முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை !

 ஷ்யாம் நியூஸ் 

25.05.2021

தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிரதான பழைய நுழைவு வாயில் மீண்டும் விரைவில் திறப்பு !அமைச்சர் கீதாஜீவன் அதிரடி நடவடிக்கை !

தூத்துக்குடி அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள்  வி வி டி சிக்னல் அருகில் உள்ள சாலையில் தற்போது   சென்று வருகின்றனர் .பொதுமக்கள் மருத்துவமனைக்கு  செல்ல  நான்கு பாதை சாலை மற்றும் வி வி டி சிக்னல்  அருகில் உள்ள  சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் நீண்ட நாட்களாக சிரமப்பட்டு வருகின்றனர் மற்றும் சிக்னல் விழும் நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் செல்வதில் சிரமம் இருந்து வருகிறது .மருத்துவமனைக்கு நோயாளிகள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வகையில் மாற்று பாதை இருந்தால் நல்லது என பொதுமக்கள் விரும்பினர் .மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும்  சமூக நலன் -மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தூத்துக்குடிக்கு கொரானா ஆய்விற்கு வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா .சுப்ரமணியத்திடம் மருத்துவனையின் பழைய பிரதான வாசலை திறக்க   கோரிக்கை வைத்தார் அதை    பார்வையிட்ட பின்  அமைச்சர் மா .சுப்ரமணியன்    செய்தியாளர் சந்திப்பில்  கூறுகையில் இன்று காலையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று தடுப்பூசி போடும் முகாம்களை தொடக்கி வைத்துள்ளேன் நகர்ப்புறம் மட்டும் அல்லாமல்  கிராமப்புற மக்களும் ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்திக்கொள்கின்றனர் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு 26000 தடுப்புசிகளும்  45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 23000 தடுப்புசிகளும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் வார் ரூம் ஒன்றும்  திறக்கப்பட உள்ளது  . தூத்துக்குடியில்  27  தனியார் மருத்துவமனைகள்   காப்பீடு திடத்தில் இணைத்து  உள்ளது .அரசு காப்பீடு திட்டத்தில் இணைத்து பொதுமக்கள் அதை  பயன்படுத்தி கொள்ளலாம் . பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை பழைய பிரதான வாயிலை திறக்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்  .  அதற்கான நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடமும் மாநகராட்சி ஆணையரிடமும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது  விரைவில் மருத்துவமனை பிரதான வாசல் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார் .ஆய்வின் போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷணன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், எம்.எல்.ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி,   உள்பட பலர் கலந்து கொண்டர். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...