முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

 ஷ்யாம் நியூஸ் 

06.11.2020

தூத்துக்குடி டாஸ்மாக் அலுவலகம் முன்பு 30% போனஸ் கேட்டு  தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ! 



 தமிழக அரசின் வருவாய்களில் பெறுபகுதியை தருவது டாஸ்மாக் நிறுவனம் ஆகும் .அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை 17 ஆண்டுகளாக நிரந்தரபடுத்தாமல்  அரசு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த தொழிலாளிகளாக நடத்தி  வருகின்றது .நீண்டகாலமாக தொழிற்சங்கங்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் என்றும் வாரவிடுமுறை வேண்டும் என்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும்  பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள அரசு சலுகைகள் தங்களுக்கும் வேண்டும் என்றும் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர் .கொரான காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து அரசின் கஜானாவை நிரப்பிவருகின்றனர் .கடந்த ஆண்டு 20% போனஸ் வழங்கிய டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஆண்டு 10% மாக குறைத்துயுள்ளது .இதனை கண்டித்து இன்று தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு 30% போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கொரான காலத்தில் உயிரை பணையம் வைத்து பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30% போனஸ் உடனடியாக  வழங்கவேண்டும் என்றும் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட 50% அபராத தொகை வசூலிப்பதை கைவிடவேண்டும், ஆய்விற்கு செல்லும் அதிகாரிகளின் அத்துமீறலை தடுக்கவேண்டும் என்றும் குறைவான விற்பனை உள்ள கடைகளில் அதிக பணியாளர்களும் அதிகமாக விற்பனையாகும் கடைகளில் குறைவான பணியாளர்கள் பணிபுரிவதை தடுத்து பணி  நிரவல் செய்யவேண்டும், கொரான காலத்தில் பணிபுரிந்து இறந்த டாஸ்மாக் ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப்பணி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர் .ஆர்ப்பாட்டத்தில் ஆர் .வேல்முருகன் தலைமை தாங்கினார் .சு சீ .இரவீந்திரன்  ஜி வி ராஜா  ,நெல்லை நெப்போலியன் ,கருப்பசாமி  ஆகியோர் சிறப்புரையாற்றினர் .கே .பூங்கலிங்கம் எம் .ஜெகன், ஜி .முத்துகிருஷ்ணன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் .எஸ் .சந்தன சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார் .மற்றும் கூட்டுக்குழு உறுப்பினர்கள் சின்னதுரை,மஹேந்திரன் ,எம் ,முருகன் ,எம்.முத்துராஜ் ,எஸ்.கிருஷ்ணமூர்த்தி ,டி .பிரான்சிஸ் எஸ்.இம்மானுவேல் ஆர் .காசி,எஸ்.பலவேசமுத்து ,கே .கொம்பையா ,பி.அறுமுக நயினார் ,பி.கசிபெருமாள் எ .செல்லக்குட்டி ,எம் ரவி பி.கே ரஞ்சித்  மற்றும் ஏராளமான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...