முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி ஆட்சியரின் இன்றய நிகழ்வுகள்.

ஷ்யாம் நீயூஸ் 31.01.2022  தூத்துக்குடி ஆட்சியரின் இன்றய நிகழ்வுகள்.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உப்பள தொழிலாளர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள ஸ்காட் நிறுவன அலுவலக வளாகத்தில் உப்பள தொழிலாளர்களுடன் ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் கலந்துரையாடல் நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் பெண் தொழிலாளர்கள்  தாங்கள் பணிபுரியும் பல உப்பளங்களில் அடிப்படை வசதிகளான நல்ல குடிநீர் மற்றும் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர உப்பள முதலாளிகளிடம் வலியுறுத்த வேண்டுமென்றும் உப்பளத்தில் பணிபுரியும் போது உப்பில் சூரிய ஒளி எதிரொளித்து கண்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் உப்பு நீரில் தொடர்ந்து பணிபுரிவதால் கால் கைகள்  தோல் நோயால் சேதம் அடைந்து வருவதாகவும் அதற்காக மருத்துவ முகாம் இப் பகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள் அடையாள அட்டை,  ஆதார் இணைப்பு போன்ற முகாம்கள் தங்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் ,தங்கள் குழந்தைகள் நீண்ட தூரம் சென்று அங்கன்வாடியில் படிக்க செல்வது கடினமாக உள்ளது ஆகவே எங்கள் பகுதியில் அங்கன்வாடி கட்டி தர வேண்டும் , 350 க்கு மேற்பட்ட குடும்ப அட்டை உள்ளதால் ரேஷன் கடை ஒன்று இப்பகுதி...

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தினமும் ஐந்து நபருக்கு உணவளிக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சி சார்பாக தொடங்கி வைக்கப்பட்டது.

ஷ்யாம் நீயூஸ் 17.01.2023 எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தினமும் ஐந்து நபருக்கு உணவளிக்கும் திட்டத்தை எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சி சார்பாக தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் ரசிகர்களும் எம்ஜிஆர் அண்ணா திமுக நிறுவனருமான ரவிவர்மா தலைமையில் இன்று முதல் தினமும் 17.01.203 முதல் 17.01.2024)வரை 5 நபர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை  தொடங்கியுள்ளனர். உணவு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி ரஜினி மன்ற தலைவர் விஜய் ஆனந்த் தொடங்கி வைத்தார்.எம்ஜிஆர் தன்னை காண வரும்  நபர்களுக்கு தினமும் உணவளிப்பது அது ஒரு பழக்கமாக வைத்திருந்தார் அதனைப் போன்று தினமும் பசியானவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்தில் தூத்துக்குடியை சார்ந்த நபர்கள் பயன் அடைய விரும்புவோர் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (9751119076,9790444908,9942610616,944495888. மேலும் த்துக்குடியில் கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ப...

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

 ஷ்யாம் நீயூஸ் 13.01.2023 தூத்துக்குடி அருகே ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. தூத்துக்குடி அருகே ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை - ஆன்லைன் ரம்மியை எப்படியாவது தடை செய்யுங்கள் உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டிதந்தனர். தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் அருகே உள்ள இராமநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் இவர் தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். பாலன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார் இந்நிலையில் இந்த ரம்மி விளையாட்டில் ஏற்கனவே ரூபாய் 3 லட்சத்தை இழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலனின் தந்தை ஆவுடையப்பன் பாலனிடம் ரூபாய் 50 ஆயிரத்தை கொடுத்து வங்கியில் கட்டச் செல்லியுள்ளார் ஆனால் பாலன் இந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் போட்டு பணத்தை இழந்துள்ளார் இதன் காரணமாக விரக்தி அடைந்த பாலன் நேற்று தனது நண்பர் செல்போனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூபாய் 50 ஆயிரத்தை இழந்துவிட்டேன் எனவே எனது முட...

தூத்துக்குடி பஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

 ஷ்யாம் நீயூஸ் 13.01.2023 தூத்துக்குடி பஸ் கிளப் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது! தூத்துக்குடியில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று காலை தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் இடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் தலைவர் காதர் மொய்தீன் செயலாளர் அண்ணாதுரை பொருளாளர்  மாரிமுத்து ராஜ் துணைத் தலைவர் லட்சுமணன் இணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் அருள் உள்ளிட்ட பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

மாவீரர் சுந்தரலிங்கனாருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 13.01.2023 மாவீரர் சுந்தரலிங்கனாருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஊராட்சியில் உள்ள கவர்னகிரி ஊராட்சியில் வீரன் சுந்தரலிங்க நகரில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபம் அமைந்துள்ளது அந்த மணிமண்டபத்தில் வீரன் சுந்தரலிங்கனாருக்கு மார்பளவு கற்சிலை உள்ளது அதனை முழு உருவ வெண்கல சிலையாகவும் நூலகமும் அமைத்து தரும்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் பதிலளிக்கையில் இடத்தை நேரடியாக பார்த்து நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்

