முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விசாரணை கைதிகளை சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !

ஷ்யாம் நீயூஸ் 28.03.2023 விசாரணை கைதிகளை சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் ! விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் பல்வீர் சிங் செயலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாவட்டம் , அம்பாசமுத்திரத்தில் போலீஸ் காவலில் இருந்த விசாரணை கைதிகளை மிகவும் கொடூர மான முறையில் தாக்கி கட்டிங் பிலையர் வைத்து பற்களை பிடுங்கி சித்தரவதை செய்த காவல் துறை கூடுதல் கண்கானிப்பாளர் பல்வீர் சிங்கின் மனித நேயமற்ற செயலை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக  கண்டிக்கிறது . பல்வீர் சிங்கின் சித்தரவதைக்கு ஆளாக்க பட்ட விசாரனை கைதிகள் பலர் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்க பட்டு உள்ளனர் என்கிற செய்தியும்  வெளியாகி உள்ளது.  ஆகவே மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து பல்வீர் சிங் மீது விசாரணையை மேற் கொண்டு பாதிக்க பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை ...

பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை

ஷ்யாம் நீயூஸ் 26.03.2023 பள்ளி படிப்போடு பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேயர் ஜெகன் பெரியசாமி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை      தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றினார். மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா ஹெசியா வரவேற்புரையாற்றினார்.     மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த மாநகராட்சி பள்ளியில் வருகை குறைவாக இருந்தது. சில குறைபாடுகளும் இருந்ததாக கூறினார்கள். நாங்கள் பொறுப்பேற்ற பிறகு அந்த குறைபாடுகளை எல்லாம் போக்குவதற்கு தேவையான உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்ட பின் மாணவ மாணவிகளின் வருகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் இந்த பள்ளியில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு உங்களுக்கு பல அறிவுரைகளை இங்கு வந்து கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் நான் உள்பட கலந்து...

அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஷ்யாம் நீயூஸ் 26.03.2023  தூத்துக்குடி 38வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.   தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஏற்கனவே வாட்ச்அப் எண் கொடுக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் குறைபாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உடனுக்குடன் தெரிவித்து தீர்த்து வைக்கின்றனர்.       இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மாநகராட்;சி 38வது வார்டுக்குட்பட்ட மீகா தெரு, ஜெயலானிதெரு, கோழி முடுக்கு சந்து, மற்றும் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அமைச்...

தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 25.03.2023 தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் ஏற்பாட்டில், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக நடைபெற்ற  பிரமாணடமான இரத்ததான முகாமை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் KSPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஜி.சத்யராஜ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.எஸ்.பி.தேன்ராஜ், உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குருதி கொடையாளர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர். உதயநிதி மன்ற  நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண...

பூத்து கமிட்டியை வைத்து புரட்சி பண்ண முடியாது தூத்துக்குடியில் மேடையில் வைத்து சசிகலா புஷ்பாவிற்கு டோஸ் விட்ட அண்ணாமலை!

 ஷ்யாம் நீயூஸ் 25.03.2023 பூத்து கமிட்டியை வைத்து புரட்சி பண்ண முடியாது! தூத்துக்குடியில் மேடையில் வைத்து சசிகலா புஷ்பாவிற்கு டோஸ் விட்ட அண்ணாமலை! பாரதிய ஜனதா கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார் தொடக்கத்தில் பேசிய மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடி மாவட்டத்தில் 80 சதவீத பூத்து கமிட்டிகள் நியமிக்கப்பட்டு விட்டதாகவும் அண்ணாமலையை தமிழகத்தின் முதல்வராக ஆக்கி விடுவதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டு பேசினார் பின்னர் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை 30 ஆண்டுகளாக தமிழகத்தில் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளியாக இருக்கும் பாஜக இனி தனியாக பரப்பதற்கான நேரம் வந்துவிட்டது தமிழகத்தில் அதற்கான தளம் அமைந்துவிட்டது பாரதப் பிரதமரின் திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் மத்தியில் எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் தவிர பூத் கமிட்டி அமைத்து விட்டதால் மட்டுமே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நான் எண்ணவில்லை. ஆகவே களத்தில் இறங்கி வீதி வீதியாக தெருப் பிரச்சாரம் தின்னைப்...

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ்.

