முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 ஷ்யாம் நீயூஸ்

27.04.2023

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும்! 600க்கும் மேற்பட்டோர்  முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று 300 பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் மகாராஜன் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் அமெரிக்கா மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் ஸ்டெர்லைட் மாதிரியான ஆலைகளை திறக்கவே முடியாது சுற்றுப்புற சூழலுக்கு பயங்கரமான கேடு விளைகின்ற ஆலை இந்த ஸ்டெர்லைட். இந்த ஆலையானது தாமிரம் ,கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் போன்றவற்றை தயாரிக்கிறது இவற்றை தயாரிக்கும் போது ஒரு டன் தாம்பரம் தயாரிப்பதற்கு இரண்டு கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது அப்படி வெளியேற்றப்படும் போது காற்றில் கலக்கிறது அதை போல் மூன்று டன் திடக்கழிவு வெளியேறுகிறது திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது இல்லை என்றால் நீர் மேலாண்மை பாதிப்படைய செய்யும் இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு உடல் நிலையை மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இதில் உலக நாடுகளின் சதி இருக்கிறது வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்கள் நிம்மதியான காற்றை சுவாசிக்க வேண்டும் நல்ல தண்ணீரை பருக வேண்டும் என்பதற்காக இது போன்ற ஆலைகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பெரிய பெரிய முதலாளிகளிடம் பேசி இங்கு தள்ளி விடுகின்றனர் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடிக்கு கிடைத்த ஒரு சாபக்கேடு. 2011 ,2012 ல் 19 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளனர் இந்த ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் அதில் 16,000 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் மூலப் பொருட்கள் வாங்கி அந்த மூலப் பொருட்கள் வாங்கிய நாட்டிற்க்கே தாமிர்தத்தை ஏற்றுமதி செய்துள்ளனர் ஏன் மூலப் பொருட்கள் கொடுத்த நாடுகளில் அவர்கள் நாட்டில் ஏன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முன்வரவில்லை அங்குத் திறந்தால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று இருக்கும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் பல உயிர்கள் பலியாகி இருக்கும். இப்ப இந்த ஸ்டெர்லைட் ஆலையை முடியதால் வேலை வாய்ப்புகள் பறிபோய் விட்டன என்று சொல்லி ஒரு வதந்தியை கிளப்பி இந்த ஆலய திறப்பதற்கு முயற்சி பண்ணுகின்றனர் ,மொத்தத்தில் 50 நபர்கள் தான் தூத்துக்குடி மக்கள் வேலை பார்த்திருப்பார்கள். மீது  நபர்களுக்கு கோட்ரஸ் கட்டிக் கொடுத்திருக்கிறது ஆலை நிர்வாகம் யாருக்கு வீடு கட்டி கொடுப்பார்கள் வெளியூரிலிருந்து வந்து வேலை செய்வதற்கு தான் வீடு கட்டி கொடுப்பார்கள் அப்படி என்றால் இங்கு பணிபுரிபவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் தான் .தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் பெரிய அளவில் வேலை வாய்ப்பு வழங்கவில்லை வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்பது பெரிய பொய். கந்தகட்ட டை ஆக்சைடின் ஆபத்து மிக அதிகமாக இருக்கும் காற்றில் அளவுக்கு அதிகமாக கலந்தது என்றால் 2012 13-ல் ஒரு விபத்து ஏற்பட்டது தூத்துக்குடியில் நிறைய மக்கள் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டனர் இந்த நிலை நீடித்திருக்குமேயானால் பல பேர் உயிர் இழக்கும் நிலை இருந்திருக்கும். ஜெயலலிதா அரசு இந்த நிர்வாகத்தை தடை செய்தது தடை செய்த பின்பு சுப்ரீம் கோர்ட்டில் தடையை உடைத்து வந்தனர் ஆலை நிர்வாகத்தினர். 2018 ல்மக்கள் போராட்டம் பெரிய அளவில் இருந்தது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் செயல்பட்டதால் பெரிய அளவில் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டது 2018 மே மாதம் ஆலை மூடப்பட்டது ஆறு ஆண்டுகள் திறக்க முடியாமல் இருந்த ஆலை நிர்வாகிகள் அரசின் கதவுகளை தட்டிக் கொண்டே இருந்தனர் அரசு என்ன சொல்கிறது என்றால் மக்கள் பெரிய அளவில் எதிர்ப்பில் இருக்கின்றனர் அதனால் இந்த தொழிற்சாலையை திறப்பது கஷ்டம் என கூறிவிட்டது .இதனால் ஆலை நிர்வாகம் இங்கு இருக்கக்கூடிய குட்டி குட்டி கட்சிகள் சமூக அமைப்புகள் ஜாதி அமைப்புகள் கையில் எடுத்து வாரவாரம் திங்கட்கிழமை மண்டே பெட்டிஷன் கொடுக்கிற போர்வையில் மீடியாக்களிடம் ஸ்டெர்லைட் ஆலை இல்லாமல் எங்கள் வேலை பாதிப்பு ஏற்பட்டுவிட்டது பொருளாதார பாதிக்கப்பட்டு விட்டது அந்த ஆழையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்ற தோட்டத்தை ஏற்படுத்த முயற்சி பண்ணுகின்றனர் அப்படிப்பட்ட சமூக அமைப்புகளுக்கு சிறிய அளவில் பண உதவிகளை செய்து ஆலை நிர்வாகம் தூண்டி வருகிறது. இவற்றை கண்டுபிடித்து அபாயகரமான தொழிற்சாலையான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எப்போதுமே திறக்க கூடாது ஆலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடிய சமூக விரோத சக்திகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தை நேதாஜி சுபாஷ் சேனை புரட்சி பாரதம் போன்ற அமைப்பு சார்பாக முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...