ஷ்யாம் நீயூஸ்
30.11.2021
சமூக நீதியா! ஜாதி நீதியா! தலித் அலுவலர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய பஞ்சாயத்துத் தலைவி!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கோரம்பள்ளம் ஆகும் இந்த பஞ்சாயத்தில் கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கு மேலாக அலுவலக செயலராக பணிபுரிந்து வருபவர் பரமசிவன் இவர் ஒரு தலித் சமுகத்தை சார்ந்தவர் இவர் 01 .06.1996 முதல் அரசாணை எண் 170 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 27. 01.1967ன் படி பணியாற்றி வருகிறார் அதன்படி பதவி உயர்வு பெற்று வருகிறார் .2012 ஆம் ஆண்டு பஞ்சாயத்து துணைத்தலைவராக பதவி வகித்தவர் அதிசயராஜ் அவர் காலத்தில் பஞ்சாயத்து நிதி 6.26 லட்சத்தை கையாடல் செய்ததாக உதவி இயக்குனர் ஊராட்சிகள் நாகராஜ் தணிக்கை அறிக்கை வெளியிட்டார் இதனடிப்படையில அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் அப்போதைய தலைவர் தெய்வநாயகம் மற்றும் உபதலைவர் அதிசயராஜ் இருவர் மீதும் நிதி கையாடல் செய்ததற்காக நடவடிக்கை எடுத்தார் அப்போது தவறுகளை மறைப்பதற்கு பஞ்சாயத்து செயலராக இருந்த பரமசிவனிடம் சில கோப்புகளை அழிக்க கேட்டுக்கொண்டுள்ளார் அதிசயராஜ். அதற்கு உடன்படாத காரணத்தால் தற்போது பஞ்சாயத்து தலைவியாக இருக்கும் அதிசயராஜுன் மனைவி செல்வ பிரபாவை வைத்து பழிவாங்கும் நிகழ்ச்சிகள் இறங்கியுள்ளார் மற்றும் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு அலுவலர் அலுவலகத்தில் சரிக்கு சமமாக அமர்வதை விரும்பாத அதிசய ராஜ் மற்றும் அவரது மனைவி செல்வபிரபா இருவரும் பஞ்சாயத்து செயலர் பணிக்கு வரும்போது போதியகல்வித் தகுதி இருந்தும் இல்லை என்று பழிவாங்கும் நிகழ்ச்சியில் இறங்கியுள்ளார். இதுபோன்ற ஒரு பிரச்சனை பத்தாண்டுகளுக்கு முன்பு வந்தபோது அப்போதைய பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி பஞ்சாயத்து பணி குழு அமைத்து பஞ்சாயத்து செயலர் பரமசிவன் சரியான ஆதாரத்துடன் அரசாணைப்படி செயல்பட்டு வருகிறார் என்று தீர்மானம் நிறைவேற்றி பஞ்சாயத்து செயலரின் வேலையை உறுதி செய்தார் .அப்போதைய பஞ்சாயத்து தலைவர் போட்ட தீர்மானத்தை மதிக்காமல் மற்றும் அரசு ஆணை 170 தெளிவாக விளக்கிய பின்பும் அரசு ஆணையை மதிக்காமல் ஜாதிய ரீதியாக செயல்பட்டு வருகிறார் என கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பலர் குறைகூறி வருகின்றனர் .மற்றும் 2012 ஆம் ஆண்டு அரசு பணம் 6 லட்சத்து26 ஆயிரம் கையாடல் செய்த துணைத்தலைவர் அதிசயராஜ் மீது தற்போதைய பஞ்சாயத்து தலைவியான செல்வ பிரபா வழக்கு பதிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது தன் கணவருக்கு ஒரு நீதி மாற்று சமூகத்தைச் சார்ந்த ஊழியருக்கு ஒரு நீதி என்ற முறையில் அவர் செயல்பட்டு வருவது சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது. அரசு ஆணை 170 முறையாக கடைப்பிடித்து பஞ்சாயத்து செயலர் பணிகள் செய்துவரும் பரமசிவனின் வேலை உறுதியும் பாதுகாப்போம் அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.