முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமண ஆசை காட்டி தமிழக இளைஞர்களை ஏ மாற்றும் கேரள புரோக்கர்கள்!

  ஷ்யாம் நீயூஸ்

22.01.2021

திருமண ஆசை காட்டி தமிழக இளைஞர்களை ஏ மாற்றும் கேரள புரோக்கர்கள்!


இன்னைக்கு 30 வயதுக்குள் திருமணம் செய்து கொண்டால் அதுவே பெரிய சாதனை. அன்னைக்கெல்லாம் சம்பளம் முக்கியம் இல்ல, சொந்த வீடு கூட முக்கியம் இல்ல, பையன் நல்லா இருந்தா போதும், கண்ணை மூடிக்கொண்டு பெண்ணை கையில் ஒப்படைத்து விடுவார்கள். இன்னைக்கு சொத்து வேண்டுமாம், வருடத்திற்கு 5 இலட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்க வேண்டுமாம். எல்லாம் சரியாக இருந்தால், ஜாதகம் அக்யூரெட்டா பொருந்தி வரணுமாம். கட்டம் 7,8ல் எதிர்பார்த்த கிரக அமைப்பு இல்லை என்று சொல்லியே என் தோழியின் குடும்பம் நல்ல நல்ல வரன்களை எல்லாம் நிராகரித்துவிட்டனர்.

erode broker marriage

இப்படியே போனால், 35 வயதுக்குள்ளாவது கல்யாணமாகி விடுமா? என்ற ஏக்கத்தில், நம்ம பசங்க ஏங்கித்தவிக்கிறாங்க. கரெக்டா சூழ்நிலையை புரிந்து கொண்ட, மேட்ரிமோனி சைட்டுகள், கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பல ஆயிரம் கோடி புழங்கும் தொழிலாக மேட்ரிமோனி பிசினஸ் மாறியிருக்கிறது. தெருவுக்கு தெரு தடுக்கி விழுந்தால், ஒரு திருமண புரோக்கர் ஆபீஸ் முன்பு எந்திரிக்கலாம். அந்த அளவுக்கு திருமண புரோக்கர் பிசினஸ் பெருகிவிட்டது. 

erode broker marriage

இதிலும் மோசடி செய்யப்பார்க்கும் கும்பல், நம்ம ஊரில் பெண்கள் கிடைக்காவிட்டால் என்ன, உங்களுக்கு கேரளத்து பெண் குட்டியை லட்டு மாதிரி பார்த்து கட்டி வைக்கிறோம் என்று சொல்லி, லம்பா ஒரு தொகையை வாங்கிவிட்டு எஸ்கேப்பாகி விடுகின்றனர். எப்படியாவது மகனுக்கு திருமணமானால் போதுமென ஆசை ஆசையாக நம்பிச்செல்லும் மணமகனின் குடும்பத்துக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கேரளாவை சேர்ந்த இந்த புரோக்கர்கள், தங்களிடம் திருமண வயதில் பெண்கள் இருப்பதாக கூறி, இளைஞர்களை தங்கள் வசம் திருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

erode broker marriage

திருமணத்திற்கு புரோக்கர் கமிஷன் ஆக இரண்டு முதல் மூன்று லட்சங்கள் ஆகும் என கூறி சில இளம்பெண்களின் புகைப்படங்களை காட்டுகின்றனர். பிறகு அந்த பெண்களை நேரில் சென்று பார்க்க சில ஆயிரங்கள் வாங்கி கொண்டு கேரளா கூட்டி சென்று, முன்னதாக செட் அப் செய்து வைத்த குடும்பத்தையும் பெண்ணையும் காட்டுகின்றனர். அதன் பின்பு நிச்சயதார்த்தம் செய்வதாக கூறி கமிசனாக ஒரு லட்சம் வரை பணம் பறித்துக் கொண்டு தலைமறைவாக செல்கின்றனர். இதற்கு சில உள்ளூர் திருமண புரோகர்களும் உடந்தையாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் ஈமு கோழி மோசடியில் பெயர் பெற்ற ஈரோடு, இன்னைக்கு இப்படிப்பட்ட மோ சடியில் சிக்கித்தவிக்கிறது. இங்கிருந்தே மற்ற மாவட்டங்களுக்கு கும்பல் பரவ முயற்சிக்கும் என்பதால், யாராக இருந்தாலும் உஷாரா இருங்க. பணத்தை கையில் ஒப்படைப்பதற்கு முன்பு, தீவிரமாக விசாரணை செய்துகொள்ளவும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...