முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி டாஸ்மாக் கடை பணியாளர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு!

 ஷ்யாம் நீயூஸ் 27.06.2023  தூத்துக்குடி டாஸ்மாக் கடை பணியாளர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியீடு! தமிழ்நாடு வாணிப கழகம் இயக்குனர்  22.6.2023 உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 142 கடைகளில் 16 கடைகள் நிரந்தரமாக மூடப்பட்டது.மேற்படி மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும் விதமாக பணி மூப்பு  பட்டியலை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முருகன் தகவல் பலகையில் 27.06.2023 அன்று பணியாளர்கள் பார்வைக்கு வைக்க உத்தரவிட்டார்.மற்றும் இரு தினங்களுக்குள் மேற்படி பணி மூப்பு பட்டியலில் பணி மூப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உரிய ஆவணங்களை சமர்பித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் ஏஜடியூசி சங்கம் கோரிக்கை.

ஷ்யாம் நீயூஸ் 21.06.2023 மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை  அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் ஏஜடியூசி சங்கம் கோரிக்கை. நாளை(22.06.2023) முதல் தமிழக அரசின் உத்தரவுபடி 500 டாஸ்மாக் கடைகளை மூட நிர்வாகம் முடுவு செய்துள்ளது.  மூடப்படும் 500 டாஸ்மாக் கடை பணியாளர்களை  அருகில் உள்ள கடைகளில் பணியில் அமர்த்தவேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் ஏஐடியூசி பணியாளர் சங்கம் மாநிலச் செயலாளர் தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். அவர் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி நாளை(22/6/23) முதல் 500 மதுகடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி.சார்பில் வரவேற்கிறோம்.மேலும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.அதே சமயம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களை உடனடியாக மூடப்படும் கடைகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பணிபுரிய உத்தரவு உடனடியாக வழங்க வேண்டும் என்று ...

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஷ்யாம் நீயூஸ் 21.06.2023  அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு தூத்துக்குடி.  அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் வடக்கு - தெற்கு இருமாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான கடம்பூர் ராஜ், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  தமிழக அமைச்சரவையில் மின்சார துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு செய்து கைது செய்துள்ளது.  இந்நிலையில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்னர் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் உள்ளார். இவரிடமிருந்த 2 துறையையும் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்...

காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஜே.பி நெருக்கடி கொடுக்கிறது. மாநில துணை தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு

 ஷ்யாம் நீயூஸ் 20.06.2023 காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஆதரவு கொடுப்பதால் முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஜே.பி நெருக்கடி கொடுக்கிறது.மாநில துணை தலைவர் சண்முகம் குற்றச்சாட்டு. தூத்துக்குடி ராகுல் காந்தியின் 53வது பிறந்தநாளை ஒட்டி மடத்தூரில் நடைபெற்ற விழாவிற்க்கு முன்னாள் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம் தலைமை வகித்தார்.  மண்டல தலைவர் செந்தூர் பாண்டி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜான் பிரிட்டோ காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட் புக் பெண்களுக்கு சேலை அரிசி ஆகியவற்றை வழங்கி மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி.  சண்முகம் பேசுகையில் 156 நாட்கள் 3750 கிலோ மீட்டர் ராகுல் காந்தி நடைபயணம் மூலம் மக்களை சந்தித்து உள்ளார்.  எதற்காக என்றால் நாட்டிற்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.  அதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனை தான் காரணம். 9 ஆண்டு ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க பாடுபட்டோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தவறான கருத்தாகும்.  1920-ல் சமஸ்கிருதம் படித்தால...

தூத்துக்குடி 108 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக் ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ஷ்யாம் நீயூஸ் 19.06.2023 தூத்துக்குடி 108 கிலோ எடையில், 53 அடி நீளத்தில் மிக பிரம்மாண்ட கேக்  ராகுல் காந்தியின் 53 வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெகு விமர்சையாக கொண்டாடினர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாளைய பிரதமர்  இளம் தலைவர் ராகுல் காந்தியின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு. தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 106 கிலோ எடையில் 53 அடி நீளம் கொண்ட மிகப் பிரமாண்டமான கேக்கை  மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் கேக்கை வெட்டி பொது மக்களுக்கு காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழங்கி வெகு விமர்சையாக  கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ்  நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஏ பி சி டி சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஜான்சாமுவேல்,முன்னாள் மாவட்ட தலைவர் ...

