முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ்

06.10.2023

கையில் உள்ள பணத்தை ஆடம்பர செலவு செய்து வீணடிக்காதீங்க...’ - ஜெப் பெசோஸ் அபாய எச்சரிக்கை!

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கலாம் என்பதால் கையில் உள்ள பணத்தை பொருட்களை வாங்கி வீணடிக்காதீர்கள் என மக்களை எச்சரித்துள்ளார். அது  இது இந்திய மக்களுக்கும் பொருந்தும்.உலகம் முழுவதும் நிலவும் மந்தமான பொருளாதாரம் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற வல்லரசுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. பணவீக்கம் காரணமாக பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்து வருகின்றனர். ட்விட்டர் நிறுவனத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மெட்டாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அமேசானில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் என பணி நீக்கங்கள் பற்றி வெளியாகும் தகவல்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக மக்களை எச்சரிக்கும் விதமாக வெளியிட்டுள்ள தகவல் பேரதிச்சியை உருவாக்கியுள்ளது. நெருங்கி வரும் ஆபத்து: அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை நம்பியுள்ளனர். இந்நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இதனால் மக்களின் கார், வீடு, தனிநபர் கடன்கள் ஆகியவற்றின் வட்டி விகிதம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. போதாக்குறைக்கு மற்றொருபுறம் பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் பெரும் ஆபத்தில் சிக்கி வருகின்றனர். அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக வீட்டுக்கடன் மட்டும் $16.5 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் விரைவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைக்கட்ட உள்ளது. அத்துடன் விடுமுறையும் வர உள்ளதால், அமெரிக்கர்கள் தங்களது சேமிப்பு மற்றும் போனஸ் பணத்தைக் கொண்டு வீட்டில் உள்ள ஹோம் அப்ளையன்ஸ், வாகனங்கள் உள்ளிட்டவற்றை புதுப்பிப்பது உண்டு. மேலும், இதற்கு ஏற்றார் போல் மேலைநாடுகளில் பிரத்யேகமான சேல்களும் நடைபெறும். இந்த சமயத்தில் ஆஃபரில் கிடைப்பதால் டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை அமெரிக்கர்கள் வாங்கிக் குவிப்பார்கள். இதனிடையே, பொருளாதார மந்தநிலை வரக்கூடும் என்பதால் வரும் மாதங்களில் அதிக விலையுள்ள பொருட்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எச்சரித்துள்ளார். அமேசான் நிறுவனரின் எச்சரிக்கை: உலக பெரும் பணக்காரர்களின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளவரும், முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ், கடந்த நவம்பர் 14ம் தேதி, சிஎன்என் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், அமெரிக்க மக்களுக்காக எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். "மக்களுக்கு எனது அறிவுரை, ஆபத்தான நிலை வர உள்ளது. எனவே, நீங்கள் புதிதாக எதையாவது வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை நிறுத்துங்கள். கையில் உள்ள பணத்தை பத்திரமாக சேமித்து வையுங்கள். நீங்கள் ஒரு பெரிய திரை டிவியை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், கையில் இருக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். புதிய வாகனங்கள், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பெரிய விலை கொண்ட பொருட்களை வாங்குவதை அமெரிக்கக் குடும்பங்கள் தவிர்க்க வேண்டும். பொருளாதாரம் இப்போது நன்றாக இல்லை. இதனால் பல்வேறு துறைகளில் பணி நீக்கங்களை சந்தித்து வருகிறோம். எனவே, கையில் உள்ள பணத்தை செலவழிக்க வேண்டாம்,” என அறிவுரை வழங்கியுள்ளார். அமேசான் நிறுவனரின் இந்த எச்சரிக்கை அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு பொருந்தும் என்றாலும், உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெரிய விலை கொண்ட பொருட்களை வாங்காதீர்கள் என எச்சரித்திருப்பது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...