முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாக்கடையில் மிதக்கும் தூத்துக்குடி அரசு மருத்தவமணை!நடவடிக்கை எடுக்க நோயாளிகள் வேண்டுகோள்!

சாக்கடையில் மிதக்கும் அரசு மருத்தவமணை!பொறுப்பில்லாத அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்?

தண்ணீரில் சூழ்ந்த தூத்துக்குடி மாநகரம்! தூத்துக்குடி நகரில் நேற்றிரவு 33மீமி கனமழை பெய்தது. தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழைநீர் இதுவரை பல்வேறு இடங்களில் அப்புறப்படுத்தாத சூழ்நிலையில்.தற்போது பெய்த மழையில் தூத்துக்குடி நகரத்தில் பல்வேறு இடங்கள் நீர் சூழ்ந்து தீவு போல் காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை நீதிமன்ற குடியிருப்பு அருகில் உள்ள பிரதான சாலையில் ஒரு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது.இந்த சாலையானது பள்ளி,கல்லூரி,வேலைக்கு செல்பவர்களுக்கு இது பிரதான சாலையாகும் .இந்நிலையில் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் மேடு தெரியாமல் கீழே விழுந்து செல்லும் நிலமைக்கு ஆளாகினார்கள். அதே போல் மாநகரை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தண்ணீரில் சூழ்ந்து தீவு போல் உள்ளது.அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டு,பிணவரை,காய்ச்சல் தடுப்பு பிரிவு வார்டு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதில் சாக்கடை நீரும் கலந்து உள்ளது. நோய் போக்க மருத்துவமனைக்கு சிகைச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் உருவாக்கும் வகையில் இருப்பதால் நோயாளிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை இது தொடர்பாக சந்திக்க சென்ற போது சுமார் காலை 11 மணி வரை அலுவலகம் திறக்கப்படவில்லை. பின்னர் அவர்களை போனில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கூறியபோது அவர்கள் விரைவாக சரி செய்வோம் என கூறினார். ஆனால் சாயங்காலம் 5 மணி வரை சரி செய்ய படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...