முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

 ஷ்யாம் நீயூஸ்

22.04.2022

பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

தூத்துக்குடி பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பூங்காவில் வெப்பமயம் தடுக்கும் வகையில் பல்வேறு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நட்டினார். பின்னர் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுமதி, உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், ஜான், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் உள்பட பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுகாதார பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் பூமி வெப்பமயமாவதை தடுக்கும் விதமாக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஏற்கனவே பசுமையான நிலையை உருவாக்க மாசில்லா மாநகரை அழகுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த பூங்கா தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட எல்லையின் கடைசி பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பூங்காவின் சிறப்பு அம்சங்களாக எதிர்கால தலைமுறையினருக்கு தெரியும் வகையில் 10 கல்வெட்டுகள் அமைக்கப்பட்டு அதில் ஆதிச்சநல்லூர், வாஞ்சிநாதன், வீரன்அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணியபாரதியார், வஉசிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார், வெள்ளையதேவன், கொற்கை துறைமுகம், கழுகுமலை குகைகோவில், இதன் படங்கள் அதில் பொறிக்கப்பட்டு நம்நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தலைவர்களையும் போராடியவர்களையும் மக்களுக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சமாகும் என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...