முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி ஆர்ப்பாட்டம் !

ஷ்யாம் நியூஸ் 
22.12.2020

கேஸ் விலை உயர்வை கண்டித்து கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் !


தினமும் எகிறும் கேஸ் விலை உயர்வை கண்டித்து  தூத்துக்குடியில் நேற்று கனிமொழி எம்.பி தலைமையில் தி மு க மகளிர் அணி   ஆர்ப்பாட்டம் நடத்தினர் .கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிலிண்டருக்கு 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்தியரசு இதற்க்கு   தி மு க  தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கேஸ் விலை உயர்வை கண்டித்து  கோஷமிட்டனர் இதில் கலந்துகொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி கருணாநிதி பேசுகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கேஸ் விலையை 100 ரூபாய் உயர்த்தியுள்ளது மோடி அரசு இது  கொரானா காலத்தில்  வருமானம் இல்லாமல் இருக்கும் குடும்பங்களின் பெண்கள் தலையில் பெரும்  சுமையை ஏற்படுத்தி உள்ளது .உலக சந்தையில் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை குறைந்து  உள்ளது ஆனால் பிஜேபி அரசு விலையை குறைக்காமல் மக்களை வஞ்சித்து வருகிறது .இதையெல்லாம் தட்டி கேட்கவேண்டிய தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி , மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு தலையாட்டி  பொம்மையாக இருப்பதோடு இல்லாமல்  முதியோர் உதவி பணம்நிறுத்தம் ,நீட் தேர்வு ,வேலைவாய்ப்பு,விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை மசோதாக்கு ஆதரவு  என பல்வேறு  வழியில்  தமிழக உரிமைகளை பலிகொடுத்து வருகிறார் .பதவி இருந்தால் போதும் என்று  எடப்பாடி பழனிசாமியால் மத்திய அரசுக்கு  அடகு வைக்கப்பட்ட உரிமைகளை மீட்கவேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை .வரும் சட்டமன்ற  தேர்தலில் மக்கள் ஆதரவோடு திமுக வெற்றிபெறும் தலைவர் ஸ்டாலின் தலமையில் இழந்த நமது தமிழக உரிமைகள் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார் .ஆர்ப்பாட்டத்தில்  தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்  தூத்துக்குடி திமுக எம் எல் ஏ கீதா ஜீவன் ,தெற்கு மாவட்ட செயலாளர் திருச்செந்தூர் தொகுதி  எம் எல் ஏஅனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் தொகுதி எம் எல் ஏ சண்முகையா மற்றும் தி முக மகளிர் அணியினர் கலந்துகொண்டனர் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்?

 ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய  பணியாக செயல்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு  இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை  பெற்றுள்ளார் என்ற குற...

போலி வாரிசு சான்று வழங்கிய ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

 ஷ்யாம் நீயூஸ் 28.04.2025 போலி வாரிசு சான்று வழங்கிய  ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆனந்த் மீது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் ! தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருபவர் எம் .ஆனந்த். இவர் கடந்த 28 .1. 2025 அன்று வாரிசு சான்றிதழ் எண் டி என் : 72 02 50 11 31 261 என்ற வாரிசு சான்று வட்டாட்சியர் கையொப்பமிட்டு  வழங்கப்பட்டுள்ளது இந்த வாரிசு சான்று நாகஜோதி மற்றும் அனிதா ஆகியோர்கள் முத்தாரா என்பவரின் மகள்கள் என மோசடியாக பெற்றுள்ளார்கள் ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் ஆன்லைன் இணையதளத்தில் மேற்படி வாரிசு சான்று பெற்ற நபர்கள் அளித்த ஆவணத்தில் திருவைகுண்டம் வட்டம் ஸ்ரீ பரங்குசநல்லூர் கிராமம் மேல ஆழ்வார் தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்தார என்ற நபரின் மகள் என இவர்கள் இறப்புச் சான்றிதழை போலியாக தயாரித்து அரசின் கோபுரச் சீலை முத்திரை இட்டு அந்த போலி இறப்புச் சான்றிதழை வைத்து வாரிசு சான்று கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார்கள் மேற்படி வாரிசுதாரர்களாக காட்டிக்கொண்ட .நாகஜோதி அனிதா ஆகியோர்கள் அவர்களது முகவரியாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம்...

ஷ்யாம் நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை.

 ஷ்யாம் நியூஸ் 22.02.2025 ஷ்யாம்  நியூஸ் எதிரொலி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி ஊழல் ஓவர்சியர் முத்துராமன் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு! மற்றும் பணியிட மாற்றம். தூத்துக்குடி ஆட்சியர் துரித நடவடிக்கை. தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களில் பெரும் ஊழல் நடைபெறுவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.   கடந்த பத்து தினங்களுக்கு முன் ஷ்யாம் நியூஸ் செய்தியில் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்தி வெளிவந்தது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி ரோடு போடாமல் எம் புக் எழுதி பணம் எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை தனியார் பில்டிங் கான்ட்ராக்டர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் சரியான ஆவணங்கள் இல்லாமல் கையூட்டு பெற்றுக் கொண்டு அரசின் இலவச வீடுகளை தகுந்த ஆவணங்களை சரிபார்க்காமல்  தகுதி இல்லாதவர்களுக்கு ஒதுக்கபடுவதாகவும். ஆன்லைன் டெண்டர் மூலம் நடைபெறும் டெண்டர்களில் குறைந்த ஒப்பந்த விலை புள்ளி உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  பணிகளை வழ...