முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ்

25.03.2023

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற  பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் KSPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சத்யராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.எஸ்.பி.தேன்ராஜ், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குருதி கொடையாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உதயநிதி மன்ற  நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பலரும் இம்முகாமில் ரத்ததானம் செய்தனர். அரசு மருத்துவமனை ரத்ததான பிரிவு தலைவர் டாக்டர் சாந்தி தலைமையிலான ரத்த தான பிரிவு அலுவலர்கள் ரத்த தானம் பெற்றனர்.


முகாமை தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பால்துரை, மாவட்ட பொருளாளர் சேக் முகமது, மாவட்ட மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜோசப் ஜான்,

மாவட்ட துணை பொருளாளர் செந்தில், ராஜா, மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், திருச்செந்தூர் சுரேஷ்,  மாவட்ட துணைச் செயலாளர்கள் காளீஸ்வரன், முருகன், புதுக்கோட்டை சிவமுருகன்,  மாநகர செயலாளர் APR.ஜோ, மாநகர துணைத் தலைவர் VJ.   அருண், மாநகர துணைச் செயலாளர் டினோ, மாநகர பொருளாளர் முகமது, மாநகர துணை பொருளாளர் சுப்பிரமணியன்,  விளாத்திக்குளம் ஒன்றிய தலைவர் ரவி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் கார்த்தீஸ்

மற்றும், திமுக இளைஞரணி மை சார்ந்த செந்தில்,  மட்டகடை சகிலன், தொழிலதிபர் வசந்த், விமல் ஜீ, சிலுவைப்பட்டி பாரி, மாணிக்கபுரம் விஜய்,   சிவகுமார், தினகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு இம்முகாமை ஒருங்கிணைத்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...