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

 ஷ்யாம் நீயூஸ் 17.06.2023 தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். தூத்துக்குடி ஊராட்;சி பகுதியாக இருந்து 2008ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பு புறநகர் பகுதியாக இருந்த பகுதியை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எந்த பகுதிக்கும் சாலை வசதி செய்து கொடுக்கப்படாத நிலை இருந்து வந்தது. அப்பகுதியை சேர்ந்த பலர் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்து வந்தனர். திமுக ஆட்சி அமைந்த பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பின் மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று கொண்ட பின் அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முழுமையாக செய்து கொடுப்போம். எந்த பகுதிக்கு எந்த பணி முதலில் முக்கியம் என்பதை கணக்கெடுக்கப்பட்டு பள்ளி கல்லூரி இயங்கும் சாலை கோவில் தேவாலயம் மசூதி மருத்துவமனை இருக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் பாதாளசாக்கடை பணிகள் நிறைவு பெற்று தற்போது பிம்சி பள்ளி அருகே கால்வாய் பணியும், ஆசிரியர் காலணி ஆக...

கள்ள பட்டா தயார் செய்யும் இடமா தூத்துக்குடி தாலுகா அலுவலகம் ?அரசு மருத்துவர் இடத்தையே கள்ள பட்டா போட்டு கொடுத்த வருவாய் அலுவலர்கள்

ஷ்யாம் நீயூஸ் 13.06.2023  கள்ள பட்டா தயார் செய்யும் இடமா தூத்துக்குடி தாலுகா அலுவலகம் ?அரசு மருத்துவர் இடத்தையே கள்ள பட்டா போட்டு கொடுத்த வருவாய் அலுவலர்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் பட்டா பிரிவு ஊழியர்கள் தயவில் ஏராளமான கள்ள பட்டாக்கள் தயார் செய்து அதை விநியோகம் செய்துள்ளதாக தகவல் தெரிகிறது . பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் நிலம் அடுத்தவர் பெயருக்கு  கள்ளதனமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதை அறிந்த நில உரிமையாளர்கள் முறையீடு செய்து  வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் ஆண்டு கணக்கில் கிடப்பில் போட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி தாலுகா அலுவலர்கள்  கள்ள பட்டா போடும்போது மட்டும் ஒரு நாள் அவகாசம் கூட இல்லாமல் பட்டாக்கள் கையெழுத்தாகி விடுவித்துவிடுகின்றனர். பொதுமக்களே கள்ளபட்டாவை கண்டுபிடித்து நல்ல பட்டாவாக மாற்றி தாருங்கள் என கேட்டால் ஆண்டு கணக்கில் இழுத்து வருகின்றனர். இந்தக் கள்ள பட்டா சிக்கலில் தன் நிலத்தை பறிகொடுத்து மாட்டிய  தூத்துக்குடி அரசு மருத்துவர்( ராவணன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ஒருவர் ஆண்டு கணக்கில் ம...

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு

 ஷ்யாம் நீயூஸ் 01.06.2022 தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் மேலூர் ரயில்வே அதிகாரிகளுடன் கலந்தாய்வு       தூத்துக்குடி தென்னகரயில்வே மூலம் மேலூர் ரயில் நிலையத்தை புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை நடைபெற்று நடைமுறைக்கு வந்துள்ளது. மேற்படி மேலூர் ரயில்நிலையத்தில் கூடுதலாக நடைபாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தெற்கு ரயில்வே அலுவலரிடம் உழவர்சந்தை முன்பும் புதிய பேருந்து நிலையம் முன்பும் படிக்கட்டுகள் அமைத்திடவும், தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு இடத்தில் படிக்கட்டு அமைத்திடவும், மேலும் இரண்டு பிளாட்பிளாரங்களை இணைக்கும் வண்ணம் ரயில்வே நடைமேம்பாலம் அமைத்திடவும் கோரிக்கை வைத்துள்ளார். மேற்படி கோரிக்கையை உடனே செய்து தருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தெற்கு பகுதியில் கேவிகேநகர் உள்ள கீழமேல் சாலை மற்றும் தென்வடல் குறுக்குசாலைகள் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.      ஆய்...