முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார் தூத்துக்குடி தி மு க எம் எல் ஏ கீதா ஜீவன் !

 ஷ்யாம் நியூஸ் 

24.12.2020

அதிமுகவை நிராகரிப்போம் பிரச்சார பயணத்தை தொடங்கினார்  தூத்துக்குடி தி. மு. க, எம் எல் ஏ கீதா ஜீவன் !


 

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் திமுகவின் பிரசார பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது.இதன்படி நேற்று மாலை தூத்துக்குடியில் விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கீதாஜீவன் எம்எல்ஏ தனது பிரசாரத்ததை தொடங்கினார். 


 தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி 7வார்டுகளில் பிரச்சார பயணம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் தூத்துக்குடி எம்.எல்.ஏயுமான கீதாஜீவன், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோவிலி தொண்டர்களோடு சுவாமி தரிசனம் செய்த பின்னர் பிரசாரத்தை தொடங்கினார். 

மேலும் அதிமுகவை நிராகரிப்போம் என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, கீதாஜீவன் எம்.எல்.ஏ., பேசியதாவது, கடந்த 10ஆண்டு காலமாக தூத்துக்குடி மாநகராட்சியில் எந்த பணிகளும் முறையாக நடக்கவில்லை. இதனால் மாநகராட்சியே சீர்குலைந்து போய் கிடக்கிறது. மாவட்டத்தில் மழை விட்டு பல நாட்களாகியும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் இன்னும் தேங்கி கிடந்து மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். 

இதுபோன்று மாநகரம் முழுவதும் தரமற்ற எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் சரியாக எரியாத காரணத்தினால் மாநகரம் முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்க பொதுமக்கள் தினம்தினம் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலையால் மாநகர மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு காணவேண்டுமெனில் திமுக ஆட்சி அமைந்திட வேண்டும். வரும் தேர்தலில் மக்கள் அனைவரும் அதிமுகவிற்கு சரியான பாடம் புகட்டிடவேண்டும். தூத்துக்குடி மட்டுமல்லாது தமிழகமே வளர்ச்சியுடன் மாற்றம் கண்டிட மக்கள் அனைவரும் எங்களுக்கு பேராதரவு தந்திடவேண்டும் என்றார். முன்னதாக 7வார்டில் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை கொடுத்து ஆதரவு திரட்டினர்.  

இதில், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், அவைத்தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர், மாநகர தொண்டரணி முருகஇசக்கி, மருத்துவர் அணி அமைப்பாளர் அருண்குமார், தகவல்தொழில்நுட்ப அணி அந்தோணி கண்ணன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...