந்திய பணத்தை நீக்கி விட்டால் கற்பனை பண்ணமுடியாத இழப்பை சந்திக்க வேண்டியது வரும்?
அனுப்புனர் கே .மாணிக்கம் 5/1 காலாங்கரை கோரம்பள்ளம் தூத்துக்குடி 628101 பெறுநர் 1.திரு பாண்டியராஜன் வட்டாரவளர்ச்சி அலுவலர் (வ .ஊ ) தூத்துக்குடி  ஊராட்சி ஒன்றியம் 2.திரு  மரிய அந்தோணி ப்ருஸ்வேல்ட் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் (பொது ) தூத்துக்குடி  ஊராட்சி ஒன்றியம்                                               தகவல் தெரிவிக்கும் நோட்டீஸ் அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் மக்களுக்கு தேவையான செய்திகள் ஒளிவு மறைவு இல்லாமல்  வழங்கவேண்டும் என்றுதான் நிர்வாக ரீதியாக பிரித்து தனி தனி அலுவலமாக அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமித்து உள்ளது .ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காகதேர்ந்தெடுக்கப்பட்டதுதான். மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாகஉருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணிசெய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள்நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே! மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்க...