முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்..

SHYAM NEWS

06.08.2019

35ஏ: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன? 5 கேள்வி பதில்கள்...


35-ஏபடத்தின் காப்புரிமை

காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ தொடர்பான சர்ச்சை பல பதிற்றாண்டுகளாக நீடிக்கிறது. இது தொடர்பான சில முக்கியத் தகவல்கள்:

35-ஏ என்ன சொல்கிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.

படத்தின் காப்புரிமை

இந்த பிரிவின் கீழ் யாரெல்லாம் அடங்குவர்?

இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வந்த நாளான மே 14, 1954 முதல் இருந்து அங்கு யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், அப்போதில் இருந்து 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிகளாக கருதப்படுவார்கள்.

இதன் வரலாறு என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மக்கள் காஷ்மீருக்குள் உட்புகுவதை தடுக்க, அப்போதைய காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் 1927ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வருகிறார். காஷ்மீர் இந்துக்களின் வற்புறுத்தலால் அவர் இதனை செய்தார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் சில பகுதிகளில் இன்றும் இந்த சட்டம் இருக்கிறது.
இந்தியாவில் தற்போது இருக்கும் சட்டம் 1954ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் இன்னொரு அரசமைப்புச் சட்ட உறுப்புரை 370 அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு, தனி கொடி ஆகியவற்றை அனுமதிக்கிறது. தகவல்தொடர்பு, வெளியுறவு தவிர பிற விஷயங்களில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட இந்தப்பிரிவு வழிவகை செய்கிறது.


இதன் முக்கியத்துவம் என்ன?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்துவமான மக்கள் தொகை தன்மையினை இது பாதுகாக்கிறது.
இந்தியாவில் அம்மாநிலம் மட்டுமே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் என்பதால், இந்துக்கள் அங்கு குடியேறுவதை இந்து தேசியவாத குழுக்கள் ஊக்குவிக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையெ எப்போதும் கொந்தளிப்பான சூழலே நிலவி வருகிறது.

35-ஏபடத்தின் காப்புரிமை

இந்த அமைதியற்ற சூழலுக்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுடிகறது இந்தியா. ஆனால், பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.

இந்த சட்டப்பிரிவை பாதுகாக்க நினைப்பவர்கள் சொல்வது என்ன?

இந்த சட்டப்பிரிவை நீக்கினால், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பாதுகாக்கப்படும் என்று அம்மாநில மக்களுக்கு இந்திய அரசு செய்து கொடுத்த வாக்குறுதியை மீறுவது போல ஆகிவிடும் என்று சிலர் கூறுகிறார்கள்.
மேலும், சட்டப்பிரிவை நீக்கினால், வெளி மாநில நபர்கள் அங்கு குடியேறி அந்த நிலத்தின் மக்கள் தொகை தன்மையை மாற்றிவிடுவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.

35-ஏபடத்தின் காப்புரிமை

இந்தியாவையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இணைக்கும் சட்டப்பிரிவை நீக்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருந்தார்.
சட்டப்பிரிவை நீக்கினால் இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்படும் என்று முதல்வர் மெஹ்பூபா முஃப்தி எச்சரித்திருந்தார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...