முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலத்தை வரும் 16ம் தேதி முற்றுகை –தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் முடிவு

 

ஷ்யாம் நியூஸ்

13.02.2021

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் வரும் 16ம் தேதி முற்றுகை –தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் முடிவு! 




நீண்ட நாள் கோரிக்கையாக தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் தமிழக அரசிடம் தூத்துக்குடி பத்திரிகையாளர் களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றது. 

விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 17ம் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று 13.02.2021 இரவு 7.00 மணியளவில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அலுவலகத்தில் மன்றத்திற்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வருகின்ற 16.02.2021 தேதி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவணத்தை ஈர்க்கும் வகையில் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடத்த வேண்டும் என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கும் வீட்டுமனை பட்ட தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 15 வருடங்களாக தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மானிய விலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டலின் படி அடையாளம் காட்டப்பட்ட இடத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பொது பாதைக்கான நிலத்தை வாங்கி, தமிழக ஆளுநர் பெயரில் பத்திரம் பதிவும் செய்து, முந்தைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் 2019 டிசம்பரிலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு வருவாய்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இதுவரை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கப்பெறவில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மானிய விலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக கோரிக்கை கிடப்பில் கிடப்பது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வரும் 17ம் தேதி வரபுள்ள நிலையில் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும் என இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, இணைசெயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடிக்கு வரும் தமிழக முதல்வர் பத்திர்க்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...