முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் அனுப்புவதில் முறைகேடு!

 ஷ்யாம் நீயூஸ்

25.01.2022

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுபானம் அனுப்புவதில் முறைகேடு?



தூத்துக்குடி மாவட்டத்தில் 152 மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன இந்த விற்பனை கடைகளுக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகத்தை ஒட்டி மது பான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கிருந்துதான் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இங்கு பணிபுரியும் மகேஷ் என்பவர் 152 கடைகளுக்கும் மாதம் தலா ஆயிரம் ரூபாய் என வசூல் செய்கிறார் மாதம் குறைந்த பட்சம் 1.52 லட்சம் ஊழியர்களை மிரட்டி பணம் வாங்குகிறார்  என்று  டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர். மற்றும் பணம் தறாத டாஸ்மாக் விற்பனை கடைகளுக்கு மது அருந்துபவர் விரும்பி அருந்தும் மது புட்டிகளை அனுப்புவதில்லை அல்லது பெயர் அளவுக்கு குறைவான அளவில் மட்டுமே அனுப்புகிறார் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது  மற்றும் கடைகளுக்கு மது அருந்துவோர் அதிகம் விரும்பி உண்ணும் மதுபானங்களை அனுப்புவதில்லை மற்றும்  குவாட்டர் பாட்டில்களுக்குப் பதிலாக ஆப் பாட்டில், ஃபுல் பாட்டில்களை அனுப்பி இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மது பிரியர்களிடம் அவர்களுக்கு தேவையான மது புட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.  அனேக வாடிக்கையாளர்கள் விருப்பமான மது புட்டிகள் கேட்பதால் இல்லை இல்லை என்ற சொல்லால் விற்பனையாளர்கள் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட மேலாளரிடம் கேட்டபோது இது போன்று தவறு நடந்திருந்தால் சம்மந்த பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.மற்றும் இது சம்மந்தமாக மாவட்ட மேளாளர் அலுவலக வளாகத்தில் உள்ள குடோனில் பணி புரியும் மகேஸ்யை தொடர்புகொண்டபோது சரியான பதில் தர மறுத்துவிட்டார் மற்றும் காலை 10 மணிக்கு வரவேண்டிய ஊழியர் மகேஷ் மதியம் 12. 30 மணி வரை பணிக்கு வரவில்லை என்பதும் தெரிகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்பு மதுரை மண்டலத்தில் மதுபானத்தில் தண்ணீரை கலக்கி மீண்டும் புட்டியில் அடைத்து மது கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்ததால் 3 பேர் கைது செய்யப்பட்டார் என்ற பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தூத்துக்குடியில் மேலும் ஒரு சம்பவம் இதுபோன்று நடந்திருப்பது நிர்வாகத்தில் உள்ள குளறுபடியை காட்டுகிறது என்றும் கடைகளில் கிடைக்காத எம் சி, கனி பி, டைமண்ட் ரம், போன்ற மது புட்டிகள் டாஸ்மாக் கடைகள் அடைத்த பின்பு பார்களில் தாராளமாக கிடைப்பதாக மது பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக முதல்வர் சிறப்பாக நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று கூறி வந்த நிலையில் இது போன்ற ஒரு சிலரால் டாஸ்மாக் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை உருவாக்கி வருகின்றார். மாவட்ட மேலாளர் தக்க நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...