முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒன் டைம் செட்டில்மென்ட் க்கு ஆசைபட்ட தூத்துக்குடி பிஷப் விரைவில் டிஸ்மிஸ்?

 ஷ்யாம் நீயூஸ் 

24.10.2021

ஒன் டைம் செட்டில்மென்ட்  க்கு ஆசைபட்ட தூத்துக்குடி  பிஷப் விரைவில் டிஸ்மிஸ்?



தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்து முடிந்ததில் DSF கிப்சன் அணி வெற்றி பெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக பதவியில்  இருந்த SDKஅணி தோல்வியை தழுவியது. தோல்வியை  ஏற்றுக்கொள்ள முடியாத SDK அணியினர் பேராயர்  SEC தேவசகாயத்தை கடத்தி வைத்து பழைய லெட்டர் பேர்டில் அறைகுறையாக தட்டச்சு செய்து தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிட செய்தனர்.இந்த அறிவிப்பை எதிர்த்து வெற்றி பெற்ற DSF அணியினர் தென்னிந்திய திருச்சபை  தலைமையகம்  சினாடிடம் முறையிட்டனர். சினாடு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் ரத்து என்று அறிவிக்க  பேராயருக்கு அதிகாரம் இல்லை என்றும், எனவே உடனே மறுப்பு அறிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடும்படி அறிவுறுத்தியது. மேலும் பேராயரை DSF அணியினர் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து வெற்றி பெற்ற அணியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் சினாடு அறிக்கையை  மதிக்காமல் பேராயர் தேவசகாயம்  நேற்று இரவு திருமண்டல தேர்தலில் தேல்வியுற்ற முன்னாள் லே செயலாளர் SDK ராஜனின் வெள்ளரிக்காய்  ஏற்றுமதி நிறுவனத்தில் வைத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் வரும் நவம்பர் 1ம் தேதி திருமண்டல தேர்தல் நடைபெறும் என்று சினாடு அறிக்கைக்கு எதிராக அறிவித்தார். இதுகுறித்து திருசபை நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது SDK ராஜன் அணியினர் தேவசகாயத்திற்கு ஒன் டைம் செட்டில்மென்ட் அதாவது அவரது ஓய்வுக்கு பின் கிடைக்கும் பணத்தை மொத்தமாக தருவதாக பேசியதை நம்பி சினாடுக்கு எதிராக அறிக்கை விட்டுள்ளார். சினாடுக்கு எதிராக செயல்படும் பிஷப்புக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்  என தெரிந்தே தேவசகாயம் செயல்பட்டுள்ளார். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதல் பேராயர்  J.A.D ஜெபசந்திரனும் சினாடை பகைத்ததால் தனது பதவி காலத்தை முழுமையாக முடிக்காமல் பாதியில் நடையை கட்டினார். அதே போன்று இரண்டாவது பேராயரான S.E.C தேவசகாயமும் சினாடுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் விரைவில் டிஸ்மிஸ் செய்யப்படுவார்  என்று எதிர்பார்க்கபடுகிறது.

புதிய பேராயர் வரும் வரை மாடரேட்டர்  கமிசரி அமைத்து வழக்கமான பணிகளை செயல்படுத்தபடும் என தெரிகிறது என்றும் தெரிவித்தனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...