முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் திறந்து வைத்தார் கலெக்டர் செந்தில்ராஜ் !

 தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கையை ஏற்று புறக்காவல் நிலையம் திறந்து வைத்தார் கலெக்டர் செந்தில்ராஜ் !



பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறக்கவேண்டும்  என்று நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது .தற்போது  மீனவர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  தீர்மான நகல்களை தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இருவரிடமும் மீனவர் சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது கோரிக்கை ஏற்று கொண்ட கலெக்டர்  மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  இருவரும் இன்று தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை தொடக்கி வைத்தனர் .அப்போது கலெக்டர் பேசும் போது இந்த புறக்காவல் நிலையம்  மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிக்க உதவும் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படால் இருக்க உதவியாய் இருக்கும் என்றும்  மட்டுமல்லாது பிடித்துவரும் மீன்களை நல்லவிலை வரும் பொது விற்பதற்காக விரைவில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட உள்ளது என்றும்  .தூத்துக்குடி மாவட்டத்திலே தூத்துக்குடி மீன் பிடி துறைமுத்தில்தான் அதிக அளவு மீன் பிடிக்கப்படுகிறது இங்கு இருந்து பெங்களூரு ,கேரளா ,சென்னை போன்ற நகரங்களுக்கு  ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் கூறினார்  .மற்றும் தொடர் காவல்பணிகளுக்குள்  மத்தியில் என் கோரிக்கையை ஏற்று  48 மணி நேரத்திற்குள் புறக்காவல் நிலையத்தை ஏற்பாடு செய்து தந்த கண்காணிப்பாளர் ஜெய்குமாருக்கு எனது  நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார் இதில் தூத்துக்குடி டி எஸ் பி கணேஷ் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த ராஜன் ,உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் ,உதவி ஆய்வாளர் முத்துலெட்சுமி ,போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ,போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் , மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மீனவ பொதுமக்கள் கலந்துகொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...