முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஸ் கட்டணம் உயர்வு இல்லை தூத்துக்குடியில் நாளை முதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளது!

ஷ்யாம் நியூஸ் 31.05.2020 தூத்துக்குடியில் நாளை முதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளது! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வவுகளை அறிவித்துள்ளார்.தமிழகத்தில் பஸ் போக்குவரத்தை ஆறு மண்டலங்களாக பிரித்து  பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளித்தது ள்ளார்.இதன் அடிப்படையில் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்கள் ஒரே போக்குவரத்து மண்டலமாக அறிவித்துள்ளார் இந்த நான்கு மாவட்டங்களில் இந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் எங்கு வேண்டுமானாலும் பஸ்ஸில் சென்று வரலாம் .மற்ற மண்டலங்களில் உள்ள மாவட்டங்களுக்கு செல்ல  இ பாஸ் எடுத்துதான் செல்லமுடியும்.தூத்துகுடியில் பஸ் போக்குவரத்து குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த மண்டலத்தில் இயக்கப்படும் மொத்த பஸ்களில் 50% அரசு பஸ்கள் இயக்க தயாராக உள்ளது.ஒரு பஸ்ஸில் 60% பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும் அதாவது ஒரு பஸ்ஸில் 35 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் .பஸ் ஓட்டுனர் நடத்துனர் ஆகியோரும் நோய்த்தடுப்பு  பாதுகாப்புட...

தூத்துக்குடியில் நடுரோட்டில் ஓடும் சாக்கடை! மாநகராட்சி நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ஷ்யாம் நியூஸ் 21.05.2020 தூத்துக்குடியில் நடுரோட்டில் ஓடும் சாக்கடை! மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை! தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெருவில் நடுரோட்டில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. கொரானா அச்சம் இப்போதுதான் குறைய ஆரம்பித்து உள்ளது.மக்கள் ஊரடங்கை முழுமையாக முடித்துவிட்டு தங்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியில் வருகின்றனர். தூத்துக்குடி சுப்பையா முதலியார்புரம் 4வது தெரு மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் முன்பு கழிவு நீர் தொட்டி நிறைந்து சாக்கடை நீர் நடுரோட்டில் ஓடுகிறது 10 நாட்களுக்கு மேலாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. வீடு வீடாக வந்து கொசு உற்பத்தியாகும் நோய்வரும் என்று குளிர்சாதனப் பெட்டி அண்டா குண்டாவை திறந்து பார்க்கும் ஊழியர்களுக்கு நடுத்தெருவில் ஓடும் சாக்கடை தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.அந்த தெருவில் பொதுமக்கள் நடந்து செல்வதால் நோய்வரும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள்கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலி கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குனரை எதிர்த்து விரைவில் போராட்டம் !

ஷ்யாம் நியூஸ்  27.05.2020 திருநெல்வேலி  கலை பண்பாட்டுத்துறை  உதவி  இயக்குனரை  எதிர்த்து  விரைவில்  போராட்டம் ! தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் தலைவர்  தூத்துக்குடியில் செ.ஜெகஜீவன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.      இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது..... தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம், 2008ல், கலை பண்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டது இதில், 33 ஆயிரத்து, 575 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு, அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும், நலத் திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில், 2019 செப்., 17ல் அரசாணை வெளியிடப்பட்டது.     நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள, 33 ஆயிரம் பேருக்கு மட்டுமே, கொரோனா நிவாரண நிதியான, 1,000 ரூபாய்,2 முறை வழங்கப்பட்டுள்ளது.                                                          ...

கொரானா நாற்பது புத்தம் வெளியீட்டு விழா!துத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்!

