முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ்

03.03.2023

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி வழக்கறிஞர் பி கே முத்துகுமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என  வழக்கறிஞர்கள்  நீதிமன்றம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் பி கே முத்துகுமார் இவரை கடந்த 22.02.2023  அன்று கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தில் வைத்து ஒரு கும்பல் அரிவாள் கத்திகளால் தாக்கி படு பயங்கரமாக படுகொலை செய்தனர். படுகொலை செய்த குற்றவாளிகள் என சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனாலும் முக்கிய குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் குற்ற சாட்டி வந்தனர். இந்த நிலையில்  முக்கியமான குற்றவாளிகளை  விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தலைவர் செங்குட்டுவன் கூறுகையில் வழக்கறிஞர் பி கே முத்துக்குமார் படுகொலை செய்தது மிகவும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் சிலர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனாலும் முக்கியமான குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் மெத்தனமாக  செயல்பட்டு வருகின்றனர் விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமார் ஆங்கில புலமையுள்ள மிகத் திறமை வாய்ந்த வழக்கறிஞர் என்றும் வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருவதாகவும்  வழக்கறிஞர்களை பாதுகாக்கும் சட்டம் தமிழக அரசு ஏற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் செல்வின் மச்சோடா செயலாளர் மார்க் இணை செயலாளர் ரமேஷ் பொருளாளர் ராஜா ஒழுங்கு நடவடிக்கை உறுப்பினர் குழு மணிகண்டன் ராஜா, ஜவகர், சுப்பிரமணிய ஆதித்தன், அதிசயகுமார் ,சுப மாடசாமி, சிவராஜ் , பழனிவேல்ராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...