முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை:ஆசிரியர் கைது!

ஷ்யாம் நியூஸ்  24.09.2019 தூத்துக்குடியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் கைது தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.   தூத்துக்குடி பீச் ரோட்டில் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருமணி (25) என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் அவர் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இரவு நேரங்களில் விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சைல்டு லைனுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதில் ஆசிரியர் திருமணி, மாணவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் திருமணியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் ப...

தூத்துக்குடியில் மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி !

ஷ்யாம் நியூஸ் 24.09.2019 தூத்துக்குடியில்  மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிட தூத்துக்குடி ஆட்சி தலைவர் உத்தரவிட்டு இருந்தார் .அதன் படி தண்ணீர் திறந்து விடப்பட்டது .கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு வரும் வழியில் தாமிர பரணி ஆறு செயற்பொறியாளர் ரகுநாதன் அங்கு மண் அள்ளும் ஒப்பந்ததாரர்க்கு வசதியாக நீர் வரும் கால்வாயை அடைத்து விட்டார் . .கால்வாயில் தண்ணீர் வந்தால் மண் அள்ளும் லாரிகள் செல்லமுடியாது .இதனால் கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு (ரிசெர்வ் ) தண்ணீர் வராமல் காய்ந்து கிடக்கிறது .இந்த குளத்து குடிநீரை  நம்பி  தூத்துக்குடி சுற்றுவட்டாரதில்  ஆட்சியர் அலுவலகம் உட்பட பல கிராமங்கள் உள்ளன .மற்றும் செயற்பொறியாளர் ரகுநாதன்  13 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் .ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த குளத்திற்கு பல கோடிகளை ஒதுக்கி விவசாய நலன்களை மேன்படுத்த உதவி வருகிறது .ஆனால் இதுவரை ஒரு உருப்படியான மடைக...

கோவில் கணக்கு விவகாரம் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை!

ஷ்யாம் நியூஸ்  23.09.2019 கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை: 7பேர் கும்பல் வெறிச் செயல் திங்கள் 23, செப்டம்பர் 2019 4:14:36 PM (IST)   செய்துங்கநல்லூர் அருகே முன் விரோதத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை 7பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சந்தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் அபிமன்யூ (எ)திலீப் (19), இவர் செய்துங்கநல்லூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதிய உணவிற்காக கல்லூரியில் நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். கல்லூரிக்கு சிறிது தொலைவில், ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து வந்த அவரை, அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த 7பேர் கொண்ட கும்பல் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.  இதுகுறித்து தகவல் அறிந்து செய்துங்கநல்லூர்  இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர...

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு நபர் ஆணையத்தின் அதிரடி!

ஷ்யாம் நியூஸ் 21.09.2019 ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஒரு நபர் ஆணையத்தின் அதிரடி! தூத்துக்குடியில் கடந்த மே22 ம் தேதி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாரால் பொதுமக்களில்  13பேர் சுட்டு கொல்லப்பட்டனர். எந்தவித ஆதாரமும் இன்றி  400க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை கொண்டு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது 14 அமர்வுகளில் 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய கமிஷன் தனது தீர்ப்பை விரைவில் தமிழகமுதல்வரிடம் சமர்பிக்க உள்ளது. ஆதாரமின்றி பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபட வேண்டும். வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தலா ரூபாய் 1.5லட்சம் வழங்கவும்  , காவல்துறை மூலம் தடையில்லா சான்று வழங்கவும் ஒருநபர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.

தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாடசாமி கோவில் குருபூஜை!

ஷ்யாம் நியூஸ் 21.09.2019 தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாடசாமி கோவில் குருபூஜை இன்று நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகி புரம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாடசாமி கோயில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேற்படி 10/9/19 அன்று அருள்மிகு சுடலை மாடசாமி புதியதாக 11 அடி பீடமாக உயர்த்தப்பட்டு குருபூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியநாயகபுரம், சோரீஸ்புரம் காலான்கரை, வீர நாயக்கன் தட்டு, அய்யனடைப்பு, கைலாசபுரம், ஸ்ரீனிநகர், இந்திரா காலனி, கோரம்பள்ளம் பொது மக்களால் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இன்று 21/9/19 சோரீஸ்புரம் ஊர் சார்பாக 11வது நாள் மண்டல பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும் பக்தகோடிகள் வந்து அய்யன் அருள் பெற்றுச்செல்ல கோவில் நிர்வாகம் பக்தகோடிகளுக்கு அழைப்பு விடுத்தனர். 

மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர்!அவசர போலீஸ் எண் 100ஐ பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.DSP பிரகாஷ் வேண்டுகோள்!

ஷ்யாம் நியூஸ் 20.09.2019 மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் .இலவச தலைகவசம் வழங்கிய விழாவில் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் பேட்டி! தூத்துக்குடியில் நடிகர் சூர்யாவை நடித்த காப்பான் திரைப்படம் வெளியானதையொட்டி தூத்துக்குடி மக்களுக்கு இலவச தலைகவசம் வழங்க  தூத்துக்குடி   சூர்யா ரசிகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.தூத்துக்குடி மாநகர பகுதியில் மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பொதுமக்கள் எந்த குற்ற பிரச்சனைகள் என்றாழும் அவசர போலீஸ் 100 ஐ தயங்காமல் தொடர்பு கொள்ளவேண்டும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக தலைகவசம் அணிந்து செல்லவேண்டும் மனித உயிர் விலைமதிக்கமுடியாதது  பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது -விவசாயிகள் ஆட்சியர் சந்திப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் !

கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது -விவசாயிகள் ஆட்சியர் சந்திப்  நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை  ஏற்று கோரம்பள்ளம் குளத்திற்கு வரும் மதகுகளை திறக்க ஆணையிட்டார் ..அதன்படி இன்று காலை குலையன்கரிசல் ,முள்ளக்காடு பொட்டல்காடு ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,பெரியநாயகிபுரம் ,மற்றும் கோரம்பள்ளம் ஆகிய பகுதி விவசாயிகள் ,விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மதகுகளுக்கு பூஜை வழிபாடு செய்து தண்ணீரை வரவேற்றார்கள் .தாமிரபரணி ஆறுகள் கோட்டம் செயற்பொறியாளர் ரகுநாதன் திறந்து வைத்தார் .விவசாயிகள் தங்கள் வாழைப் பயிர்களை காக்கவும் தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கவும் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க ஆணையிட்ட தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் .

குற்றங்களை தடுக்க அவசர அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!

ஷ்யாம் நியூஸ் 17.09.2019 குற்றங்களை தடுக்க அவசர  அழைப்பு எண் 100 பயன் படுத்த வேண்டும்   பொதுமக்களுக்கு  தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அருண் கோபாலன் வேண்டுகோள்!   பொதுமக்கள் தங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்மந்தமாகவும் போலீஸ் அவசர இலவச எண்ணான 100 ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ( 16.9.2019) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருன்பாலகோபாலன் : அவசர உதவிக்கு அழைக்கும் பொதுமக்களின் நோக்கம் முழுமையாக நிறைவேற, அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் சென்னையில் மாடர்ன் கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அழைப்பு, அங்கு சென்று, அதன்பின், சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும்.அங்கு பணியில் உள்ள போலீசாரின் கம்ப்யூட்டரில் உள்ள 'டயலாக்' பாக்ஸ் அலர்ட் செய்யும். தகவலை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் நம்பர...

தூத்துக்குடியில் தொடரும் படு கொலைகள். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஷ்யாம் நியூஸ் 16.09.2019 தூத்துக்குடியில் தொடரும் படு கொலைகள் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. தூத்துக்குடி ,  சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்த முருகேசன். அவர்கள் மோட்டார் வாகனத்தில் அதி வேகமாக சென்ற மணிகன்டனை  தடுத்து நிறுத்தி  அறிவுரை கூறியதற்க்காக ஆத்திரடைந்த மணிகன்டன் நண்பர்களை அழைத்து வந்து    முருகேசன்.  விவேக். ஆகிய  இருவரையும் நேற்று மதியம் 3 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பல்  சரமாரியாக அரிவாளில் வெட்டி படு கொலை செய்யபட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.  தூத்துக்குடியில் 12மணி நேரத்தில் முருகேசன் . விவேக் .சொரிமுத்து . ஆகிய 3 படு கொலை சம்பவங்கள்   பரப்பரைப்பையும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த படு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுத்துகிறது. முருகேசன். விவேக். சொரிமுத்து. மூவரையும் இழந்து வாடும் அவர...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியரோடு வந்து மனு கொடுத்த ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் .

