தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்
ஷ்யாம் நியூஸ்
19.03.202.
தூத்துக்குடியில் தொழில்வளம் பெருக வர்த்தக தொழிற்சங்கம்துணை நிற்க வேண்டும் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகராட்சி மேயர் துணை மேயர் மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா தெற்கு ராஜா தெருவில் உள்ள சங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைவர் ஜோ.பிரகாஷ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சி ஏற்புரையில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் தொழில் வளம் பெருகுவதற்கு துணையாக இருக்கும் அரசு. சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச பர்னிச்சர் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
அதே போல் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தான் தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிடவும், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாடு வாழ் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்குரிய மாநிலமாக உருவாகி வருகிறது. அதற்கும் அரசு விதிமுறைகளின் படி உதவிகள் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சி தொழில் வளம் பெருகும் போது தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும். அதே போல் தூத்துக்குடி மாநகரில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன.
புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கும் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில் மாசு இல்லாத தொழிற்சாலைகளையும் தொழில் நிறுவனங்களையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் தொடங்குவதற்கான விதிமுறைகளை நீங்கள் கையாளும் போது அதற்கு அரசின் சார்பில் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஓத்துழைப்பு தரும். மாநகர பகுதி முழுவதும் பசுமையான மாநகரமாக உருவாக்க எல்லா வகையில் வளர்ச்சியடைவதற்கு நீங்களும் ஓத்துழைப்பு தரவேண்டும் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் ஒடி வருவேன் என்று பேசினார். சங்க பொதுச்செயலாளர் சங்கர் மாரிமுத்து, தொழிலதிபர் டி.ஏ தெய்வநாயகம், சிட்டி லாரி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், உள்பட பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, சங்க நிர்வாகிகள் பிரேம்வெற்றி, மாரியப்பன், தமிழரசு, பாலகிருஷ்ணன், வக்கீல் செங்குட்டுவன், மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.