முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்

 ஷ்யாம் நியூஸ்

19.03.202.

தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.


தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகராட்சி மேயர் துணை மேயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா தெற்கு ராஜா தெருவில் உள்ள சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் ஜோ.பிரகாஷ் தலைமை வகித்தார்.

      நிகழ்ச்சி ஏற்புரையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொழில் வளம் பெருகுவதற்கு துணையாக இருக்கும் அரசு. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

      அதே போல் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்குரிய மாநிலமாக உருவாகி வருகிறது. அதற்கும் அரசு விதிமுறைகளின் படி உதவிகள் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி தொழில் வளம் பெருகும் போது தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும். அதே போல் தூத்துக்குடி மாநகரில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன.

      புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் மாசு இல்லாத தொழிற்சாலைகளையும் தொழில் நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை நீங்கள் கையாளும் போது அதற்கு அரசின் சார்பில் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஓத்துழைப்பு தரும். மாநகர பகுதி முழுவதும் பசுமையான மாநகரமாக உருவாக்க எல்லா வகையில் வளர்ச்சியடைவதற்கு நீங்களும் ஓத்துழைப்பு தரவேண்டும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் ஒடி வருவேன் என்று பேசினார். சங்க பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து, தொழிலதிபர் டி.ஏ தெய்வநாயகம், சிட்டி லாரி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

      விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, சங்க நிர்வாகிகள் பிரேம்வெற்றி, மாரியப்பன், தமிழரசு, பாலகிருஷ்ணன், வக்கீல் செங்குட்டுவன், மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...