முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை; அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்- -பாஜக வலியுறுத்தல்

  SHYAM NEWS 27.02.2025 தூத்துக்குடி மாவட்டத்தில்   சட்டவிரோத மணல் கொள்ளை; அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்- -பாஜக வலியுறுத்தல் த மிழகத்தில் தடையின்றி நடந்து வரும் மணல் கொள்ளைக்கு பொறுப்பேற்று அமைச்சர் துரைமுருகன் பதவி விலக வேண்டும்'  என்று ஆவேச அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத். தமிழகம் முழுவதும் தற்போது வரலாறு காணாத மணல் கொள்ளைகள் முழுவீச்சில் அரங்கேறி வருகின்றன. நீர்வளத் துறையின் அமைச்சரே மணல் வளத்தை திருடுபவர்களுக்கு, கனிம கொள்ளையர்களுக்கு துணை போவதால் தமிழக அரசு அதிகாரிகளின் சிவப்பு கம்பள விரிப்புடன், உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி மணல் கொள்ளை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக லாரிகளில் மணல் கடத்தல் போடுகிறது. மிக முக்கியமாக மணல் கொள்ளை நடக்கும் பகுதி அருகில் முடியனூர் மற்றும் எட்டு வழியோர குடியிருப்பு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பன்னாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு தண்ணீர் அனுப்பும் திட்...

தொகுதி மறு சீரமைப்பு!குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்திய தென்னிந்தியாவிற்கு தண்டனையா? அமைச்சர் கீதா ஜீவன்

 ஷ்யாம் நீயூஸ் 27.02.2025 தொகுதி மறு சீரமைப்பு!குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்திய தென்னிந்தியாவிற்கு தண்டனையா? அமைச்சர் கீதா ஜீவன் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையரை செய்தால் நமது இந்தியாவில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 23.74% ல் இருந்து 18.97 %மாக குறைந்தது விடும்  என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறி இருந்தார். இந்த கருத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக இன்று தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் .தமிழ்நாடு வளர்ச்சிக்கு பாதிக்க கூடியதாக இருக்கும். முதல்வர்  முதலில் இதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார் தென் மாநிலங்களில் இருந்து இதற்கு ஆதரவு வந்துள்ளது. பிற தலைவர்கள் எல்லாம் நமது முதல்வர் குரலுக்கு ஆதரவாக பேசி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது...

'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி

  SHYAM NEWS 24.02.2025 'யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டால் பதவி விலக தயார்' - ஸெலன்ஸ்கி யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, "யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து விவாதிக்கப்படும்," என்று கூறினார். யுக்ரேனுக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என இரண்டுமே தேவை என்றும் அவர் தெரிவித்தார். யுக்ரேனில் நாளை நடைபெறும் சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஸெலன்ஸ்கியிடம் ஒரு செய்தியாளார் எழுப்பிய கேள்விக்கு, "சில வலுவான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக" தெரிவித்தார். இந்தச் சந்திப்பு யுக்ரேன் போர் விவகாரத்தில் ஒரு திருப்புமுனையாக இருக்க வாய்ப்புள்ளது என தான் ...

விவசாயிகளுக்கு இன்று ! வங்கி கணக்கில் ரூ.2000.. ரூ.23,000 கோடியை விடுவிக்கும் பிரதமர் மோடி

 SHYAM NEWS 24.02.2025 விவசாயிகளுக்கு இன்று ! வங்கி கணக்கில் ரூ.2000.. ரூ.23,000 கோடியை விடுவிக்கும் பிரதமர் மோடி மத்திய அரசின் 'பி.எம் கிசான் யோஜனா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இன்று (திங்கட்கிழமை) விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 24) விடுவிக்க உள்ளார். விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் மிக முக்கியமானது. பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் விவசாயிகளின் நிதி தேவைகளுக்கு உதவ மத்திய அரசால் நடத்தப்படும் திட்டம். இதில் தகுதியான விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படுகிறது. 2 ஹெக்டேர் வரையிலான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிஎம் கிஸான் திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. அதாவது 4 மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளுக்கு நிதி அளிக்கப...

நடிகை வழக்கில் சீமான் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? இன்றைய முக்கிய செய்திகள்

  SHYAM NEWS 22.02.205 நடிகை வழக்கில் சீமான் மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் கூ றியது என்ன? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது பிரபல நடிகை ஒருவர் 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தாா். வளசரவாக்கம் போலீஸாா் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2011-இல் அளித்த புகாரை, 2012- ஆம் ஆண்டிலேயே அந்த நடிகை திரும்பப் பெற்றுக் கொண்டாா் என்று குறிப்பிட்டு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த திங்கள்கிழமை நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், நடிகை தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் அவா், 'பாதிக்கப்பட்ட பெண் இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சா்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்...