  ஷ்யாம் நியூஸ் 26.05.2020 கொரானா நாற்பது புத்தம் வெளியீட்டு விழா!துத்துக்குடி டி எஸ் பி பிரகாஷ் தொடங்கி வைத்தார்! தூத்துக்குடி சென்சேவியர்ஸ் பள்ளி தமிழ் பேராசிரியரும் எழுத்தாளருமான நெய்தல் யூ அன்டோ எழுதிய கொரானா நாற்பது என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் புத்தகத்தை வெளியிட்டார் முதல் பிரதியை அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன் பெற்றுக்கொண்டார்.இந்நூல் தமிழகத்தில் கொரானாவை மையமாக வைத்து வெளிவரும் முதல் நூல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நெய்தல் யூ அன்டோ  கூறுகையில்; உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் தவிர்த்து, இத்தொற்றை குறித்த விழுப்புணர்வு, மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, எதிர்ப்பு சக்தி நிறைந்த நம் பாரம்பரிய உணவுமுறை பற்றிய விளக்கங்களும் கொரோனா நாற்பது நூலில்  விவரித்துள்ளதாகவும், மக்கள் இதை படித்து பாதுகாப்பான ஆரோக்கிய வாழ்வை வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் மணவை ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார் இவ்விழாவில் மரியதாஸ்,...

தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஷ்யாம் நியூஸ் 23.05.2020 தூத்துக்குடி அடையல் ராஜரத்தினம் நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடியில் கொரானா தடுப்பு பணியில் ஓய்வின்றி பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவி வருகிறது தூத்துக்குடி ராஜ ரத்தினம் அறக்கட்டளை.இந்த வகையில் இன்று காலையில் நடந்த நிகழ்ச்சியில்் ராஜ ரத்தின நாடார் அறக்கட்டளை சார்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசி காய்கனி பருப்பு தொகுப்பு பைகளை ஆதிதிராவிட மக்கள் கழக நிறுவன தலைவரும்அறக்கட்டளை தலைவருமான ஸ்டிபன் எ.செந்தமிழ் பாண்டியன் வழங்கினார் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வினிஸ்டன், மாரியப்பன் , சோலை ராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர் .ஸ்டெர்லைட் விவகாரகத்தில் அரசு இரட்டைவேடம் போடுவதாக சி பி ம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் குற்றச்சாட்டு !

 ஷ்யாம் நியூஸ்  22.05.2020 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்  .ஸ்டெர்லைட் விவகாரகத்தில்  அரசு இரட்டைவேடம் போடுவதாக சி பி எம்  மாவட்ட செயலாளர் அர்ஜுனன் குற்றச்சாட்டு ! தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக   ஏராளமான பொதுமக்கள் ஆட்சியரிடம் மனுகொடுக்க சென்றனர் .அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் பொதுமக்கள் 15 நபர்கள் கொல்லப்பட்டனர் . இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடி  சீல் வைத்தது தமிழக அரசு  . துப்பாக்கி சூடு நடந்த மே 22 ஐ தூத்துக்குடி  பொதுமக்கள் துக்கத்தினமாக அனுசரித்து வருகின்றனர் .இதனால் வன்முறை எதுவும் நடந்து விடக்கூடாது என்பாதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்டு பலத்த பாதுகாப்பு  போடப்பட்டு உள்ளது . இன்று தூத்துக்குடி சி பி ம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன் தலைமையில் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த 15 நபர்களுக்கும் மெழுகுப்பத்தி ஏற்றி இரண்டாம் ஆண்டு வீரவணக்கம் செலுத...

தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் சேவையில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி! முன்னேற்ற பாதையில் கிராம பஞ்சாயத்து பொதுமக்கள் பாராட்டு !

