முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா?

ஷ்யாம் நீயூஸ்

18.07.2023

அமலாக்கதுறையின் அடுத்த டார்கெட் முட்டையா? மீனா? சசிகலா புஷ்பா பரபரப்பு பேட்டி!


 மேகதாது அணை பிரச்சனை கர்நாடகா அரசுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களை வஞ்சிக்கிறது அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்  தூத்துக்குடி பாஜக  அலுவலகத்தில் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவதற்க்கு 9000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறிய காங்கிரஸுடன் சேர்ந்து தமிழக அரசும் மக்களுக்கு எதிராக வஞ்சனை செய்து வருகிறது, இந்த நிலையில் கர்நாடகாவிற்கு தமிழக முதல்வர் சென்று கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டது தமிழக மக்களுக்கு செய்யும் பெரிய துரோகம் என்றும் சசிகலா புஷ்பா கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் 

சத்துணவில் அழுகிய முட்டை வழங்குகின்றனர்‌,  யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரும் திமுகவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் 1ஐ வெளியிட்டு விட்டார் 

அடுத்து ஊழல் பட்டியல் இரண்டை வெளியிட உள்ளார்

மூன்றாவது ஊழல் பட்டியலில் நமது மாவட்ட (தூத்துக்குடி )அமைச்சர்கள்  கூட இருக்கலாம். எம்பி கூட இருக்கலாம்.

திமுக செய்யும் ஊழலை அமலாக்கத்துறை பார்த்துக்கொண்டே இருப்பார்களா?

 உயர்கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை 

சத்துணவு துறையில் ஊழலே நடக்கவில்லையா?  மத்திய அரசு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா?

கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொல்லி கருப்பு பணத்தை ஒழித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மோடியின் அரசு

உலக அளவில் தமிழ்நாட்டில் உள்ள கருப்பு பண முதலைகளாக இருப்பவர்கள் திமுகவினர்.

 எந்தெந்த துறைகளில் ஊழல் நடக்கிறது என்பது பொது மக்களுக்கு தெரிகிறது

சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்படுகிறது. சத்துணவில் காசு வாங்குகின்றனர் என்பது மக்களுக்கே தெரியும்

யார் தவறு செய்கிறார்களோ அங்கு அமலாக்கத்துறை ரைடு வரத்தான் செய்யும். அவர்கள் அவர்களது கடமையை செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத்துறையின் கரூர், விழுப்புரம், ரைடை தொடர்ந்து மூன்றாவதாக தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...