 ஷ்யாம் நீயூஸ் 24.03.2023 உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ். உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  இன்று (24.03.2023) துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர், காசநோய் அறிகுறிகளை கண்டறியும் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டார். மேலும், காசநோய் விழிப்புணர்வு தபால்தலையினை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில், காசநோயை அறவே ஒழித்து, காசநோய் இல்லா உலகை உருவாக்க, இந்தியக் குடிமகனாகிய நான் பாடுபடுவேன். என் குடும்பம் மற்றும் ஊரில் யாருக்காவது இருமல், காய்ச்சல், எடை குறைதல், சளியில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால்கூட அவர்களுக்கு காசநோய் பற்றி எடுத்துச்சொல்லி மரு...

தூத்துக்குடியில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது.

 ஷ்யாம் நீயூஸ் 24.03.2023 தூத்துக்குடியில் மேடை பேச்சு திறன் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில் நடைபெற்ற மேடை பேச்சு திறன் பயிற்சியில் ஜேசி ஜெயக்குமார் முதன்மை ஆசிரியராகவும், கணேஷ் ராம்சுந்தர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர். ஜேசிஐ தலைவர் வக்கீல் சுபாசினி வரவேற்புரையாற்றினார்.    நிகழ்ச்சியில் மண்டல ஆசிரியை சுப்புலட்சுமி, மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், பட்டயத் தலைவர் ஜெர்லின் தினகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மண்டல அலுவலர் வளத்துறை வில்சன் அமிர்தராஜ், பியர்ல்; சிட்டி தலைவர் ராஜேஷ், செயலாளர் சுப்பிரமணியன், மற்றும் பொன்ராஜா, முகமது இப்ராகிம், ஜனார்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் திட்ட இயக்குநர் சரண்யா, துணைத் தலைவர் மேலாண்மை மதுமிதா, பொருளாளர் முத்து லட்சுமி, துணைத் தலைவர் ரத்தினா பொன்ராஜா, இயக்குநர் வணிகம் சத்யா மற்றும் சங்கரி ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் ஆயிஷா இப்ராஹிம், துணைத் தலைவர் அஜிதா பிரபு ஆகியோர் செய்திருந்தனர். மூன்று சிறந்த பங்கேற்பாளர்கள் வி...

தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை வழங்கப்பட்டது.

 ஷ்யாம் நீயூஸ் 24.03.2023 தூத்துக்குடி கல்லூரி மாணவிகளுக்கு கல்விஉதவிதொகை வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியருக்கு ஏ.பி.சிமகாலட்சுமி அம்மாள் நினைவுகல்வி உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கல்வி உதவித்தொகையாக மாணவியருக்கு 7.40,700 ரூபாயை வழங்கியது. கல்லூரித் தாளாளர் சொக்கலிங்கம், செயலாளர் சுப்புலட்சுமி, முதல்வர் பாலஷண்முகதேவி ஆகியோர் மாணவியருக்கு உதவித் தொகையைப் பெற்றுத் தந்தனர்.     நிகழ்ச்சியில் கணினித்துறைத் தலைவர் ஷியாமலாசூசன் வரவேற்புரையாற்றினார். முதல்வர். பாலஷண்முகதேவி வாழ்த்துரை வழங்கினார். விற்பனை மேலாளர் மோகன்  பிரவீணா, ஹைமாஸ்டீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்துஸ்தான் நிறுவனத்தின் மதுரை மண்டல பொதுமேலாளர் செல்ல பிரபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். சுயநிதிப் பிரிவு வணிகவியல்துறை, கணிதத்துறை, இயற்பியல்துறை, கணினி அறிவியல்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த 118 மாணவியர் கல்வி உதவித்தொகையைப் பெற்ற...

தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் 3 பெண்கள் உள்பட 46 பேர் கைது

ஷ்யாம் நீயூஸ் 23.03.2023  தூத்துக்குடியில் ரயில் மறியல் போராட்டம் 3 பெண்கள் உள்பட 46 பேர் கைது! ராகுல் காந்தி குற்றவாளி என அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பைக் கண்டித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தூத்துக்குடியில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார்.  ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிபதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வித...

தூத்துக்குடியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காவல்துறை வாகனம்! பாதிக்கப்பட்டவர் எஸ்பியிடம் புகார் கொடுக்க முடிவு!

