முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

ஷ்யாம் நீயூஸ்
26.03.2023

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை


     தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெசியா வரவேற்புரையாற்றினார்.
    மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த மாநகராட்சி பள்ளியில் வருகை குறைவாக இருந்தது. சில குறைபாடுகளும் இருந்ததாக கூறினார்கள். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அந்த குறைபாடுகளை எல்லாம் போக்குவதற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்ட பின் மாணவ மாணவிகளின் வருகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் இந்த பள்ளியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு உங்களுக்கு பல அறிவுரைகளை இங்கு வந்து கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் நான் உள்பட கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்துள்ளோம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் அது போல் உங்களுடைய வளர்ச்சிக்கு பள்ளிப்படிப்பு முக்கியம் அதே வேளையில் பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பள்ளி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நம்முடைய முதல்வர் ஆட்சியில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஓதுக்கீடு செய்து எழுத்தறிவு இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறார். உங்களுடைய ஆசிரியரும் மெழுகுவர்த்தியை போல் உருகி உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தாய் தந்தையர்களின் நல்ல அறிவுரைகளை கேட்டு எதிர்காலத்தில் பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும் அதன் மூலம் தமிழகம் பெருமை கொள்ள வேண்டும் என்று பேசினார்.
கடந்த கல்வி ஆண்டில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் சிலம்பாட்டம் நாடகம் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு நிகழ்ச்சி கலைநிகழச்சிகள் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், கவுன்சிலர்கள் பாப்பாத்தி, வைதேகி, முன்னாள் கவுன்சிலர் பால சுப்பிரமணியன், ஆதவா அறிக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன், முன்னாள் மாணவர்கள் சுபாராமன், தர்மராஜ், மயில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரலட்சுமி, துணைத்தலைவர் கர்ணராஜ், உறுப்பினர்கள் கண்ணன், நாகராஜ், லாரன்ஸ், சந்திரலேகா, பாக்கியலட்சுமி, சோனியா, விஜில்டா, பபிதா, இன்பன்ஷா, முத்துக்கனி, சிறப்பு ஆசிரியர் ராஜா சண்முகம் சாரோன், தொண்டு நிறுவனர் தனராஜ், விகேன்டிரஸ்ட் உறுப்பினர் சீனிவாசன், தோள் கொடு தோழா அமைப்பாளர் முனைவர் மலைராஜன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கீதாஞ்சலி, மாரிப்பிரியா, ஷாலினி, மெர்லின்,  சோபியா, வானவில் மன்ற கருத்தாளர் அருணாஜோதி, பெண்குழந்தைகளுக்கு காராத்தே பயிற்சியாளார் ஜாபர்உசேன், ஆசிரியர்கள் அமலி, முத்துகற்பகம், சங்கரி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் பிரபாகர், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.   ஆசிரியர் ஜெபா எபனேசர் நன்றியுரையாற்றினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...