முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

 ஷ்யாம் நீயூஸ்

25.09.2023

நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.


தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்தது . தூத்துக்குடியில் பாஜகவினர் வெடி வெடித்த அதே இடத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர்

கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் அண்ணாமலையின் மீது பேச்சு எல்லை மீறி செல்கிறது மறைந்த தலைவர் பற்றி இழிவாக பேசி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில்  அதிமுக பாஜகவின் கூட்டணியை முடித்துக் கொள்கிறோம் என்று கூறினார் இது தங்கள் கருத்தா தங்கள் கட்சியின் கருத்தா என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இது என்னுடைய சொந்த கருத்து அல்ல என்  கட்சியின் கருத்து என கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை ஏளனம் செய்யும் வகையில் தூத்துக்குடி பாஜகவினர் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வெடி வெடித்து கொண்டாடினர் . மீண்டும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை தவறாகவும் பேசி வந்தார் . இந்த நிலையில் அதிமுக மேலிடம் பாஜக தலைமையிடம் புகார் கொடுத்து வந்தனர். அண்ணாமலை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால். இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள்  கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த தலைவர்களை இழிவாக பேசிய அண்ணாமலை மீது பாஜக மேல் இடம் நடவடிக்கை எடுக்காததால் இனிமேல் பாஜகவுடன் அண்ணா திமுக கூட்டணி தொடராது என்று அதிரடி முடிவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி  கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சிவன் கோவில் அருகே ஜெயக்குமார் பாஜக கூட்டணி இல்லை என்று அறிவித்ததை  பாஜகவினர்  கொண்டாடிய  அதே இடத்தில் இன்று தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆணைக்கினங்க அதிமுகவினர் வெடி வெடித்து இணைப்புகள் வழங்கி கொண்டாடினர். நோட்டாவை விரட்டி அடிக்கும் அண்ணா திமுக என்று கோஷமிட்டு தொண்டர்கள் உற்சாகமாக மிகுதியில் வெடி வெடித்து கொண்டாடினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...