முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக நீதியா! ஜாதி நீதியா அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்து தலைவி மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர்!

                          


ஷ்யாம் நீயூஸ் 

30.11.2021

சமூக நீதியா! ஜாதி நீதியா! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி! மற்றும் பஞ்சாயத்து துணை தலைவா்.



 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர் இவர் 01 .06.1996 முதல்  அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று பணி செய்து வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் அப்போதைய தலைவர் தெய்வநாயகம் மற்றும் உபதலைவர் அதிசயராஜ் இருவர் மீதும் நிதி கையாடல் செய்ததற்காக நடவடிக்கை எடுத்தார் அப்போது தவறுகளை மறைப்பதற்கு பஞ்சாயத்து செயலராக இருந்த பரமசிவனிடம் சில கோப்புகளை அழிக்க கேட்டுக்கொண்டுள்ளார் அதிசயராஜ். அதற்கு உடன்படாத காரணத்தால் தற்போது பஞ்சாயத்து தலைவியாக இருக்கும்  அதிசயராஜுன் மனைவி செல்வ பிரபாவையும் துணை தலைவா் பொன்மாரி செல்வராஜையும்  வைத்து பழிவாங்கும் நிகழ்ச்சியில்  இறங்கியுள்ளார் மற்றும் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு அலுவலர் அலுவலகத்தில் சரிக்கு சமமாக அமர்வதை விரும்பாத அதிசயராஜ் மற்றும் அவரது மனைவி செல்வபிரபா , துணை தலைவா் பொன்மாரி செல்வராஜ் பஞ்சாயத்து செயலர் பணிக்கு வரும்போது  போதியகல்வித் தகுதி இருந்தும் இல்லை என்று  பழிவாங்கும் நிகழ்ச்சியில் இறங்கியுள்ளார். இதுபோன்ற ஒரு பிரச்சனை பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தபோது அப்போதைய பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி பஞ்சாயத்து பணி குழு அமைத்து பஞ்சாயத்து செயலர் பரமசிவன் சரியான ஆதாரத்துடன் அரசாணைப்படி செயல்பட்டு வருகிறார் என்று தீர்மானம் நிறைவேற்றி பஞ்சாயத்து செயலரின் வேலையை உறுதி செய்தது. அப்போதைய பஞ்சாயத்து தலைவர் போட்ட தீர்மானத்தை மதிக்காமல் மற்றும்  அரசு ஆணை 170 தெளிவாக விளக்கிய பின்பு அரசு ஆணையை மதிக்காமல் ஜாதிய ரீதியாக செயல்பட்டு வருகிறார் என கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலர் குறைகூறி வருகின்றனர் .மற்றும் 2012 ஆம் ஆண்டு அரசு பணம் 6 லட்சத்து26 ஆயிரம் கையாடல் செய்த செய்த துணைத்தலைவர் அதிசயராஜ் மீது தற்போதைய பஞ்சாயத்து தலைவியான செல்வ பிரபா வழக்கு பதிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது தன் கணவருக்கு ஒரு நீதி மாற்று சமூகத்தைச் சார்ந்த ஊழியருக்கு ஒரு நீதி என்ற முறையில் அவர் செயல்பட்டு வருவது சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது. அரசு ஆணை 170 முறையாக கடைப்பிடித்து பஞ்சாயத்து செயலர் பணிகள் செய்துவரும் வரும் பரமசிவனின் வேலை உறுதியும் பாதுகாப்பும் அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...