ஷியாம் நியூஸ் 09.09.2019 தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட்  ஊழியரோடு வந்து மனு கொடுத்த  ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் . தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் வேண்டும் அலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் 80000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அலையை இயக்க தடை விதித்து 15 மாதங்கள் ஆனா நிலையில் தொழில்த்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கிறோம் .ஆதலால் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்ததாக ஸ்டெர்லைட் ஊழியருடன் வந்த வேல்குமார் உட்பட சிலர்  மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்  செய்தியாளர்களிடர் கூறினார் . ஸ்டெர்லைட் அலையை தமிழக அரசு தூத்துக்குடியில் மிக பெரிய அளவில் மாசு ஏற்படுத்தி விட்டதாகவும் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்றும் ஆலையை மூட உத்தரவிட்டது .இந்த உத்தரவை எதிர்த்து  ஆலை நிர்வாகம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் . தூத்துக்குடியில் ...

கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

ஷ்யாம் நியூஸ் 06..09.2019 கடல் விபத்து சாலை விபத்தில் இறந்த மீனவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் -தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு! தூ த்துக்குடி மாவட்டம் கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறைந்தவர்களுக்காக  மீனவர்களிடம் இருந்து காப்பீடு தொகை  வசூலித்து மீன்வாரியம் உதவி இயக்குனர் சார்பாக ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்தபப்ட்டது .ஆனால் தூத்துக்குடி மாவட்ட மீனவ மக்களுக்கு  இழப்பீடு வழங்காமால் தேவைல்லாத கரணம்  சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனம்  தட்டிக்கழித்து வந்தது இந்த நிலையில்  மீனவர்கள் நலன்கருதி தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞ்சர் ஜெ .ஆலன் அரிஸ்டாட்டில் வழக்கு தொடுத்து வாதாடி வந்தார் .இருதரப்பு வாதங்களை கருத்தில் கொண்ட  நுகர்வோர்  நீதி மன்ற அமைப்பை சார்ந்த நீதி அரசர்கள் .நாராயண சாமி ,சங்கர் ,  சரஸ்வதி .ஆகியோர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு  கடல் விபத்து மற்றும் சாலை விபத்தில் இறந்த  மீனவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும் எனவும் மீனவர்கள் நலன் பாதுகாக்க படவேண...

தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார்

ஷயாம்நீயுஸ் 04.09.2019 தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான  பிரமோத் குறில்  நேற்று முன்தினம் (02-09-2019) அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கைலாசபுரம், கீழக்கோட்டை மற்றும் காசிலிங்கபுரம் கிராமங்களில் மக்களை சந்தித்து பகுஜன் கருத்தியல் குறித்தும் தேசிய அளவிலான அரசியல் போக்கு குறித்தும் வகுப்பு நடத்தினார்...  காசிலிங்கபுறம் மக்கள் சாதிய ஆணவத்தால் பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் சிலையை, 2011ம் ஆண்டு ஜனவரி 15ம் நாளன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்த பிரமோத் குறில்  திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.. அதன் பின்னரே மக்களின் ஒருங்கிணைப்பில் மண் சிலை வெண்கலம் பூசப்பட்ட சிலையானது என்பது குறிப்பிடத்தக்கது..  ஆனாலும் இன்னும் சிலை திறப்பு விழா விழா நடத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக பொத...

பெரியார் , கன்ஷிராம்க்கு பின்னர் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு!

ஷயாம்நீயுஸ் 03.09.2019 பெரியார் , கன்ஷிராம்க்கு    பின்னர் தலித்களுக்கு நல்ல  தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு! தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க தலைவர்  மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் பாதுகாப்பது இயக்க   மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார். ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் ...

பெரியாருக்கு பின் தலித்களுக்கு நல்ல தலைவர்கள் இல்லை!தூத்துக்குடியில் பிரோமத் குறில் குற்றச்சாட்டு!

ஷயாம்நீயுஸ்  03.09.2019 பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் இல்லை : தூத்துக்குடியில் முன்னாள் எம்பி.,பிரமோத் குறில் குற்றச்சாட்டு! தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை என முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் குரில் தூத்துக்குடியில் தெரிவித்தார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் குரில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, இந்தியாவில் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இதைப்பற்றி கவலையின்றி நாடு நாடாக சுற்றுகிறார். காஷ்மீரில் அடிப்படை தேவைகளுக்கே பாெதுமக்கள் திண்டாடி வருகின்றனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக மோடி கூறுகிறார். ஹிட்லர் பாணியில் பிரதமர் மோடி செயல்படுகிறார். இதனால் கழுத்தளவு பிரச்சனை உள்ளது. பிரச்சனை அதிகமாகி விட்டால் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பெரியாருக்கு பின்னர் தலித் தலைவர்கள் யாரும் இல்லை. நாட்டில் 80 காேடி பேர் தலித்துகள...