முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ராத்திரி நேரத்து பூஜை....!

ஷ்யாம் நீயூஸ் 29.09.2023 தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ராத்திரி நேரத்து பூஜை....! நடைபெற்றது தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் இரவு சுமார் 7.30 மணி அளவில் காவல் நிலையத்தின் மையப் பகுதியில் ஐயர் வரவழைக்கப்பட்டு மணி அடித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு காவல் அதிகாரிகள் அனைவரும் பக்தி பரவசமாக ஒற்றுமையாக சாமி கும்பிட்டது பார்க்க பரவசமாக இருந்தது பின் இனிப்பு பாயாசம் வழங்கி பக்தி பரவசமாக வழிபாட்டை முடித்தனர்.  ஆனால் அரசு அலுவலகங்களில் இது போன்று மத சார்பு நிகழ்ச்சி நடத்தலாமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுகளை அரசு அலுவலகத்தில் நடத்துவது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகாதா? அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொது இடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதுதாகாதா?அரசு அலுவலர்களின் இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டை பொது இடத்தில் நடத்தினால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக இயங்குவது என்பது சந்...

TMB எம் டி ராஜினாமா! ஒன்பதாயிரம் கோடி பண பரிமாற்றம் காரணமா?

ஷ்யாம் நீயூஸ் 28.09.2023 TMB எம் டி ராஜினாமா! ஒன்பதாயிரம் கோடி பண பரிமாற்றம் காரணமா? கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள ஆட்டோ டிரைவர் ராஜ்குமார் என்பவரின் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கணக்கு எண்ணிற்கு 9 ஆயிரம் கோடி பணம் கிரிடிட் வந்தது இது தமிழகம் முழுவதும் பேரும் பேசும் பொருளாக இருந்தது. இந்த நிலையில் வங்கியின் சார்பாக கொடுக்கப்பட்ட விளக்கத்தில் கணக்கு எண்ணிற்கு பதிலாக தொகையையும் தொகைக்கு பதிலாக கணக்கு எண்ணையும் பதிவிட்டதால் இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எம்டி மற்றும் தலைமை நிர்வாகியுமான எஸ் கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துயுள்ளார் என்ற  தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அண்மையில் tmb bank கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவருக்கு 9000 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடைபெற்றதால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கலாம் என தகவல் தெரிகிறது.

அழிய விடமாட்டோம் இதனை

 ஷ்யாம் நீயூஸ் 27.09.2023 அழிய விடமாட்டோம் இதனை 17 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலையாக திகழ்ந்தது வர்ம அடவு  முறை நாட்டு அடி கலையாகும். அழிந்து வரும் இந்த கலையை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

 ஷ்யாம் நீயூஸ் 25.09.2023 நோட்டாவை ஓடவிட்ட எடப்பாடியார் தூத்துக்குடியில் அதிமுகவினர் கொண்டாட்டம். தமிழகத்தில் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை முறித்தது . தூத்துக்குடியில் பாஜகவினர் வெடி வெடித்த அதே இடத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து கொண்டாடினர் கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் அண்ணாமலையின் மீது பேச்சு எல்லை மீறி செல்கிறது மறைந்த தலைவர் பற்றி இழிவாக பேசி வருகிறார். இதனை கண்டிக்கும் வகையில்  அதிமுக பாஜகவின் கூட்டணியை முடித்துக் கொள்கிறோம் என்று கூறினார் இது தங்கள் கருத்தா தங்கள் கட்சியின் கருத்தா என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு இது என்னுடைய சொந்த கருத்து அல்ல என்  கட்சியின் கருத்து என கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்தை ஏளனம் செய்யும் வகையில் தூத்துக்குடி பாஜகவினர் தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வெடி வெடித்து கொண்டாடினர் . மீண்டும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் அண்ணா மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை தவறாகவும் பேசி வந்தார் . இந்த நிலையில் அதிமுக மேலிடம் பாஜக தலைமையிடம் புகார் கொடுத்து...

1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? நீங்களே பார்த்து கொள்ளுங்கள்..

 SHYAM NEWS 22.09.2023 1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கீழே உள்ளதை கிளிக் செய்து  குடும்ப அட்டை எண்களை பதிவு செய்து நீங்களே 1000 ரூபாய் பணம் ஏறி உள்ளதா.? இல்லைல்லா.? பார்த்து கொள்ளலாம். https://kmutappeal.tnega.org/status_check/index.html?data=NmRCcHJUNm5aT0NUV24vQWMzdWNGOVVrSGRIR3U4a1I4aiswMFFhbXM5ND0=&iv=ODA5MTk1MzQ0MDIyODczOQ==#

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடினர்.

ஷ்யாம் நீயூஸ் 09.09.2023 தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகராட்சி அதிமுக கொறடா மந்திரமூர்த்தி தலைமையில்  பிறந்த நாள் விழா கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எஸ்.பி சண்முகநாதனின் பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு அவரின் சொந்த ஊரான பண்டாரவிளை கிராமத்தில்  வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது  பிறந்த நாள்விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக கொறடாவுமான  மந்திரமூர்த்தி மற்றும் தூத்துக்குடி  மாநகர மேற்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், 35 வது வார்டு வட்ட செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன்   தகவல் தொழில்நுட்ப பிரிவினர்,   கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னால் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனுக்கு மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.

ஷ்யாம் நியூஸ் 09.09.2023 அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கேக் வெட்டி  கொண்டாடினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தூத்துக்குடி   மண்டல செயலாளர் கல்வி குமார் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா அண்ணா தொழிற்சங்க தலைவர் சுதாகர் ஆகியோர் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போற்றியும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து பிரிவு சார்பில் 30 கிலோ எடை கொண்ட பிறந்த நாள் கேக்கை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் வெட்டி தனது பிறந்த நாளை போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளுடன் கொண்டாடினார்.  இந்நிகழ்ச்சியில் மண்டல இணைச் செயலாளர் V.லட்சுமணன் மண்டல துணைத் தலைவர் M. பார்வதி  பொன் சிங் ஆதி ராஜ் வெள்ளையா முருகவேல் பீட்டர் பாலகுமார் சக்திவேல் முகை...

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர்..

ஷ்யாம் நியூஸ் 09.09.2023 தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் சாக்லேட் மாலை அணிவித்து கொண்டாடினர். தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த கிராமமான பண்டாரவிளையில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால்  விமர்சையாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய வங்கி தலைவர் சுதாகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் லெட்சுமண பெருமாள், தூத்துக்குடி 39வது வட்டக் கழக செயலாளர் திருச்சிற்றம்பலம், மற்றும் மத்திய வடக்கு பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர்அணி இணை செயலாளர் டைகர் சிவா, அருணா பைனான்ஸ் பழனி குமார், திலகர் ஆகியோர் ஏற்ப்பாட்டில் 50 கிலோ எடை கொண்ட சாக்லேட்டால் தயாரிக்கப்பட்ட மாலையை முன்னால் அமைச்சர் எஸ் பி சண்முகநாதனுக்கு அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.