முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்.

 ஷ்யாம் நீயூஸ்

24.03.2023

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்.

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  இன்று (24.03.2023) துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், காசநோய் அறிகுறிகளை கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டார். மேலும், காசநோய் விழிப்புணர்வு தபால்தலையினை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில், காசநோயை அறவே ஒழித்து, காசநோய் இல்லா உலகை உருவாக்க, இந்தியக் குடிமகனாகிய நான் பாடுபடுவேன். என் குடும்பம் மற்றும் ஊரில் யாருக்காவது இருமல், காய்ச்சல், எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால்கூட அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்துச்சொல்லி மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன். காசநோய், கிருமியால் வரக்கூடிய ஒரு தொற்று நோய் என்பதால், காசநோயாளிகளை துச்சமாக எண்ணமாட்டேன். மற்றவர்களையும் எண்ணவிடமாட்டேன். காசநோயாளிகளை ஒதுக்கி வைக்காமல் அன்புடன் அரவணைத்து ஆறுதல் அளிப்பேன். காசநோய் ஒழிப்பில், என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு, காசநோயை முற்றிலும் ஒழித்திடவும், "காசநோய் இல்லா தமிழகம்" என்ற இலக்கினை 2025க்குள் அடையவும் பாடுபடுவேன் என்ற ஏற்றுக்கொண்டனர். உலக காசநோய் ஒழிப்பு உறுதிமொழியினை இந்த முகாமில் தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசம்) மரு.சுந்தரலிங்கம், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சிவகுமார், தூத்துக்குடி இணை இயக்குநர் நலப்பணிகள் மரு.கற்பகம், தூத்துக்குடி துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.பொற்செல்வன், தூத்துக்குடி துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (தொழுநோய் மரு.யமுனா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்

ம.செந்தில்குமார், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அவர்களின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...