ஷ்யாம் நியூஸ்  20.05.2020 தட்டுப்பாடு இல்லாத தண்ணீர் சேவையில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி!  முன்னேற்ற பாதையில் கிராம பஞ்சாயத்து  பொதுமக்கள் பாராட்டு ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி ஓன்று . இந்த கிராம பஞ்சாயத்தில் தலைவராக பொறுப்பேற்றுஇருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சின்னத்துரை பொதுமக்களின் அடிப்படை தேவைகளை  பூர்த்திசெய்வதில் அதிரடி காட்டிவருகிறார் . சுகாதாரம் , சாலை சீரமைப்பு ,தெருவிளக்கு ,சீரான குடிநீர் விநியோகம் என மின்னல்வேகத்தில் பணிகளை நிறைவேற்றி வருகிறார் .இந்த வகையில் புதுப்பச்சேரி  , மேலபாண்டியபுரம் கிராமங்களுக்கு   நீர் ஏற்றும்  நிலையத்தில் ஏற்பட்ட பழுதை 24 மணி நேரத்தில் சரி செய்து மக்களுக்கு  குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தார் இப்பணியின் பொது உதவியாளர் சின்ன முனியசாமி ,ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகன் மற்றும் கிராம முக்கிஸ்தர்கள் சக்திவேல் ஆகியோர்  இருந்தனர் . இரவு பகல் பாராமல் மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும்  த...

தூத்துக்குடியில் பழைய தங்கம் சேதாரம் என ஏழைகளிடம் பணம் பறிக்கும் நகைக்கடைகள் !

SHYAM NEWS 19.05.2020 தூத்துக்குடியில் பழைய தங்கம் சேதாரம் என ஏழைகளிடம் பணம் பறிக்கும் நகைக்கடைகள் ! சாமானிய மக்கள் தங்கள் உழைப்பில் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு குண்டு மணி தங்கமாவது காதில் மூக்கில் ஜொலிக்க வேண்டும் என நகைக்கடைகளில் நகை வாங்க வருகின்றனர் .பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பிள்ளைக்களின் வருங்காலங்களை மனதில் வைத்து இருக்கின்ற பணத்திற்கு நகை வாங்குகின்றனர் மீண்டும் சிறுது பணம் சேர்த்து ஏற்கனவே வாங்கிய நகையோடு புதுநகையை வாங்க வரும்போது பழைய தங்கம் என கூ கூறி பவுனுக்கு 5000 ரூபாய் குறைத்தும் புது நகைக்கு 15% 18% செய்கூலி என்றும் ரூபாய் 5000 அதிகரித்தும் சாமானிய மக்களை தூத்துக்குடியில் அன்னையின் பெயரில் உள்ள நகைக்கடையினர் ஏமாற்றி வருகின்றனர் .டாஸ்மாக் கடையை திறந்து மக்களை ஏமாற்றும் அரசு என கூறும் சமூக ஆர்வலர்கள்  தங்கமான நவீன கொள்ளையை கொண்டுகொள்ளாமல் அரசியல் பேசுகின்றனர்? ஏழைகளின் சேமிப்பை சுரண்டினால்தான் தங்கள் கொழுத்து வாழலாம் என நினைக்கும் அதிபர்கள் .அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு  சில நலத்திட்டங்களை  செய்தால் போ...

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் பேய்காற்று!பல லட்சம் வாழை மரங்கள் நாசம்!

 SHYAM NEWS 19.05.2020 தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் சூறைக்காற்றால் வாழைபயிர் சேதம் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம். காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை! தூத்துக்குடியில் நேற்று திடிரென்று வீசிய சூறைக்காற்று விசியது.கோரம்பள்ளம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தன இந்த நிலையில் அத்திமரபட்டி,காலான்கரை,வீரநாயக்கன்தட்டு ,முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதிகளில் வீசிய பேய்காற்றில் பல ஏக்கர் வாழைகள் தாருடன் சாய்ந்தும் ஒடிந்தும் கீழே விழுந்ததில் விவசாயிகளுக்கு பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்தன.  பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமால் இருந்த கோரம்பள்ளம் குளத்தை கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்  குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தியதில் போதுமான அளவு தண்ணிர் இருந்ததால் விவசாயிகள் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்தும் நம்பிக்கையுடன் வாழைபயிரிட்டனர்.நேற்று வீசிய பேய்காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததில் அப்பகுதி விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வேளான்மைதுறை அதிகாரிகள் சேதம் அ...

