முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏப்.,1 முதல் பெட்ரோல் கிடையாது! டெல்லியில் இருந்து வெளியான அறிவிப்பு

 SHYAM NEWS

01.03.2025

ஏப்.,1 முதல் பெட்ரோல் கிடையாது! டெல்லியில் இருந்து வெளியான அறிவிப்பு!


வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டு பழைமையான வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று டெல்லி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டு வரும் சூழலில் அதனை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு என்பது நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது


தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் டெல்லியில் மக்கள் வசிக்க முடியாத நிலை என்பது ஏற்படும்.
தற்போது டெல்லியில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியை பாஜக வீழ்த்தி அரியணை ஏறியது. தற்போது டெல்லியில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மன்ஜிந்தர் சிங் சிர்சா இருக்கிறார். இந்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது தொடர்பாக இன்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது காற்று மாசுவை குறைக்க வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிறகு டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் காற்று மாசுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. இதனால் 15 ஆண்டு பழைமையான வாகனங்களை சாலையில் இருந்து ஓரம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் டெல்லியில் 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் என்பது வழங்கப்படாது. இந்த வாகனங்களின் வயதை கணக்கிடுவதற்கு பிரத்யேகமான கருவிகள் டெல்லி பெட்ரோல் நிலையங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்படும். அதேபோல் டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான தரநிலையை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகளைத் தவிர, டெல்லியில் உள்ள அனைத்து உயரமான கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் காற்று மாசுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த புகை எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுவுவது கட்டாயமாக்கப்படும்'' என்றார். டெல்லியை பொறுத்தவரை ஏற்கனவே இந்த கொள்கை என்பது இதற்கு முன்பே 2021ல் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படி 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் சாலைகளில் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2022 ஜனவரி 1ம் தேதி முதல் விதியை மீறுவோர் கண்டறியப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பழைய இரும்பு கடைக்கு அனுப்பபப்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக அது பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் தான் புதிதாக டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக 15 ஆண்டு பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் என்பது ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கக்கூடாது என்ற நடைமுறையை உறுதியாக கொண்டு வர உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...