ஆர்பிஐ-இன் முன்னாள் ஆளுநருக்கு மோடி அரசு வழங்கிய முக்கிய பதவி.. ஓய்வு பெற்ற உடனே அடுத்த பதவி!

 SHYAM NEWS 22.02.2005 ஆர்பிஐ-இன் முன்னாள் ஆளுநருக்கு மோடி அரசு வழங்கிய முக்கிய பதவி.. ஓய்வு பெற்ற உடனே அடுத்த பதவி! இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான சக்தி காந்த தாஸ் பிரதமர் நரேந்திர மோடியின் பிரின்சிபல் செக்ரெட்டரியாக (2) நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தேர்வுக்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை அப்பாயின்மென்ட் கமிட்டி ஆஃப் தி கேபினேட் (DoPT) சனிக்கிழமையன்று பிறப்பித்தது. 2019 ஆம் ஆண்டின் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் பி.கே மிஸ்ரா பிரதமரின் பிரின்சிபல் செக்ரட்டரியாக (1) இருந்து வருகிறார். DoPT-யின் உத்தரவின்படி சக்தி காந்த தாஸின் நியமனம் பிரதமரின் பதவி காலத்துடன் இணைந்து அல்லது மறு உத்தரவு வரும் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சக்தி காந்த தாஸ் 2018-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது மூன்று வருட காலத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியாவின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் தலைவராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்....

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...

"கெட் அவுட் ஸ்டாலின்" எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை!

SHYAM NEWS 21-02-2025 கெட் அவுட் ஸ்டாலின்" எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை! இன்று காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்விட் போடவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதன்படி கெட் அவுட் ஸ்டாலின் என்று இன்று பதிவிட்டுள்ளார். மேலும், எங்களை விட அதிகமாக ட்விட் போட முடியுமா என்றும் அவர் சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சரியாக காலை 6 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, எல்லாவற்றிலும் ஊழல், சட்டம் ஒழுங்கை சீர்கெடுத்தது, தமிழகத்தை போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயத்தின் புகழிடமாக மாற்றியது, கடன்களை அதிகரிக்கச் செய்தது, பழமையான கல்வித் துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சமூகம், சாதி மதத்தை வைத்து அடிப்படைவாத அரசியலை பிளவு செய்தது, தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கத் தவறியது, தோல்வியடைந்த திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று தெரிவித...

தூத்துக்குடியில் சொன்ன மாதிரியே செய்த வியட்நாம் ! அசத்தல்

 S HYAM NEWS 19.02.2025 தூத்துக்குடியில் சொன்ன மாதிரியே செய்த வியட்நாம் ! அசத்தல்    தூத்துக்குடி: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 1 வருடத்தில் இங்கே கட்டுமானம் முடியும் தருவாயை எட்டி உள்ளது. 95 சதவிகித கட்டுமானம் நிறைவு பெற்றுள்ளது. கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளும் முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்ததோடு.. உள்ளே மெஷின்களை நிறுவும் பணிகளும் நடக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது. ACME - 52,000 கோடி பெட்ரோனாஸ் - 34,000 கோடி செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள் லீப் கிரீன் எனர்ஜி  22,842 கோடிகள் என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி சாதனை: ச...

ஷ்யாம் நியூஸ் ஊழல் செய்தி கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி BDO .

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 ஷ்யாம் நியூஸ்  ஊழல் செய்தி கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி  BDO . தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வந்த ஊழலை ஷ்யாம் நியூஸ் செய்தியில் வெளியிடப்பட்டது. இது  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய BDO ஐகோர்ட் ராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்தி வெளியிட்டதற்க்காக தொலைபேசியில்  தகாத வார்த்தைகளால் பேசியதும் சிறிது நாட்களில் செய்தி வெளியிட்ட செய்தியாளரை கொலை செய்து விடுவதாகவும்  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஊழல்வாதியான ஓவர்சியர் முத்துராமனுடன் சேர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு விடுவதாகவும் மிரட்டல் எடுத்துள்ளார்.  ஷ்யாம் நியூஸ்  அரசியல் புலனாய்வு பத்திரிக்கை இது போன்ற கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படாது ஆதாரமாக பல ஊழல்கள் உள்ளதால் மீண்டும் விரிவாக ஊழல் செய்தி வெளிவருமே தவிர BDO ஐகோர்ட் ராஜாவின் கொலை மிரட்டலுக்கு பயந்து ஊழலை வெளிக்கொண்டு வராமல் இருக்காது. கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பி டி ஓ ஐகோர்ட் ராஜா கொலை மிரட்டல் மூலம் தெரிவது இன்னும் ஏராளமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றி...

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...