கோடை வெயில் தாகம் தணிக்க ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் ஆட்சியரிடம் வழங்கியது தூத்துக்குடி ராஜரத்தினம் அறக்கட்டளை !

 கோடை வெயில் தாகம் தணிக்க ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை ஆட்சியரிடம் வழங்கியது தூத்துக்குடி ராஜரத்தினம் அறக்கட்டளை ! தூத்துக்குடியில் அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் ஒரு லிட்டர் அளவு உள்ள ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் தூத்துக்குடி ஆட்சியரிடம் வழங்கினார் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டியன். கொரானா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறந்துள்ளது இதனால் மக்கள் வெளியில் வராமல் நோய்பரவலை தடுக்க வீட்டில் தனிமை படுத்தி வாழ்ந்து வருகின்றனர்.மற்றும் அரசு ஊழியர்கள், காவல்துறை பணியாளர்கள்ண் சுகாதாரஊழியர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள்,மின்சார ஊழியர்கள் என அனைவரும் கொரானா தடுப்பு பணியில் ஓய்வின்றி பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருப்பதை மனதில் கொண்டு கொரானா தடுப்பு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும்பொதுமக்கள்  பத்திரிகையாளர்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் ஒரு லிட்டர் அளவு உள்ள ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களை அடையல் ராஜரத்தினம் அவர்களின் பேரன் லீனிஸ் நாடார்  பிறந்த நாளை முன்னிட்டு அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் செந்தமிழ்பண்டி...

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருமாதத்திற்கான உணவு பொருட்களை வழங்கியது அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை !

SHYAM NEWS 14.05.2020 தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை வழங்கியது   அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை ! தூத்துக்குடி ராஜரத்தினம் பேரன் லீனிஸ் நாடார்அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பாக 50 மாற்று திறனாளிகள் குடுமபத்திற்கு  ஒரு  மாதத்திற்கும் மேலாக பயன்படுத்தும் அரிசி ,காய்கறிகள் ,மசால்பொருட்கள் ,சமையல் எண்ணெய் ,கோதுமை மாவு மற்றும் பல பொருட்களை அறக்கட்டளை நிர்வாகி ஸ்டீபன் செந்தமிழ்  தூத்துக்குடி லூசியா இல்ல பங்கு தந்தையிடம் வழங்கினார் . கொரோனோ வைரஸ்  காரணமாக ஊரடங்கில் வேலை இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு ராஜரத்தினம் அறக்கட்டளை உணவு பொருட்கள் வழங்கி வருகிறது அதுபோல் தூத்துக்குடி லூசியா இல்லத்திற்கும் 50 குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கிய ராஜரத்தினம் அறக்கட்டளை நிர்வாகி ஸ்டீபன் செந்தமிழ்க்கு பங்கு தந்தை நன்றி தெரிவித்தார் .இந்த நிகழ்ச்சியில்  சோலைராஜ் செல்வகுமார் கணேசன் முரளி முத்துகிருஷ்ணன் மாரியப்பன் துரைப்பாண்டி ஆகிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்....

தூத்துக்குடியில் காவலர்களுக்கு 30000 குடி தண்ணீர் பாட்டில் வழங்கியது இராஜரத்தினம் அறக்கட்டளை!

ஷ்யாம் நியூஸ் 09.05.2020 தூத்துக்குடியில் காவலர்களுக்கு 30000 குடி தண்ணீர் பாட்டில் வழங்கியது இராஜரத்தினம் அறக்கட்டளை!  தூத்துக்குடியில் இராஜரத்தினம் நாடாரின்.. பேரன்லினீஸ் நாடார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்க் கிருமி பரவாமல் மக்களைக் காத்திட்டஇரவு பகல் பாராமல  மக்களுக்காக உழைத்தமாவட்ட காவல்துறை நல் உள்ளங்களை பாராட்டும் விதமாக அடையல் ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக 30,000 குடிநீர் பாட்டில்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அருண் பாலகோபாலன் ஆலோசனையின் பேரில் ஆயுதப்படை டிஎஸ்பி மாரியப்பன் அவர்களிடம் அறக்கட்டளை  தலைவரும் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற நிறுவனத்தலைவர் ஸ்டீபன் செந்தமிழ் பாண்டியன் அவர்கள் வழங்கினார்கள்

'விவசாயிகள் இலவசமாகக் களிமண், வண்டல்மண் பெறலாம்'- தமிழக அரசு அறிவிப்பு!

