முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !

 ஷ்யாம் நியூஸ்

19.10.2020

தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !



தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம்1க்கு உட்ட பின் தங்கிய கிராமம் காலான்கரை கிராமம் . தற்போதுள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர் முயற்சியால் உடற்பயிற்சி விளையாட்டு மைதானம் பள்ளி வளாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்

வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகும் சுழலில் மழைகாலத்தில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும் அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவது என்ற விழிப்புணரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்றும் மற்றும் மழைகாலங்களில் உணவு பொருட்கள் மற்றும் தங்கநகைகளை தண்ணீர் புகாத பைகளில் பாதுகாப்பாக வைத்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற செயல் முறை விளக்கங்களை தூத்துக்குடி சிப்காட் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.தற்போது உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரானா நோயிலிருந்து பொதுமக்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள முககவசம் அணியவேண்டும் என்று விழிப்புணர்வும், பிரச்சாரமும் செய்தனர்.மேலும் நிலைய அலுவலர் முனியசாமி கூறுகையில் பொதுமக்களுக்கு ஏற்படும் எந்த அபாயத்தில் இருந்தும் மீட்கும் வகையில் சிப்காட் தீ அணைப்பு படை தாயார் நிலையில் உள்ளது தேவையான உபகரணங்கள் உள்ளன என்றும் பொதுமக்கள் 101,108  மற்றும் 2340091 போன்ற தொலைபேசிகளில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோரம்பள்ளம்1 கிராமம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலெட்சுமி ஏற்பாடு செய்திருந்தார்.கோரம்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலமைதாங்கினார்.தாசில்தார் பூபதி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், வருவாய்த்துறை அதிகாரி ராதிகா காலான்கரை வார்டு உறுப்பினர் ஞானகண் ஆகியோர் கலந்து கொண்டனர்.கோரம்பள்ளம் பஞ்சாயத்து செயலர் கொ.பரமசிவன் நன்றி தெரித்தார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...