மதுக்கடைகளுக்கு இரண்டு நாள்

 ஷ்யாம் நீயூஸ் 12.01.2023 மதுக்கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை  தமிழ்நாடு வாணிப கழகம் அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் 16 .01 .2023  திருவள்ளூர் தினம், 26.01.2023  குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் மது கடைகளை மூட தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.  மற்றும் அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் மதுக்கடைகள் மூடியிருப்பதை உறுதி செய்வதை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

 ஷ்யாம் நீயூஸ் 10.01.2023 தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காமராஜர் பெயரை புறக்கணித்த ஆளுநர் ஆர்என் ரவியை எதிர்த்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த 7ம் நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காமராஜர் பெரியார் அண்ணா அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பெயரை உச்சரிக்காமல் புறக்கணித்தார் இதனை கண்டித்து சமத்துவ மக்கள் கழகம் சார்பாக வருகின்ற 12 .1 .2023 அன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் சமத்துவ மக்கள் கழகம் மாநில தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆணைப்படி தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு கட்சி மாநில துணைச் செயலாளர் ரெ. காமராசு  மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சமத்துவ மக்கள் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் திருமணத்தை மறைத்து இன்னொருவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் காவல்துறை

 ஷ்யாம் நீயூஸ் 04.01.2023 முதல் திருமணத்தை மறைத்து இன்னொருவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டும் காவல்துறையினர். தூத்துக்குடி சுந்தரராமபுரம் பகுதியைச் சார்ந்தவர் சாந்தி, லட்சுமணன் தம்பதியர். இவர்களது ஒரே மகள் சுந்தர மீனாட்சி என்ற ஆர்த்தியை சென்னையைச் சார்ந்த மணிகண்டன் என்பவருக்கு 2013 ஆம் ஆண்டு மணமுடித்துக் கொடுத்தனர். இந்த தம்பதியினருக்கு மிருதுள் முருகன் என்ற ஆண் குழந்தை உள்ளது குழந்தை பிறந்த சிறிது நாளில் வரதட்சணை கேட்டு சுந்தர மீனாட்சியை கணவர் மணிகண்டன் மற்றும் அவரது தாய் தந்தையினர் கொடுமைப்படுத்தியதாக சுந்தரம் மீனாட்சி மற்றும் அவரது தாய் தந்தை கூறுகின்றனர். இது சம்பந்தமான புகாரை அம்பத்தூர் காவல் நிலையத்தில் பதிவு செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பின்னர் மணிகண்டன் ஏற்கனவே திருமணம் ஆகி 8 வயது குழந்தையுடன் இருக்கும் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா தேவி என்கின்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார் என்றும் முதல் மனையிடம் விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு இந்திய தூதரகத்தை ஏமாற்றி தாராதேவி தான் முதல் மனைவி...

தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் செந்தில்ராஜ்

ஷ்யாம் நீயூஸ் 05.01.2023 தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் செந்தில்ராஜ். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று   அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப.,  தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்  உடன் இருந்தார்.

தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

ஷ்யாம் நீயூஸ் 04.01.2022 தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி! தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது மக்கள் இந்த அரசு மீது கோபத்தில் இருக்கிறார்கள் எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என தூத்துக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்   தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக  அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் , முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, எம்ஜிஆரின் பிறந்த தின விழா, மற்றும் அதிமுகவின் 51 வது ஆண்டு பொன்விழாவை  முன்னிட்டு வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி மதுரையில் 51 எழை,எளிய மக்களுக்கு நடைபெறும்  சமத்துவ சமு...

திருச்செந்தூர் பள்ளி மாணவன் மர்ம மரணம் தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

 ஷ்யாம் நீயூஸ் 04.01.2023 திருச்செந்தூர் பள்ளி மாணவன் மர்ம மரணம் தலைமை ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே தோப்பூரில் பள்ளி வளாகத்திற்குள்  மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து அவனது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்பூரில் உள்ள ஆதிதிராவிட நலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர் அஜய்குமார் (10) .  அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த அஜய்குமார் உள்ளிட்ட ஐந்து மாணவர்களை தலைமை ஆசிரியர் கனகவள்ளி நேற்று முன்தினம் பள்ளிக்கு வரவழைத்து அங்கே புல் அகற்றும் வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர். அப்போது, அஜய்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவனது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடத்தி...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதவில்லாத கழிவறைகள் நோயாளிகள் அவதி!

ஷ்யாம் நீயூஸ் 02.01.2022 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கதவில்லாத கழிவறைகள் நோயாளிகள் அவதி! தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்க்காக உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாமல் உள்ளதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு உதவிக்கு இருக்கும் உறவினர்களும் மிகுந்த சிறமத்திற்க்கு உள்ளாகியுள்ளனர்.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் நோய் உள்பிரிவில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என பிரிக்கபட்டு ஒரே வார்டில் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டில் உள்ள கழிவறையில்  கதவுகள் இல்லாமல் உள்ளன.மற்றும் கதவு உள்ள கழிவறையில்,குளியல் அறையில்  உள் தாழ்பா இல்லாமல் உள்ளன.இதனால் பெண் உள்நோயாளிகள், துணைக்கு இருக்கும் உறவினர்கள் கழிவறை மற்றும் குளியல் அறையை அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தூத்துக்குடி சுகாதார அதிகாரிகள் சரி செய்து தரும்படி நோயாளிகள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.