 ஷ்யாம் நீயூஸ் 23.03.2023 தூத்துக்குடியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காவல்துறை வாகனம்! பாதிக்கப்பட்டவர் எஸ்பியிடம் புகார் கொடுக்க முடிவு! தூத்துக்குடியில் இருந்து மில்லர்புரம் சென்று கொண்டிருந்த இரு இருசக்கர வாகனத்தின் மீது தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருந்து வந்த டாடா சுமோ காவல் துறை வாகனம் மோதியதில் ஒருவர் காயமடைந்தார். தூத்துக்குடி மில்லர்புரம் பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன்( 61) த/பெ முனியசாமி நாடார் இவர் தூத்துக்குடி நகரில் இருந்து மில்லர்புரம் சென்று கொண்டிருந்தபோது நீதிமன்ற வளாகத்தின் உள்ளிருந்து மாலை 4.30 மணியளவில்  வெளியே வந்த காவல்துறை வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார் மற்றும் அவரது செல்போன் சேதம் அடைந்தது. காயம் அடைந்த முருகேசனுக்கு உதவி ஏதும் செய்ய முன்வராமல் மனிதாபிமானமற்ற முறையில் நடுரோட்டில் விட்டுச் சென்றனர் காவல்துறை வாகன ஓட்டுனரும் உடன் இருந்த நீதிமன்ற ஊழியரும். காயம் அடந்த நபர் தானாக எழுந்து அரசு மருத்துவமனையில்  சேர்வதற்கு சென்றார். சம்பவ இடத்தில் வைத்து முருகேசன் கூறுகையில் நீதி மற்றும் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் முன்பு வாகன...

மாப்பிள்ளையூரணி ஊராட்சி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முழுமையாக வளர்ச்சியடையும்! கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

 ஷ்யாம் நீயூஸ் 22.03.2023 மாப்பிள்ளையூரணி ஊராட்சி முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் முழுமையாக வளர்ச்சியடையும்! கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.    தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிலுவைப்பட்டி ஆர்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். கிராமசபையில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், விடுதலை சிறுத்தை குமார், பிஜேபி சத்தியராஜ், மகளிர் கூட்டமைப்பு தலைவர் அந்தோணி பிரேமா, சமூக ஆர்வலர் சசிகுமார், திருநங்கைகள்  உள்ளிட்ட பொதுமக்கள் பலர் பேசுகையில் மாப்பிள்ளையூரணி பகுதியில் பல பொது இடங்களில் குப்பைகள் தேங்காதவாறு ஊராட்சி மன்றத்திலிருந்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். சாலை கழிவுநீர் கால்வாய் மின்விளக்கு சுகாதாரம் அனைவருக்கும் குடிதண்ணீர் இணைப்பு இலவச வீட்டுமனை பட்டா புதிய ரேஷன்கார்டுகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி மூலம் கடன் உதவிகள் போன்றவைகளை ...

ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை !

 ஷ்யாம் நீயூஸ் 13.03.2022 ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை ! ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் வருகிற 23-03-2023 தேதி அன்று புனித ரமலான் மாதம் துவங்க உள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் காலை முதல் மாலை வரையிலும் நோன்பு இருந்து அதன் பின் மாலையில் நோன்பு திறந்து இரவு நேரம் மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடை பெறுகின்றன. மேலும் ரமலான் மாதத்தில் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்பட்டால் நோன்பு வைத்திருக்கும் இஸ்லாமியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தடை இல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது. மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க முன்...

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை!

 ஷ்யாம் நீயூஸ் 03.03.2023 வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் செங்குட்டுவன் அரசுக்கு கோரிக்கை தூத்துக்குடி வழக்கறிஞர் பி கே முத்துகுமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என  வழக்கறிஞர்கள்  நீதிமன்றம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.  தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் பி கே முத்துகுமார் இவரை கடந்த 22.02.2023  அன்று கோரம்பள்ளம் சோரீஸ்புரத்தில் வைத்து ஒரு கும்பல் அரிவாள் கத்திகளால் தாக்கி படு பயங்கரமாக படுகொலை செய்தனர். படுகொலை செய்த குற்றவாளிகள் என சிலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனாலும் முக்கிய குற்றவாளிகளை காவல்துறை இன்னும் கைது செய்யவில்லை என்று தூத்துக்குடி வழக்கறிஞர்கள் குற்ற சாட்டி வந்தனர். இந்த நிலையில்  முக்கியமான குற்றவாளிகளை  விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தலைவர் செங்குட்டுவன் கூறுகையில் வழக்கறிஞ...