SHYAM NEWS 06.05.2020 விவசாயிகள் இலவசமாகக் களிமண், வண்டல்மண் பெறலாம்'- தமிழக அரசு அறிவிப்பு! நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண்ணை விவசாயிகள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் நீர்நிலைகளில் உள்ள மண்ணை மட்பாண்டம் செய்வோரும் இலவசமாகப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தங்கள் கிராமத்திலோ, அருகில் உள்ள கிராமத்திலோ இலவசமாக மண்ணைப் பெறலாம் என்றும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களில் இலவசமாக மண் பெறலாம். மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று மணலை எடுக்கலாம் என்று அரசு கூறியுள்ளது.

மின் விளக்குகளால் மிளிரும் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி பகுதி !பஞ்சயாத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு !

ஷ்யாம் நியூஸ்  04..05.2020 மின் விளக்குகளால் மிளிரும் ஜம்புலிங்கபுரம் ஊராட்சி  !பஞ்சயாத்து தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஜம்புலிங்கபுரம் ஊராட்சி .இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்புலிங்கபுரம் ,ஜம்புலிங்கபுரம் காலனி ,மேல வீரபாண்டியபுரம் ,புதுப்பேச்சேரி ,புதுப்பேச்சேரி காலனி,எஸ் புதூர் கிராம பகுதிகளில் தெருவிளக்குகள் ,மின்கம்பங்கள் போன்றவை பழுதடைந்து பொதுமக்கள் அடிப்படை வசதியான மின்சாரம் சரிவர கிடைக்காமல் இருந்தனர் .கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜம்புலிங்கபுரம் பஞ்சாயத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வராணி சின்னதுரை  மக்களின் அடிப்படை உரிமையை பூர்த்தி செய்யும் விதமாக பஞ்சாயத்துக்கு உட்பட்ட அணைத்து பகுதிகளிலும் பழுதான மின் விளக்குகளை நீக்கிவிட்டு புது விளக்குகள் பொருத்தி ஒளிரவிட்டார் .நீண்டநாட்களுக்கு பிறகு பஞ்சாயத்தின் அணைத்து கிராம பகுதிகளிலும் இரவு நேரத்தில் மின் விளக்கு எரிவதால் விஷப்பூச்சிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் திருட்டு பயம் இல்லாமல் இருக்கலாம் என்றும் தங்களின்  நீண்...

அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் சாடல்!

ஷ்யாம் நியூஸ் 02.05.2020 அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் சாடல்!  ஆளும் அதிமுக கட்சியின் அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? ஆளும் கட்சியினருக்கு இல்லையா? இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் உழைக்கும் தொழிலாளர்களின் உத்தமமான  தினத்தையும் உன்னதமான தினத்தையும் கொண்டாடினால் மக்கள் கூடுவார்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க மாட்டார்கள் என்று கொரானா சட்டத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் தூத்துக்குடி காவல்துறையினரும் மாநகராட்சியும் மக்களை குறிப்பாக தலித் பகுதியில் அச்சுறுத்தல் செய்தது  .ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் அவர்கள் கட்சி விளம்பர செயல்பாட்டுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல்  மற்றும் சட்டத்தை மதிக்காமலும்   அதிகமான மக்களை கூடச் செய்ததோடு  சமுக இடைவெளி கடைபிடிக்காமல் அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களை சந்தித்தார்அதற்க்கு காவல்துறையினரும் மாநகராட்சி  ஊழியர்களும் துணைபோவது ஏனோ? சமுக இடைவ...