முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்

ஷ்யாம் நீயூஷ்

17.07.2023

 வானம் வசப்படும் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கீதா ஜீவன் உரையாடல்

நான் முதல்வன் உயர்வுக்கு படி மற்றும் கல்வி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குடி வ உ சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்று இருந்த நிலையில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டதால் அவரால் இந்நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள இயலவில்லை அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார் அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் மாணவ மாணவிகள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் நல்லவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் மாணவ மாணவிகள் தன்னைத் தானே பட்டை தீட்டிக்கொள்ள வேண்டும் கல்வியில் மாணவ மாணவியர்கள் முன்னேறுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன, வெற்றியடைய நிறைய கற்றுக் கொள்வதோடு திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ,திறமையான மாணவர்களை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார், பெண்களுக்கென்று புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கல்லூரியில்  பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு  இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவிகளாக இருந்தாலும் இத்திட்டம் அவர்களுக்கு பொருந்தும், தற்போது தமிழகத்தில் ஐடி தொழிற்கல்வி 32 கோடியில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது வேம்பார், நாகலாபுரம், தூத்துக்குடி ஆகிய ஜடிகள் நவீனமயமான டெக்னாலஜி டாட்டா நிறுவனத்தின் பங்களிப்போடு பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் டாடா நிறுவனத்தில் வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது, கல்வியும் மருத்துவம் இரண்டு கண்கள் என்று முதல்வர் கூறியுள்ளார், நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டும், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் ,தன்னம்பிக்கையோடு செயல்படும் போது வானம் வசப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உரையாற்றினார். பின்பு மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் மற்றும் பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் .இக்நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் பிரபு, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ,வ.உ.சி கல்லுரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...