முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஷ்யாம் நியூஸ் எதிரோலி 3ம் மைல் பழுதான மேம்பாலம் ரோடு பணி தொடங்கியது?

 ஷ்யாம் நியூஸ் 28.10.2020 ஷ்யாம் நியூஸ் எதிரோலி 3ம் மைல் பழுதான மேம்பாலம் ரோடு பணி தொடங்கியது? தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் 3ம் மைல் மேம்பாலத்தின் பிரதான சாலையில்  வெடிப்பு ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்றப்பட்டது இதனால் அப்பகுதில் அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இதுகுறித்து நமது ஷ்யாம் நியூஸ் செய்தியில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம் ஷ்யாம் நியூஸ் செய்தியை கண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை சீரமைக்க வேண்டி பள்ளமான சாலையில் மலர்வளையம் வைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதனை அறிந்த   தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இன்று பழுதடைந்து அந்த தார்சாலையை சீரமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர்.இது குறித்து கேட்டபோது இன்று இரவுக்குள் சாலை சீரமைக்கபட்டு நாளை காலையில் இருந்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்படும் என்று நெடுஞ்சாலை உதவி பொறியாளர் தெரிவித்தார்.

தூத்துக்குடி பூர்விகா பழுதான போன்களை கொடுத்து ஏமாற்றுகிறது-பெண் ஆசிரியர் புகார்!

 ஷ்யாம் நியூஸ் 25.10.2020 ஷ்யாம் நியூஸ் 25.10.2020 தூத்துக்குடியில் பூர்விகா ஷோரும் பழுதான செல்போனை விற்பனை செய்வதாக பெண் ஆசிரியர் குற்றக்ம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி கே டிசி நகர் என் ஜீ ஓ காலனியை சார்ந்தவர் ரவிகுமார் மனைவி கலைச்செல்வி இவர் பள்ளி ஆசிரியர் .பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்விக்காக கடந்த 20ம் தேதி பாலவிநாயகர் தெருவில் உள்ள பூர்விகா ஷோரூமில்  17 ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் ஒன்று வாங்கியுள்ளார் .செல்போன் வாங்கிய மூன்றாவது நாளே அது பழுதுகியுள்ளது  இது குறித்து பூர்விகா ஷோருமில் புகார் தெரிவித்துள்ளார்..சரி செய்து தருவதாக செல்போனை பெற்றுகொண்ட கடை ஊழியர்கள் தற்போது செல்லை பழுதுநீக்கி தராமலும் போனை திருப்பி தராமலும் பஜாஜ் பைனான்ஸ் மூலம் தானே செல்போன் வாங்கினீர்கள் அங்கே போய் புகார் கொடுங்கள் என்று மிரட்டி வெளியே அனுப்பினர் .இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.என் செல்போன் போனாலும் பராவாயில்லை பொதுமக்கள் பூர்விகா ஷோருமில் செல்போன் வாங்காதீர்கள்.ஆசியயையான என்னையே ஏமாற்றும் பூர்விகா நிறுவனத்தினர் படிப்பறிவில்லாத எத்தனபேரை ஏமாற்றிருப்பார்கள்? எத்தனை பள்ளி மாணவர்களுக்கு இத...

தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு !

 ஷ்யாம் நியூஸ் 19.10.2020 தூத்துக்குடி காலான்கரை கிராமத்தில் சிப்காட் தீயணைப்பு துறையினரின் வெள்ளதடுப்பு மற்றும் கொரானா விழிப்புணர்வு ! தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம்1க்கு உட்ட பின் தங்கிய கிராமம் காலான்கரை கிராமம் . தற்போதுள்ள வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகள் பஞ்சாயத்து தலைவர் முயற்சியால் உடற்பயிற்சி விளையாட்டு மைதானம் பள்ளி வளாக சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகும் சுழலில் மழைகாலத்தில் ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும் அவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவது என்ற விழிப்புணரவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்றும் மற்றும் மழைகாலங்களில் உணவு பொருட்கள் மற்றும் தங்கநகைகளை தண்ணீர் புகாத பைகளில் பாதுகாப்பாக வைத்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது போன்ற செயல் முறை விளக்கங்களை தூத்துக்குடி சிப்காட் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெ.முனியசாமி தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினர்.த...

தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் சாலை வெடிப்பு!விபத்து ஏற்படும் அபாயம்!

ஷ்யாம் நியூஸ் 16.10.2020 தூத்துக்குடி 3ம் மைல் மேம்பாலம் சாலை வெடிப்பு!விபத்து ஏற்படும் அபாயம்! தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி பிரதான தேசிய நெடுஞ்சாலையான 3ம்மைல் மேம்பாலத்தில் 20நாட்களுக்கு முன்னால் போடப்பட்ட தார்சாலை ரோட்டின் மத்தியில் இரண்டாக பிளந்தது உள்ளது.தூத்துக்குடி நகருக்குள் வரும் இரண்டு சக்கரவாகன ஓட்டுநர்களுக்கு பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.மற்றும் ரோட்டின் இருபுறமும் பெரும் பள்ளங்கள் உள்ளது. இந்த ரோடு கடந்த ஆகஸ்ட் மாதம் 25 தேதியை ஒட்டிய நாட்களில் தான் போடப்பட்டது. இந்த ரோட்டில் தான் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் தினமும் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர் ஆனால் ஏனோ எந்த அதிகாரிகள் கண்களுக்கு மட்டும் இந்த ஆபத்தான குழிகள் தெரியாமல் போனதோ? தூத்துக்குடி நெடுஞ்சாலை துறை போடும் ரோடுகள் மற்றும் கட்டும் கட்டிடங்கள் உறுதியாக இருப்பது இல்லை?ஆனால் ஒப்பந்தத்தின் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்கிறது.எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று பேசப்படும் வேலையில் உண்மைதான் என நிருபிக்கும் விதமாக இந்த சாலையின் வேல...

தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.!

 ஷ்யாம் நியூஸ் 15.10.2020 தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து  உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.! தூத்துக்குடியில் காணாமல் போன 102 செல்போன்களை கண்டு பிடித்து  உரிமையாளரிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஜெயக்குமார்.மீட்ட தனி படையினருக்கு எஸ் பி  பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் எப்போதும் இல்லாத அளவிற்கு பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினர் மீது நம்பிக்கை  ஏற்பட்டு உள்ளது .சமீபத்தில் காவல் நிலையங்களில் தரும் புகார்களை சம்பந்த பட்ட இடத்துக்கே  சென்று காவலர்கள் விசாரணை செய்யவேண்டும் காவல்நிலத்திற்கு வந்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது ஏற்ற அறிக்கை பொதுமக்கள் மக்கள் மத்தியில்  பெரும்  வரவேற்பை பெற்றது .மற்றும் அதனை தொடர்ந்து  தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு  102 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களை மீட்ட த...

30 நாளில் நில அளவீடு செய்ய தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபதாரம்_உயர்நீதிமன்றம் அதிரடி!

SHYAM NEWS 14.10.20202 30 நாளில் நில அளவீடு செய்யாவிட்டால் அதிகாரிகளுக்கு அபதாரம்! நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. நில அளவீடு புகார் தொடர்பாக மதுரை ஆசைத்தம்பி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, நில அளவீடு அல்லது மறு அளவீட்டுக்கு பணம் செலுத்தியதில் இருந்து 30 நாளில் நில அளவீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். தவறினால், செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் - தாமதத்திற்கு காரணமான அதிகாரிகளின் சம்பளத்தில் 2 ஆயிரத்து 500 பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். நில அளவீடு அல்லது மறு அளவீடு பணியை முழுமையாக புகைப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்து, கட்டணம் செலுத்தி கேட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார். அரசு நிலம் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டு பிடிக்க, டிரோன் காமிரா தொழில...

ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!

Shyam News 13.10.2020 தூத்துக்குடியில் ஆடுமேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம் !எஸ்.பி. ஜெயக்குமார் விளக்கம்!  தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்கும் தொழில் செய்து வரும் பால்ராஜ், சிவசங்கு என்பவர்களுக்கு இடையில் கடந்த 8 ஆம் தேதி ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பால்ராஜை தாக்கி சிவசங்கு காலில் விழ வைத்து அதை வீடியோ பதிவு செய்துள்ளனர்.  கடந்த 11ஆம் தேதி பால்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் ஆடு மேய்ப்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் அவர்கள் இவ்வாறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த போது, “இது ஒரு அநாகரீகமான, சட்டத்திற்கு புறம்பான செயல். தற்போது சிவசங்கு மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள், வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் என இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்...

Kanshiram Martyrdom Day in Thoothukudi!

SHYAM NEWS 09.10.2020   Kanshiram  Martyrdom Day in Thoothukudi! Bahujan Samaj Party founder Kanshiram's Martyrdom Day observed in Thoothukudi. He said that a non-BSP alliance would be formed which would unite those who had left the BSP at the national level and were operating as small organizations.The rape and murder of Dalit women in Uttar Pradesh is not new. 15 to 20 women are sexually abused every day.During the Korana days there was a curfew all over the world but in no country during the Korana period were state-owned enterprises sold to the private sector but the Modi government used the Korana lockdown to sell to private employers like Ambani Adani thus causing the youth in the country to lose their jobs and come to the road and fight the agricultural bill Babur Masuthi demolition case verdict In order to cover up the complete failures of the BJP government, banks like Ambani Adani are bribing the media and bankers to bury democracy .The RSS and Sangu Parivar in ...

தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிரோமோத்கோரில் தமிழக சுற்று பயணம் !

ஷ்யாம் நியூஸ் 09.10.2020 தூத்துக்குடியில் கன்ஷிராம் நினைவுநாள் அனுசரிப்பு !தேசிய பகுஜன் கூட்டணி ஒருங்கிணைப்பாளர்  பிரோமோத்குறில் தமிழக சுற்று பயணம் ! தூத்துக்குடியில் பகுஜன் சமாஜ் கட்சி  நிறுவனர் கன்ஷிராம் நினைவுநாள்  அனுசரிக்கப்பட்டது .முன்னாள் எம் பி யும் தேசிய பகுஜன் சமாஜ் கூட்டணி தலைவருமான பிரோமோத்குறில் தூத்துக்குடியில் நடந்த கன்ஷிராம் நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்டார் மற்றும் வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சமரசம் இல்லா  பார்ப்பனியம் எதிர்ப்பாளர்களை ஒரு அணியில் திரட்டி தி மு க ,காங்கிரஸ் கூட்டணி ,அ  தி மு க ,பா ஜா க கூட்டணி அல்லாத ஒரு கூட்டணி உருவாக்கப்படும் என்றும் இது தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து வெளியேறி சிறு சிறு அமைப்புகளாக இயங்கிவருபவர்களை ஒருங்கிணைத்து செயல்படும் என்றும் .உத்திரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் புதிது அல்ல தினமும் 15 முதல்  20  பெண்கள் பாலியல் கொடுமைகள் செய்யப்படுகிறார்கள் அவர்கள் பற்றிய செய்திகள் வெளிவருவது இல்லை மத்தியில் ஆளும் பி ஜே பி அரசு தோல்விகளை மறை...